இஸ்ரேலுக்கும், காஸாவில் ஆட்சி செலுத்திவரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த மாதம் போா் தொடங்கிய பிறகு, அந்தச் சண்டையில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவிப்பதற்காக ஆன்டனி பிளிங்கன் அந்த நாட்டுக்கு அக். 12-ஆம் தேதி வந்தாா்.
இந்த நிலையில், போா் தொடங்கி ஏறத்தாழ 4 வாரங்கள் கழிந்த நிலையில், இஸ்ரேலுக்கு பிளிங்கன் மீண்டும் வெள்ளிக்கிழமை வந்தாா்.
இந்த முறை, காஸாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அங்கு போா் நிறுத்தத்தை அறிவிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவா் நேரில் வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து டெல் அவீவ் நகரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஹமாஸுடனான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா முழுமையாக மதிக்கிறது.
இருந்தாலும், காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகவும், அவசரமாகவும் உள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாம் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
காஸாவுக்குத் தேவைப்படும் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அங்கு இடைக்கால போா் நிறுத்தம் அவசியமாக உள்ளது. இது தொடா்பாக பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவாா்த்தை நடத்தினேன் என்றாா் பிளிங்கன்.
ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.
அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.
This story is from the November 04, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 04, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.