CATEGORIES
Kategorier
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரதமருடன் சந்திப்பு|
உலகளாவிய சமாதானத் தூதுவர், ஆன்மீகத் தலைவர், வாழும் கலை மன்றத்தின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சனிக்கிழமை (18) சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
பாட்டியின் கண்ணை பதம்பார்த்த சன்னம்
கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் நபர் ஒருவரால் குரங்குகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வெளியேறிய சன்னம் 72 வயதுடைய பெண்ணொருவர் கண்ணில் பட்டதில், அப்பெண் பலத்த காயமடைந்து கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலம்பொட பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அறிவிப்பு
மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது
கனடா பிரதமர் அறிவிப்பு
*சக்தியை விட்டு யாரும் -வெளியேற மாட்டார்கள்"
திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு: ரூ.1,700 குறித்தும் கேள்வி
குடும்பத்தை கொன்று பணம், தங்கம் கொள்ளை
மாமா, தம்பி, சகோதரனை கொன்று பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டதாக நல்லா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
“கடைசி நேரத்திலேயே மக்கள் தீர்மானிப்பர்”
ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக முதலில் நடத்தப்படும் என்பதை அனுபவத்தில் அறிவேன் என்றும், எந்தக் கட்சிகளைச் சுற்றி மக்கள் திரண்டாலும், தேர்தலின் கடைசி நேரத்தில் நாட்டு மக்கள் தாம் விரும்பும் ஆட்சியாளரையும் ஜனாதிபதியையும் தீர்மானிப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எலோன் மஸ்க்கை சந்தித்தார் ஜனாதிபதி
இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வுடன் இணைந்து, இலங்கையில் Starlink சேவை வசதியை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலோன் மஸ் (Elon Musk) க்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.
மண்சரிவு அபாயம்
நாட்டில் உள்ள மாவட்டங்களில் 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் மூன்று சிறுவர்கள் கைது
திருப்பூரில், பீகார் மாநில தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய ராசா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு சிம்பாப்வேயின் அணித்தலைவர் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார்.
மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அப்பாவி தோட்ட மக்களை அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காகத் தோட்ட நிர்வாகம் உள்ளிட்ட வெளியார் தாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரத்தினபுரி நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கருகில் வியாழக்கிழமை (16) காலை 10.00 மணி முதல் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் - "மதுபான அனுமதி இரத்து"
சஜித் அறிவிப்பு; ஒன்றிணையுமாறு அழைப்பு
“ஆங்கில வினாத்தாள் இரத்து செய்யப்படாது"
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில மற்றும் விஞ்ஞான பாடங்களின் முறைகேடுகள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
கார் பந்தைய விபத்தில் சிறுமியும் மரணம்
தியத்தலாவ நர்யகந்தவில் ஏப்ரல் மாதம் 21 ம் திகதி இடம்பெற்ற ஃபோக்ஸ்ஹில் மோட்டார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுமி உயிரிழந்தார். இந்த துன்பியல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக (08) அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் இந்தோனேசியா பயணம்
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில், இந்தோனேசியாவில் மே 18 முதல் 20 வரை நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
"விரும்பியவாறு செய்ய முடியாது"
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனுக்களை இரத்து செய்வதை விரும்பியவாறு செய்ய முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
சஜித்-அனுர விவாத நாளன்று பொது விடுமுறை வழங்க கோருவேன்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பிக்கும் இடையிலான விவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நினைவுக் கஞ்சி
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளைத் தேடும் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றது.
மைத்திரிக்கு எதிராக இலஞ்ச வழக்கு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
மின்சாரக் கட்டண குறைப்புக்கு அவகாசம்
மின்சாரக் கட்டணக் குறைப்பு சதவீதம் எதிர்வரும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு மனு நிராகரிப்பு
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக நியமித்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிபதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை, கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான வியாழக்கிழமை (16) நிராகரித்துள்ளார்.
“தேயிலையை அழிக்காதே; கோப்பியை பயிரிடாதே”
உடரதல்ல தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஐ.பி.எல்: லக்னோவை வென்ற டெல்லி
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
யாழில் தம்பதி கைது
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு, போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
100 மில்லிமீற்றர் மழை பெய்யும்
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மழையுடனான வானிலை மேலும் தொடருமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சு.கவின் பதில் தவிசாளருக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பதில் பிரதான செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரை புதன்கிழமை (15) நீடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வங்கியில் வைப்பிலிட்ட ரூ.13 இலட்சம் மாயம்
குவைட்டில் இரண்டு வருடங்களாக பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு அரச வங்கியில் வைப்பிலிட்ட சுமார் 1,344, 000 (பதின்மூன்று இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்) ரூபாய் பணம் மாயமான சம்பவம் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உரிய வங்கிக்கணக்கில் இடம்பெற்றுள்ளது.
சா/த பரீட்சை நிறைவடைந்தது
2023/2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள், மே. 6ஆம் திகதி ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமை (12) தவிர்த்து, கடந்த 9 நாட்கள் நடைபெற்றன. இறுதி பரீட்சை, புதன்கிழமை (15) நடைபெற்றது.
சிசுவை விட்டுச்சென்ற மாணவி மாட்டினார்
யாழ். போதனா வைத்தியசாலையில் சனிக்கிழமை (11) சிசுவைப் பிரசவித்த பின்னர், சிசுவை வைத்தியசாலையிலேயே கைவிட்டுச் சென்ற பாடசாலை மாணவியான 15 வயது சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.