CATEGORIES
Kategorier
"சுயேச்சையாக போட்டியிடுவேன்"
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், ஜனாதிபதி தேர்தலில் தான் சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு நாமல் அறிவுரை
வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் கவனத்தில் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் எச்சரித்துள்ளார்.
“நலன்புரி திட்டங்களின் பயன் கிடைக்கவேண்டும்”
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை திறப்பில் மாற்றம்
குழப்பத்தை தீர்க்குமாறு செந்தில் தொண்டமானிடம் ஜெயசிறில் கோரிக்கை
விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்படுவதையும் தடுத்து கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் சந்திம எதிரிமான்ன பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை நீடிக்க செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.
சாரைப்பாம்பை உட்கொண்டவர் கைது
சாரைப்பாம்பு ஒன்றை அடித்துக் கொன்று, அந்த பாம்பின் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்து உட்கொண்ட சம்பவம் தொடர்பில், திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி 140 பேரை காணவில்லை
சோமாலியா மற்றும் சேர்ந்த எத்தியோப்பியாவைச் புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை காணவில்லை என்றும் புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.
இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: கனடாவை வென்ற பாகிஸ்தான்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின்நியூயோர்க்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற கனடா உடனான குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
“ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்படும்”
ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
“குடிநீரை குடித்தால் பேதி என்பது பீதி"
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநி யோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கனிய மணல் அகழ்வு குறித்து கூட்டத்தில் வாதப்பிரதி வாதம்
மன்னாரில் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி
"பொது வேட்பாளருக்கே எங்கள் ஆதரவு இருக்கும்”
அனுரவிடம் சித்தார்த்தன் எடுத்துரைப்பு
இதுவரை 9 டெங்கு மரணங்கள் பதிவு
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,891 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அறுந்த வயரில் மின்சாரத்தை பெற்ற மாணவி பலியானார்
தையல் இயந்திரத்தின் மோட்டாருடன் இணைக்கப்பட்ட வயரை அறுத்து, பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்பைப் பெற முற்பட்ட 17 வயதான பாடசாலை மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மைத்திரிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்ற பிரதான நீதவான் சந்துன் விதான புதன்கிழமை (12) நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
“என்ன சொன்னாலும் தேர்தல்கள் நடக்கும்”
யார் என்ன சொன்னாலும் உரிய நேரத்தில் எதிர்வரும் தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பயணத்தை மாற்றினால் “மீண்டும் வரிசை யுகம்"
ஜணாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை
துணை ஜனாதிபதி பலி
மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (Saulos ம Klaus Chilima) பயணித்த இராணுவ விமானம் விபத்துக்கு உள்ளானதில், அவர் பலியாகியுள்ளார்.
பங்களாதேஷை வென்ற தென்னாப்பிரிக்கா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நடைபெற்ற பங்களாதேஷ் உடனான குழு டி போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
இந்திராபுர மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியின் குறுக்கே அமைந்துள்ள புகையிரத பாதையில் பாதுகாப்பான கடவையில்லாமல் மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வருகின்றனர்.
உடைப்புக்கு கடும் எதிர்ப்பு
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
"அனைவரையும் 'அரகலய' சிந்திக்க தூண்டியுள்ளது”
ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி போன்ற நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டு தாக்கங்களின் பின்னர் ஜப்பான் எவ்வாறு அபிவிருத்தியில் முன்னிலைக்கு வந்ததோ இவ்வாறு இலங்கையில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் பின்னர் அமைச்சுக்களும் நிறுவனங்களும் அபிவிருத்திகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.
1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பாராட்டு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் மனுஷவுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.
நயினாதீவு- நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நயினாதீவு-நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளில் செவ்வாய்க்கிழமை(11) ஈடுபட்டார்.
கணினி கல்வியறிவு 39% ஆக அதிகரிப்பு
இலங்கையில் கணினி கல்வியறிவு 2023ஆம் ஆண்டில் 39% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் எம்.பியின் கார் மின்சார தூணில் மோதி விபத்து
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் அறிய கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்
அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் தெளிவாக, விபரமாக அறியக் கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவிடம் கூறினோம் என பாராளுமன்றம் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பதவிக்காலம், ஆயுட்காலத்தை நீடிக்க ஆராய்வு
குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவிக்காலம் மற்றும் பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"அனைத்துப் பிள்ளைகளும் ‘டியூஷன்' செல்வதில்லை”
இலங்கையில் பாடசாலைகளில் கற்கும் அனைத்து பிள்ளைகளும் பிரத்தியேக வகுப்புகளுக்கு (டியூஷன்) செல்வதில்லை.
வைரஸ் பரவும் அபாயம் அதிகரிப்பு
வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.