நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்
Kungumam Doctor|October 01, 2024
உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குப் போய் பார்ப்பது என்பது ஓர் அக்கறையான செயல்பாடு. பாதிக்கப்பட்டவர் விரைந்து நலமடைய வேண்டும் என்பதன் மீதான நமது விழைவையும் அவர் மீதான நமது அக்கறையையும் வெளிப்படுத்தும் பாங்கு அது. ஆனால், ஆர்வக்கோளாறினாலோ அறியாமையினாலோ மருத்துவமனைக்குப் போகும் சிலர் அவர்களின் எல்லை எது என்று தெரியாமல் நடந்துகொள்கிறார்கள். இது நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சகநோயாளிகளையும் அவர்கள் உறவினர்க ளையும் சங்கடப்படுத்தி முக சுளிக்கச் செய்துவிடும். நோயுற்றவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கோ வீட்டுக்கோ செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.
சரஸ்
நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்

1. நோய்த்தொற்றைத் தடுப்போம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். 'உடனே சென்று பார்க்காமல் விட்டால் தவறாக நினைத்துக் கொள்ளுவார்கள்' என்று நினைத்து கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது. ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அல்லது இரண்டு பேர் போனால் போதும். 13 வயதுக்குக் கீழ், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவமனை செல்வதைத் தவிர்க்கலாம். ஏனென்றால் இந்த வயதினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோயாளியை விசாரிக்கப் போகும் இடத்தில் இவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், சளி போன்ற பிரச்னை இருப்பவர்களும் தவிர்க்க வேண்டும். அட்டெண்டர், நோயாளி, நர்ஸ் ஆகியோருக்கும் நமது உடல்நலக் குறைவால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

மருத்துவமனை செல்லும்போது ஆல்கஹால் சேர்க்கப்பட்ட 'ஹேண்ட் ரப்' கொடுப்பார்கள். அதைக் கண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். நோயாளியைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போதும் 'ஹேண்ட் ரப்' பயன்படுத்த வேண்டும். சோப்பைக் கொண்டு கைகளைக் கழுவுவதால் 95 சதவிகிதக் கிருமிகள் அழிகின்றன. தீக்காயமடைந்தவர்கள், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்களைப் பார்க்கும்போது ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். நலம் விசாரிக்கச் செல்லும் இடத்தில் நம்மால் நோயாளிக்கு எந்தத் தொந்தரவும் வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

2. பூச்செண்டு வேண்டாம்!

உடல்நலமில்லாதவர்களைப் பார்க்கச் செல்லும்போது பூச்செண்டு கொடுப்பது நல்லதல்ல. பூச்செண்டில் இருக்கும் சிறு பூச்சிகள் நோயாளிக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். பூஞ்சைகள் நோய்த்தொற்றை உண்டாக்கலாம். சிலர் உணவு சமைத்து எடுத்துச் செல்வார்கள். கிட்னி மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் உப்பு, காரம், இனிப்பு குறைத்துப் பத்தியச் சாப்பாடு கொடுப்பார்கள். வீட்டில் சமைத்து எடுத்துச் செல்லும் உணவில் உப்பும் காரமும் அதிகமாக இருக்கும். அந்த உணவை நோயாளி சாப்பிடுவதால் அவர் குணமடையும் காலம் தள்ளிப்போகும். எனவே, வீட்டிலிருந்து கொண்டு செல்லும் உணவை நோயாளிக்குக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

3. உற்சாகமூட்டுங்கள்!

Denne historien er fra October 01, 2024-utgaven av Kungumam Doctor.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 01, 2024-utgaven av Kungumam Doctor.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KUNGUMAM DOCTORSe alt
பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!
Kungumam Doctor

பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!

ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை.

time-read
1 min  |
October 01, 2024
நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்
Kungumam Doctor

நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்

உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குப் போய் பார்ப்பது என்பது ஓர் அக்கறையான செயல்பாடு. பாதிக்கப்பட்டவர் விரைந்து நலமடைய வேண்டும் என்பதன் மீதான நமது விழைவையும் அவர் மீதான நமது அக்கறையையும் வெளிப்படுத்தும் பாங்கு அது. ஆனால், ஆர்வக்கோளாறினாலோ அறியாமையினாலோ மருத்துவமனைக்குப் போகும் சிலர் அவர்களின் எல்லை எது என்று தெரியாமல் நடந்துகொள்கிறார்கள். இது நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சகநோயாளிகளையும் அவர்கள் உறவினர்க ளையும் சங்கடப்படுத்தி முக சுளிக்கச் செய்துவிடும். நோயுற்றவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கோ வீட்டுக்கோ செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.

time-read
2 mins  |
October 01, 2024
மண்ணீரல் குறைபாடு...உஷார்!
Kungumam Doctor

மண்ணீரல் குறைபாடு...உஷார்!

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழ முடியும்.

time-read
2 mins  |
October 01, 2024
எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!
Kungumam Doctor

எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!

சமீபகாலமாக நான்கில் ஒரு ஆணும், சா இரண்டில் ஒரு பெண்ணும் எலும்பு வலிமை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்) பிரச்னையில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

time-read
3 mins  |
October 01, 2024
ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?
Kungumam Doctor

ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?

இன்றைய சூழலில், பலரும் பலவித உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

time-read
3 mins  |
October 01, 2024
நோய்...மருந்து.நோயாளி...ஒரு பார்வை!
Kungumam Doctor

நோய்...மருந்து.நோயாளி...ஒரு பார்வை!

காலநிலை மாறினால் உடலும், மனமும் மாறுமா”. என்று பல காரும் இன்றைக்கு \"மருத்துவர்களிடம் பொதுவான கேள்வியாக தொடர்ந்து கேட்கிறார்கள். வெகுஜன மக்களின் பார்வையிலேயே கூற வேண்டுமென்றால், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நம்முடைய இதிகாசங்களில் ஒரு நூலான மகாகவி காளிதாசர் அவர்கள் எழுதிய ரிது சம்ஹாரம் என்ற நூலில் நான்கு பருவ நிலைக்கு ஏற்ப மனிதர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று அந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது.

time-read
2 mins  |
October 01, 2024
ரேபீஸ் தவிர்ப்போம்!
Kungumam Doctor

ரேபீஸ் தவிர்ப்போம்!

சமீபகாலமாக தெருநாய்கள் மனி தர்களை கடிப்பது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் உண்மைநிலையை அறியும் வகை யில், விலங்குகள் ஆர்வலரும், ஸ்காட் லாந்து நாட்டில் அமைந்துள்ள எடின்

time-read
3 mins  |
October 01, 2024
ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்
Kungumam Doctor

ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்

இந்திய திரையுலகில் மிகவும் பிர பலமான நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர்.

time-read
2 mins  |
October 01, 2024
சத்தான சாத வகைகள்!
Kungumam Doctor

சத்தான சாத வகைகள்!

பச்சைப்பயிறை இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் தக் காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

time-read
1 min  |
October 01, 2024
ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!
Kungumam Doctor

ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!

அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.

time-read
1 min  |
October 01, 2024