
இவனை அடையாளப்படுத்த, எவருக்கும் எவிதில் கைவருகிற ஒரு கைகாட்டி அது! திருமணத்தில், மனசும் மனசும் கலந்த காதலியைக் கைப்பிடித்து, அவருடன் இவன் மாலை மாற்றிக்கொண்டதும் தாடியுடன்தான்! அம்மா மறைந்தபோதுகூட, தலையை/நீண்ட தாடியைச் சிரைக்கச் சங்கடப்பட்டு மழிக்காததால், பிண்டம் போடும் சடங்கிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவன். எத்தனைப் பெரிய நிகழ்ச்சியாயிருந்தாலும்கூட, தாடியைத் தவிர்த்துவிட்டு இவன் மட்டும் முகங்காட்டப் போனதே இல்லை. தாடியுடன் இருப்பதென்பது இவனுக்கு என்றும் சிரமமாயிருந்ததில்லை. தாடி இப்படி வளர்ந்தால் தாடையில் அரிப்பெடுக்காதா எனும் மற்றவர்களின் அச்சம் ஒரு சிறு மயிரளவுகூட இவனிடம் வாலாட்டியதில்லை. இவனது தாடியைப் பார்த்துப் பெரியாரைப் பிடிக்குமோ என்று கேட்டு ஒதுங்கியவர்களும் உண்டு; உறவு கொண்டவர்களும் உண்டு; அவர் மாதிரியே இருக்கிறதென்று சான்றிதழ் வழங்கியவர்களும் உண்டு. ஆனால் இதெல்லாம் இவனே சம்பாதித்து இவன் காலில் நிற்கத் தொடங்கிய பிறகுதான்! இவன் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கையில்கூட, இவனைத் தன் மகனாகப் பார்த்துக்கொண்ட இவனின் பேராசிரியர்தான் சொன்னார்*இண்டர்வியூவிற்குப் போம்போது ஷேவ் பண்ணிட்டு கொஞ்சம் டீசெண்ட்டா போப்பா'. தாடிக்கு அப்பொழுது ஒருமுறை இவன் இரங்கற்பா பாடியது நடந்தது. இப்பொழுதெல்லாம் அதற்கெந்தக் குந்தகமும் வந்ததில்லை-வரவிட்டதுமில்லை! தாடியின் மயிர்க்கால்களில் இவனது மானம் உயிருரமாய் உறைந்திருப்பதாய்க் கருதினான்.
Bu hikaye Kanaiyazhi dergisinin August 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanaiyazhi dergisinin August 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

யமுனா
\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.

வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.

துஷ்டி வீட்டுக்குப் போனவன்
\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்சள் என்றெழுத;:

பாண்டியன் சித்தப்பா
அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
கர்ணனின் கவச குண்டலத்தைப் போல், இவனுடன் ஒட்டிப் பிறந்ததாய் ஆகிவிட்டது இவன் தாடி!

திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக் இளையைப் பரப்பி நிற்பவர் முனைவர். யாழ்.எஸ். இராகவன் அவர்கள்.

டீக்கறை
இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம் கொடு! போண்டா டீ பார்சல், நாலு தோசை பார்சல் இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம் கேட்டுள்ளார்.

தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.

பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.