CATEGORIES
Kategorier
9 பேர் மரணம்
கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில், 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 15 பேர் மரணமடைந்துள்ளனர்.
துருக்கி நாட்டு ஜனாதிபதி ஆவேசம்
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஐ.நா. அமைப்பை துருக்கி நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏழாமிடத்துக்கு முன்னேறிய பட்லர்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்துக்கு இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் முன்னேறியுள்ளார்.
ஜூன் முதலாம் திகதி இறுதிக்கட்ட தேர்தல்
இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதமர் நாற்காலியில் அமரப் போவது யார் என்பது குறித்து மக்கள் தீர்ப்பு எழுதி வருகின்றனர்.
மயங்கி விழுந்த சிறுவன் மரணம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய சிறுவன் புதன்கிழமை (29) உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எமது கட்சிக்கு யாரும் அரசியல் பாடம் எடுக்க தேவையில்லை"
ஜனநாயகத்தின் தாயகமே ஐக்கிய தேசியக் கட்சிதான். எனவே, ஜனநாயகம் பற்றி எமது கட்சிக்கு யாரும் அரசியல் பாடம் எடுக்க தேவையில்லை.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மாற்றத்துக்கு விரிவான திட்டம்
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பல்கலைக்கழக ஊழியர்களை பணிக்குத் திரும்ப பணிப்பு
நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணித்துள்ளார்.
சுழிபுரத்தில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்
சுழிபுரம் - திருவடிநிலை காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து வியாழக்கிழமை (30) கைவிடப்பட்டது.
தேயிலை, கோப்பி பிரச்சினை தீவிரம்
களத்துக்குச் சென்றார் ஜீவன்
“அடாவடியில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை”
யாழ். போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இனி வரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
புகைத்தலால் 50 பேர் மரணம்
நமது நாட்டில் புகைத்தல் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
“கார்த்திகை மலர் பொறித்த பாதணிகளை மீளப் பெறவும்”
கார்த்திகை மலர் மிதிபடும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாகவே உள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
"2,321 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்”
பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு ஆகக் குறைந்த பட்சம் நாளொன்று 2,321 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் கலாநிதி எஸ். விஜயச்சந்திரன் தெரிவித்தார்.
நீர் மின் உற்பத்தி 60% அதிகரிப்பு
தற்போது பெய்து வரும் கடும் மழையால் நீர் மின் உற்பத்தி சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
காணி அளவீடு செய்வது நிறுத்தம்
ஸ்ரீதரன் முன்மொழிந்தார்; அங்கஜன் வழிமொழிந்தார் | படைத் தரப்பினரும் பங்கேற்று இருந்தனர்
அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் சீருடை அறிமுகம்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக் குட்பட்ட மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டுக்கான சீருடை அறிமுக நிகழ்வுவானது கடந்த வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.
பயிற்சிப் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்ற இலங்கை
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் செவ்வாய்க்கிழமை(28) நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்றது.
பார ஊர்தி குடைசாய்ந்ததில் சாரதிக்கு காயம்
திருகோணமலை- கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 86ஆம் மைல் கட்டை பகுதியில் பார ஊர்தியொன்று குடைசாய்ந்ததில் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் “எதிர்காலத்தில் நடக்கும்”
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மரப்பெட்டி விழுந்து இளைஞன் மரணம்
மரப்பெட்டி விழுந்ததில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம்
காலநிலை தொடர்பான அவசரகால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்துவதே எமது அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் முதன்மையான விடயமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
மைத்திரிக்கு எதிரான தடை மீண்டும் நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ISIS கைது விவகாரம்: விரிவுரையாளர் பிணையில் விடுவிப்பு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான புன்சர அமரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்ப ட்டுள்ளார்.
ரத்நாயக்கவை சந்தித்தார் ஜூலி
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க்(Julie Chung), தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை சந்தித்துள்ளார்.
ஒத்திவைக்கும் கோரிக்கைக்கு எதிர்ப்பு
ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய குடியரசு முன்னணி தெரிவித்துள்ளது.
சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறையும்
சூறாவளியின் தாக்கம் வியாழக்கிழமை (30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இருநாளும் பாடசாலை
பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கல்வியமைச்சினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இரு பிள்ளைகளை தலைகீழாக தொங்க விட்ட 'முக்கோண' தாய்
மட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 11 வயதான சிறுவனை மரமொன்றில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு, கம்பால் அடித்து சித்திரவதை செய்ததுடன், இரண்டரை வயது ஆண் பிள்ளையைத் தொங்கவிட்டு, அடித்துத் துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவ்விரு பிள்ளைகளின் தாயாரான 28 வயதுடைய பெண், செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
லித்துவேனியா தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அமோக வெற்றி
லித்துவேனியா நாட்டின் ஜனாதிபதியாக கிடானஸ் நவுசேடா உள்ளார்.