Denemek ALTIN - Özgür
பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருந்தாலும் விஜய், சீமானுக்காக கூட்டணிக் கதவை திறந்து வைத்திருக்கும் அ.தி.மு.க.!
Malai Murasu
|April 01, 2025
அரசியல் களத்தில் உலாவரும் பரபரப்பு தகவல்கள்!!
-

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல்கட்சிகள் இப்போதே கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சி யான அ.தி.மு.க., பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் அதே வேளையில், நடிகர் விஜய்யின் த.வெ.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்காகவும் கூட்டணிக் கதவுகளை திறந்தே வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டும் போது தான் எந்த கட்சிகள் கூட்டணியில் இணையும் என்பது தெரிய வரும்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் தி.மு.க. கடந்த தேர்தல்களில் அடைந்துள்ள தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து தனது வலுவான கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.
அதே சமயம், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.-வில் பிளவு ஏற்பட்ட பிறகு, அதன் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்து கொண்டே இருக்கிறது. கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தோல்வி கண்ட அ.தி.மு.க. கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய போதும் தோல்வியையே சந்தித்தது.
இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே தி.மு.க.-வை எதிர்கொள்ள முடியும் என்ற கட்டாயத்தில் அ.தி.மு.க. உள்ளது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைப்பதை உறுதி செய்த அமித் ஷா, உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
Bu hikaye Malai Murasu dergisinin April 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Malai Murasu'den DAHA FAZLA HİKAYE
Malai Murasu Chennai
துப்பு துலக்க மனிதனின் மூச்சுக் காற்று!
மனிதர்களின் தனித்தன்மையை அறிந்து கொள்வதற்கும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்கும் விரல்ரேகைப் பதிவுகளும், விழித்திரை, கருவிழிப்பதிவுகளும் முக்கியப்பங்காற்றுகின்றன. உலகில் வாழும் மனிதர்களில், ஒருவரின் கைரேகை மற்றொருவருக்குப் பொருந்தாது. இதற்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் கைரேகைகளும் சரி, இனிமேல் பிறக்கப் போகிற குழந்தைகளின் கைரேகைகளும் சரி ஒன்றுக்கொன்று பொருந்தாது. கைரேகைகள்தான் மனிதனின் தனித்துவத்தை அடையாளம் காட்டும் கருவியாக இன்றளவும் உள்ளது. 'கைரேகை என்பது இறைவன் மனிதர்களுக்கு அளித்த முத்திரை' என வர்ணிக்கின்றனர் தடயவியல் நிபுணர்கள்.
1 mins
August 09, 2025
Malai Murasu Chennai
கொளத்தூர் தனியார் மருத்துவமனையில் ஓவியர் சங்கத் தலைவர் தவறான சிகிச்சையால் மரணம்?
போலீசில் உறவினர்கள் புகார்; மருத்துவமனை முன் சாலை மறியல் !!
1 min
August 09, 2025
Malai Murasu Chennai
வீட்டில் கேமரா, குளியலறையில் மைக்: சந்தேகம் பிடித்த கணவனிடம் இருந்து மனைவிக்கு விவாகரத்து! மாதம் ரூ.1 லட்சம் ஜீவனாம்சம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு !!
வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களைபொருத்திய துடன், பாத்ரூமில் ரகசிய மைக்வைத்துமனைவியை கண்காணித்து வந்த கண வனை அகமதாபாத்நீதிமன் றம் கடுமையாக சாடியது. சந்தேகப் பேர்வழியான அந்தகணவனிடம் இருந்து மனைவிக்கு விவாகரத்து அளித்த நீதிமன்றம் மாதந் தோறும் ரூ.1 லட்சம் ஜீவ னாம்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 mins
August 09, 2025
Malai Murasu Chennai
சட்டசபை தேர்தலை குறிவைத்து புதிய நலத்திட்டங்கள் மூலம் அதிரடி காட்டும் தி.மு.க. அரசு!
சட்டசபைத் தேர்தலைக் குறிவைத்து புதிய நலத் திட் டங்களை அறிமுகப்படுத்தி தி.மு.க. அரசு அதிரடி காட் டுவதாக அரசியல் நிபுணர் கள் கருத்து தெரிவிக்கின்ற னர்.
1 mins
August 09, 2025
Malai Murasu Chennai
குன்றத்தூரில் பயங்கரம்: மண் வெட்டியால் வெட்டி கட்டடத் தொழிலாளி படுகொலை!
மர்மமான முறையில் இறந்தவர் அடையாளம் தெரிந்தது !!
1 min
August 09, 2025
Malai Murasu Chennai
சென்னையில் 12 - ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!
சென்னையில் (12.08.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1 min
August 09, 2025
Malai Murasu Chennai
வண்டாரப்பேட்டையில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது!
சென்னை வண்ணாரப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பைக்திருடிய 2 வாலிபரைபோலீசார்கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
1 min
August 09, 2025

Malai Murasu Chennai
அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் கடந்த ஆண்டைவிட இவ்வருடம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும்!
வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி !!
1 min
August 09, 2025
Malai Murasu Chennai
ஆண்டுக்கு 2 லட்சம் இந்தியர்கள் குடியுரிமை துறக்கின்றனர் !
இந்திய குடியுரிமையை கைவிட்டுவெளிநாட்டுகுடி யுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகி றது என்றும் கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரி மையை கைவிட்டதாக மத் திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
August 09, 2025

Malai Murasu Chennai
சி.பா. ஆதித்தனார் தந்த தருமர் இராமச்சந்திர ஆதித்தனார்
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவப் பேராசான், தான் அளித்த திருக்குறளில் தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நல்லது பற்றியும், மகன் தந்தைக்கு ஆற்றவேண்டிய உதவி பற்றியும் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுவார்.
3 mins
August 09, 2025