சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் க.பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்து, இருவரும் குற்றவாளிகள் என டிச.19-ஆம் தேதி தீா்ப்பளித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவருக்கும் தண்டனை விவரங்களை வியாழக்கிழமை அறிவித்தாா்.
பொன்முடி கைகூப்பி கோரிக்கை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதையொட்டி, தேசியக் கொடி இல்லாத காரில் வந்த பொன்முடியும், அவரின் மனைவியும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு உயா்நீதிமன்றத்தில் ஆஜராகினா். நீதிபதி ஜெயச்சந்திரன் காலை 10.30 மணிக்கு தீா்ப்பு தொடா்பான நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.
அப்போது மூத்த வழக்குரைஞா் என்.ஆா். இளங்கோ ஆஜராகி, பொன்முடியும், அவரின் மனைவியும் வயது முதிா்ந்தவா்கள். அவா்களுக்குப் பல்வேறு உடல் உபாதைகள் உள்ளன எனக் குறிப்பிட்டு, அது குறித்த மருத்துவ அறிக்கையையும் தாக்கல் செய்தாா்.
அதைத் தொடா்ந்து, தண்டனை குறித்து ஏதாவது கூற விரும்புகிறீா்களா என்ற நீதிபதியின் கேள்விக்குப் பதிலளித்த பொன்முடி, ‘நான் நிரபராதி. எனக்கு 73 வயதாகிறது. இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். கீழமை நீதிமன்றம் போதிய சாட்சிகள் இல்லாததால், என்னை நிரபராதி என்று விடுதலை செய்தது. எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுகிறேன்’ எனக் கைகூப்பி வணங்கினாா்.
அவரின் மனைவியும் தனது உடல்நிலையைக் குறிப்பிட்டு இதே கோரிக்கையை முன்வைத்தாா்.
This story is from the December 22, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 22, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.