எந்த நீதி மன்றத்திற்குச் சென்றாலும் தெரிந்தவர் ஒருவர் எதிர்ப்படுவார். என்னுடன் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீதிமன்றத்திற்கு வந்த சக மருத்துவர் ஒருவர், எல்லா கோர்ட்லயும் ஆள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க! அது எப்படி? என்று கேட்டார்.
நீதிமன்றங்கள் மட்டுமல்ல, எந்த ஊர் அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் அங்கு சங்கரன்கோவில் காரர் ஒருவராவது இருப்பார். இத்தனை அரசுத்துறைகள் இருக்கின்றன என்பதை இவர்களைப் பார்த்த பிறகு தான் எனக்குத் தெரியும்.
ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களை உருவாக்கும் ஊராக எங்கள் ஊர் இருக்கிறது. இங்குள்ள சிறு மருத்துவமனைகளில் உதவியாளர்களாகப் பணிபுரியும் பெண்கள், என்னிடம் நோயாளிகளாக வருபவர்கள், மளிகைக் கடைகள் மற்றும் ஜவுளி கடைகளில் பணிபுரிபவர்கள் இப்படிப் பலரும் அரசுப் பணிகளுக்காக பயிற்சி யெடுத்து வருகிறார்கள். மற்ற ஊர்களில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு எந்தக் கல்லூரியில் சேரலாம் என்று யோசிப்பவர்களைத் தான் பார்த்திருக்கிறேன். இங்கு நிறைய பேர் கல்லூரியைப் பற்றி நினைப்பதே இல்லை.
பள்ளி முடித்தவுடன் நேராக தட்டச்சு, சுருக்கெழுத்து வகுப்புகளில் சேர்ந்து விடுகிறார்கள். அப்படியே டிஎன்பிஎஸ்சி கோச்சிங்கிலும் இணைகிறார்கள்.
இன்றைக்கும் கோவிலுக்குச் சென்றால் அங்கே பிரகாரத்தில் ஓரமாக அமர்ந்து ஒரு மாணவன் சுருக்கெழுத்து எழுதிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பூங்காக்கள், ரயில் நிலையங்கள் என்று எங்கு பார்த்தாலும் அடுத்த மாதம் வரும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிலர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பெரும்பாலானோர் வறுமை கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள். ஒற்றை அறை தான் அவர்களது வீடு. வீட்டில் அமர்ந்து படிக்க இடம் இருக்காது.
Denne historien er fra May 29, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 29, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
விருப்பமும் திணிப்பும்!
அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
உன்னை நானறிவேன்,
“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
அண்மையில் ஆங்கிலேயர் ஒருவர் சென்னை நகர வீதியில் நின்று, கடைப்பெயார்ப் பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின் முதன்மை மொழி தமிழ். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி.
ரகு தாத்தா
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் நாயகி, தன் திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல் வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
திங்கலான்
தன் இன மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்பதற்காக போராடும் நாயகன், கோலார் தங்க வயலைத் தேடி செல்லும் பயணம் தான் படத்தின் கதை.
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.