பாண்டியன் சித்தப்பா
Kanaiyazhi|August 2024
அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.
தி.பழனிவேல்
பாண்டியன் சித்தப்பா

முதலில் அவர் எங்களுக்குச் சித்தப்பா என்றே தெரியாது. அப்பா எப்போதும்போல வழியில்‌ பரிதாபமாக நின்றுகொண்டிருந்த யாரையோதான்‌ வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்‌ என்று நினைத்துக்கொண்டிருந்தோம்‌. அப்பாவுக்கு அப்படியொரு பழக்கம்‌ இளகிய மனதும்‌ கூட.

அம்மா இதற்கு நேர்‌ எதிர்‌. யாரையாவது அப்பா அழைத்துக்கொண்டு வந்துவிட்டால்‌, "இன்னும்‌ சின்னவன்‌ சாப்பிடல நா சாப்பிடணும்‌" என்று சிடுசிடுக்கத்‌ தொடங்கிவிடுவாள்‌, முகம்‌ சிறுத்துவிடும்‌.

"கொஞ்சம்‌ போல போட்டு வடியேன்‌" அப்பாவின்‌ குரல்‌ கெஞ்சலாகத்‌ தணிந்துவிடும்‌.

அப்பா யாரை அழைத்துக்கொண்டு வந்தாலும்‌ முதலில்‌ அவருக்கு குடிக்க சொம்பில்‌ தண்ணீர்‌ கொடுத்துவிட்டு தட்டுமுட்டு சாமான்கள்‌ போட்டு வைத்திருக்கும்‌ கொட்டகைக்கு அழைத்துச்‌ சென்று அங்கு கிடக்கும்‌ மரப்பெஞ்சில்‌ உட்கார வைத்துவிட்டு வருவார்‌.

வந்தவருக்கு சாப்பாடு போட அப்பாவே தோட்டத்திற்கு போய்‌ வாழை இலை அறுத்துக்கொண்டு வந்து, அவரே நின்று சாப்பாடு பரிமாறுவார்‌. வந்தவர்‌ சாப்பிட்டு முடித்தவுடன்‌ அதே பெஞ்சில்‌ படுக்கச்‌ சொல்லி தலைக்கரை கட்டை ஒன்றையும்‌ கொடுத்துவிட்டு வருவார்‌.

வந்தவர்‌ பசியாறிய மயக்கத்தில்‌ தலை சாய்த்து கால்நீட்டி படுத்திருக்கையில்‌ அப்பா சாப்பிட்டு முடித்து பல்லை குத்திக்கொண்டே ஒரு நாற்காலியைத்‌ தூக்கிக்கொண்டு போய்‌ கொட்டகை வாசலுக்கு முன்னே போட்டுக்கொண்டு ஒரு செருமலுடன்‌, "நம்பி வயல்ல மாட்டு யாவாரி தெத்துப்‌ பல்லு சாம்ப சிவத்த தெரியுமாண்ணே" என்று ஆரம்பிப்பார்‌. வரும்‌ வழியிலேயே அவருடைய ஊர்‌, பெயரெல்லாம்‌ விசாரித்திருப்பார்‌. சாப்பாடை போட்டுவிட்டு மற்ற விசாரணையெல்லாம்‌ தொடங்கும்‌.

هذه القصة مأخوذة من طبعة August 2024 من Kanaiyazhi.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة August 2024 من Kanaiyazhi.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من KANAIYAZHI مشاهدة الكل
யமுனா
Kanaiyazhi

யமுனா

\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.

time-read
2 mins  |
August 2024
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
Kanaiyazhi

வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு

நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.

time-read
4 mins  |
August 2024
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
Kanaiyazhi

துஷ்டி வீட்டுக்குப் போனவன்

\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம்‌ உண்டாகக்‌ கேட்டேன்‌; அது கர்த்தருக்குள்‌ மரிக்கிறவர்கள்‌ இது முதல்‌ பாக்கியவான்சள்‌ என்றெழுத;:

time-read
7 mins  |
August 2024
பாண்டியன் சித்தப்பா
Kanaiyazhi

பாண்டியன் சித்தப்பா

அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

time-read
10+ mins  |
August 2024
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
Kanaiyazhi

தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!

கர்ணனின்‌ கவச குண்டலத்தைப்‌ போல்‌, இவனுடன்‌ ஒட்டிப்‌ பிறந்ததாய்‌ ஆகிவிட்டது இவன்‌ தாடி!

time-read
7 mins  |
August 2024
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
Kanaiyazhi

திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்

மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக்‌ இளையைப்‌ பரப்பி நிற்பவர்‌ முனைவர்‌. யாழ்‌.எஸ்‌. இராகவன்‌ அவர்கள்‌.

time-read
1 min  |
August 2024
டீக்கறை
Kanaiyazhi

டீக்கறை

இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம்‌ கொடு! போண்டா டீ பார்சல்‌, நாலு தோசை பார்சல்‌ இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம்‌ கேட்டுள்ளார்‌.

time-read
7 mins  |
August 2024
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
Kanaiyazhi

தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா

2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

time-read
10+ mins  |
August 2024
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
Kanaiyazhi

கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்

\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.

time-read
4 mins  |
August 2024
பிரபஞ்சக் கனவு
Kanaiyazhi

பிரபஞ்சக் கனவு

திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

time-read
2 mins  |
February 2024