கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
Kanaiyazhi|August 2024
"சகாதேவா நீ செய்தது சரியா?" என்றார் கிருஷ்ணர்.
பா.ஆசைத்தம்பி
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்

"பகவானே நான் என்ன தவறு செய்தேன்? எனது மனதறிந்து எந்த தவறுமே செய்யவில்லையே...

"அப்படியா சகாதேவா!!! பின் எப்படி நடந்தது குருஷேத்திர போருக்கு துரியோதனனுக்கு நாள் குறித்த செயல்?"

"துரியோதனன் யாரென்று தெரியாதா உனக்கு? அவன் எவ்வளவு துரோகி என்பதை இன்றுவரையிலும் தெரியவில்லையா உனக்கு. அவனால் எத்தனை ஆண்டுகள் எவ்வளவு வேதனைகள் நீங்கள் அனைவரும் அனுபவித்தீர்கள்? இவ்வளவு வேதனைகளை அனுபவித்திருந்தும் துரியோதனனைப் பற்றி உனக்கு எதுவுமே தெரியாதா சகாதேவா? இல்லை உனக்கு மேல் யாருமே இல்லையென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?

பாண்டவர்களின் கடைசி மகன் நீதான். உன்னைவிட நான்கு பேர் முன்னரே பிறந்துவிட்டார்கள் உனக்கு அண்ணன்களாக... தெரியுமா சகாதேவா?

அறிவு அதிகமாக இருந்தால் உலகத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் உனக்கு தெரிந்துவிடுமா... இல்லை அறிவை வைத்து மற்ற எல்லோரையும் வெற்றிகொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?

மறுபடியும் கேட்கிறேன் ஏன் அப்படி செய்தாய் சகாதேவா?"

''பகவானே... உங்களுக்கு தெரியாத எதுவும் இந்த உலகத்தில் நடக்கவே முடியாது.

துரியோதனனுக்கு நான் உதவியது தவறாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

பகவானே நான் என்ன செய்வது? எனக்கு ஜோதிடம் பார்த்து சொல்ல தெரியும், அதனால் என்னை நெருங்கி யார் கேட்டாலும் ஜோதிடம் பார்த்து சொல்வதுதான் எனது நிலைப்பாடே.

இப்படித்தான் துரியோதனன் என்னை நெருங்கி குருஷேத்திர போரை எந்த நாளில் தொடங்கலாம் என்று ஜோதிடம் பார்த்து சொல்லுமாறு சகுனியோடு வந்து கேட்டுக்கொண்டான்.

எனக்கே துரியோதனனைப் பார்த்தவுடன் அதிசயமாகத்தான் இருந்தது. நான் பிறந்த நாள் முதல் இன்றுவரை எங்களுக்கு சதி செய்துகொண்டிருக்கும் ஒருவன் என்னை நெருங்கி போர் எந்த நாளில் தொடங்கலாம் என்று கேட்கும்போது எதிரியாக இருந்தாலும் அவனுக்கு சொல்லியே ஆக வேண்டும். ஒருவன் ஜோதிடம் தெரிந்த அறிவாளியாக இருந்தால் எப்படிபட்ட விரோதியும் அவனை நோக்கி வருவார்கள் என்று நினைத்தே எனக்குள் சிரித்துக்கொண்டேன்."

'அப்படியா சகாதேவா? உனக்கு ஜோதிடம் பார்க்க தெரிந்தால் எந்த துரோகிக்கும் ஜோதிடம் பார்ப்பாயா...?' "

Bu hikaye Kanaiyazhi dergisinin August 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kanaiyazhi dergisinin August 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KANAIYAZHI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
யமுனா
Kanaiyazhi

யமுனா

\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.

time-read
2 dak  |
August 2024
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
Kanaiyazhi

வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு

நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.

time-read
4 dak  |
August 2024
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
Kanaiyazhi

துஷ்டி வீட்டுக்குப் போனவன்

\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம்‌ உண்டாகக்‌ கேட்டேன்‌; அது கர்த்தருக்குள்‌ மரிக்கிறவர்கள்‌ இது முதல்‌ பாக்கியவான்சள்‌ என்றெழுத;:

time-read
7 dak  |
August 2024
பாண்டியன் சித்தப்பா
Kanaiyazhi

பாண்டியன் சித்தப்பா

அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

time-read
10+ dak  |
August 2024
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
Kanaiyazhi

தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!

கர்ணனின்‌ கவச குண்டலத்தைப்‌ போல்‌, இவனுடன்‌ ஒட்டிப்‌ பிறந்ததாய்‌ ஆகிவிட்டது இவன்‌ தாடி!

time-read
7 dak  |
August 2024
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
Kanaiyazhi

திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்

மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக்‌ இளையைப்‌ பரப்பி நிற்பவர்‌ முனைவர்‌. யாழ்‌.எஸ்‌. இராகவன்‌ அவர்கள்‌.

time-read
1 min  |
August 2024
டீக்கறை
Kanaiyazhi

டீக்கறை

இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம்‌ கொடு! போண்டா டீ பார்சல்‌, நாலு தோசை பார்சல்‌ இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம்‌ கேட்டுள்ளார்‌.

time-read
7 dak  |
August 2024
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
Kanaiyazhi

தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா

2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

time-read
10+ dak  |
August 2024
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
Kanaiyazhi

கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்

\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.

time-read
4 dak  |
August 2024
பிரபஞ்சக் கனவு
Kanaiyazhi

பிரபஞ்சக் கனவு

திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

time-read
2 dak  |
February 2024