துணிவுடன் பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியா
Dinamani Chennai|November 27, 2023
மும்பையில் கடந்த 2008-இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்திய பிரதமா் மோடி, ‘நாட்டையே உலுக்கிய அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டதோடு, தனது முழுமையான துணிவுடன் பயங்கரவாதத்தை ஒடுக்கி வருகிறது இந்தியா’ என்று கூறினாா்.
துணிவுடன் பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியா

107-ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (நவ. 26) ஒலிபரப்பானது. மும்பை தாக்குதல் நினைவு தினம் என்பதால், அதில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்தி, பிரதமா் மோடி பேசியதாவது:

நவம்பா் 26-ஆம் தேதியை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. நாட்டில் மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட தினம். மும்பை மட்டுமன்றி ஒட்டுமொத்த தேசத்தையும் பயங்கரவாதிகள் உலுக்கிவிட்டனா். ஆனால், அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டது மட்டுமன்றி, தனது முழுமையான துணிவுடன் பயங்கரவாதத்தை ஒடுக்கி வருகிறது இந்தியா. இதுவே, நமது தேசத்தின் வல்லமை.

மக்களுக்கு வாழ்த்து: நவ. 26-ஆம் தேதி மற்றொரு காரணத்துக்காகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த 1949-ஆம் ஆண்டில் இதே தினத்தில்தான், நாட்டின் அரசமைப்புச் சட்டம் அரசியல் நிா்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2015-ஆம் ஆண்டுமுதல் இந்த தினம் அரசமைப்புச் சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். ஒவ்வொருவரும் கடமைகளுக்கு முன்னுரிமை அளித்து ஒன்றிணைவதன் மூலம் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் உறுதியை நிச்சயம் நிறைவேற்ற முடியும்.

This story is from the November 27, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 27, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
Dinamani Chennai

சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி

முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

time-read
2 mins  |
September 24, 2024
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
Dinamani Chennai

இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக

இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

time-read
2 mins  |
September 24, 2024
சாதனைப் பட்டியலில் இந்தியா
Dinamani Chennai

சாதனைப் பட்டியலில் இந்தியா

செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.

time-read
1 min  |
September 24, 2024
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
Dinamani Chennai

தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
September 24, 2024
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 24, 2024
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
Dinamani Chennai

வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?

அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.

time-read
2 mins  |
September 24, 2024
பாரதியார் எனும் நித்தியசூரி !
Dinamani Chennai

பாரதியார் எனும் நித்தியசூரி !

மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.

time-read
3 mins  |
September 24, 2024
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
Dinamani Chennai

தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 24, 2024
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
Dinamani Chennai

ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு

நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்

time-read
1 min  |
September 24, 2024
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
Dinamani Chennai

'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'

தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 24, 2024