CATEGORIES
Kategorier
வாக்காளர் அட்டை தடையாக இருக்காது
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரூ.15 பில். பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட சுமார் 15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு வெடித்ததில் ஆறு பொலிஸார் காயம்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை திங்கட்கிழமை (09) பிற்பகல் வெடித்ததில் ஆறு பொலிஸார் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் திங்கட்கிழமை (09) முதல் ஆரம்பமாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுக்களை கண்காணிக்க போலாந்துக்கு விஜயம்
கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளனர்.
நட்டஈட்டை செலுத்தினார் பூஜித் ஜயசுந்தர
2019ஆம் ஆண்டும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்குச் செலுத்துமாறு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட 75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.
“மீனவர்களை மீட்க உறுதியான தூதரக முயற்சிகள் அவசியம்"
வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்
இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் சேவையில் மாற்றம்
தமிழ் நாட்டின் நாகபட்டிணத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு புதிய வழிகாட்டல்
விடுமுறை பெற்று வெளிநாடு சென்ற நிலையில், நாடு திரும்பும் அரச ஊழியர்களுக்கான புதிய வழிகாட்டல்களை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
நெல்லின் விலை உயர்வு
நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் நெல் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
“இனவாதத்தை விதைக்க முயற்சிக்க வேண்டாம்"
ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு சென்று தமிழ் மக்களை அச்சுறுத்தியதாகக் கூறுகிறார் |அரசியல் மேடையில் திரிபுபடுத்தி பொய் பிரசாரம் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும்
532 நாட்கள் விடுமுறை எடுத்ததால் - சர்ச்சையில் சிக்கிய பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்ததையடுத்து, இதுகுறித்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
செவ்வாய் கிரகத்தில் ஆளில்லா விண்கலம்
செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலம் எதிர்வரும் 2026இல் அனுப்பப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தை வெள்ளையடித்த அவுஸ்திரேலியா
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஸ்கொட்லாந்தை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தது.
தேசங்களுக்கான லீக்: மூன்று அணிகள் வென்றன
தேசங்களுக்கான லீக் தொடரில், 'அயர்லாந்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற அவ்வணியுடனான குழு எஃப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.
பசன் விஜேவர்தன நியமனம்
Sun Siyam ரிசோர்ட்ஸ், தனது Sun Siyam Pasikudah LDDMILD Sun Siyam Iru Fushi ஆகியவற்றின் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளராக பசன் விஜேவர்தனவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
கழிவறை குழியில் சிறுத்தை குட்டி மீட்பு
மஸ்கெலியா - பண்ணியன் தனியார் தோட்டத்தில் கழிவறை குழிக்குள் சிறுத்தை குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.
தங்க பிஸ்கெட்களுடன் ஒருவர் கைது
தங்க பிஸ்கெட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முனையத்தில் காத்திருந்த 29 வயதான விமானப் பயணி ஒருவரை விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு தேசிய விருதுகள்
உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் 'சர்வதேச நோயாளர் பாதுகாப்பு' தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு சனிக்கிழமை (7) கொழும்பில் இடம் பெற்றுள்ளது.
"மன்னிப்பு கேளுங்கள்"
ரணிலும் அனுரவும் மாறி, மாறி கோருகின்றனர்
ஓய்வெடுக்குமாறு அறிவுரை
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க சோர்வு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
“ரணில்-அனுர கள்ளத்தொடர்பு”
ரணில் விக்ரமசிங்கமும், அனுரகுமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள்.
“அனைத்து மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்காப்படும்"
அரசியலமைப்பின் பிரகாரம், இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான GRAD அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களுக்கு கடன் திட்டம்
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
'அர்த்தமுள்ள பிரஜைகள்' தேர்தல் விஞ்ஞாபனம்
மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜாவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் நுவரெலியா, வட்டகொட, மடகொம்பரை, புதுக்காடு தோட்டத்தின் ஐந்தாம் இலக்க லயன் அறையில் சனிக்கிழமை(07) வெளியிடப்பட்டது.
பிரசாரம் செய்யத் தடை
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
“புலிகளை விட மிக மோசமான வேலைகளை செய்தவர்கள்”
ஜே.வி.பி. என்பவர்கள் யார் என்பதை உங்களுடைய தாய், தந்தையர்களிடம் கேட்டுப் பாருங்கள் ஜேவிபி செய்த அட்டூழியங்களை அவர்கள் உங்களிடம் சொல்லுவார்கள் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
“தமிழரசுக் கட்சியின் முடிவு மக்களின் முடிவல்ல”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா தெரிவித்துள்ளார்.
நாமலின் கூட்டத்தில் விளையாட்டு துப்பாக்கி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் வெலிமடை நகரிலுள்ள இந்திராணி திரையரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
கருணை கொலை செய்யுமாறு முதியவர் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு, வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.