CATEGORIES
ஐந்து மாதங்களுக்கு முழு கொண்டைக் கடலை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் தொகுப்பில், பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்னத் திட்டத்தின் கீழ் ஜூலை முதல் நவம்பர் வரை ஐந்து மாதங்களுக்கு முழு கொண்டைக் கடலை இலவசமாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பந்தல் காய்கறிகள் மழையால் மகசூல் அதிகரிக்கும்
ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், பருவமழை பெய்வதால், பந்தல் காய்கறிகள் சாகுபடி பரப்பு அதிகரிக்குமென விவசாயிகள் தெரிவித்தனர்.
தக்காளி, மரவள்ளிக்கு காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அழைப்பு
தக்காளி, மரவள்ளி சாகுபடிக்கு, பயிர் காப்பீடு மேற்கொள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்து உள்ளது.
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை
திருமயம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டப் பணிகள் மற்றும் கட்டுமான பணிகளை புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட அதிகம்
தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்
காணை மற்றும் வெங்கந்தூர் கிராமத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பருவமழையால் நிலக்கடலை சாகுபடி களைகட்டும் விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள்
பருவமழையால் நிலக்கடலை சாகுபடி, இந்த சீசனில் களை கட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மல்லிகையில் மொக்கு புழு தடுக்க ஆலோசனை
மல்லிகையில் உள்ள மொக்கு புழு என்ற பூக்கும் காம்பிக்கும் இடையில் இருக்கும் சிறிய வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறத்தில் உள்ள புழு இவ்வகையான தாக்கத்தினை தமிழகமெங்கும் உள்ள மல்லிகைச் செடியில் ஏற்படுத்தி வருகிறது.
நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்த்தப்படுமா?
விவசாயிகளிடம் இருந்து, வரும் சீசனில் நெல் கொள்முதல் செய்ய, ஊக்கத் தொகை உயர்த்துவது தொடர்பாக, தமிழக அரசிடம், நுகர்பொருள் வாணிப கழகம் அனுமதி கேட்க முடிவு செய்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதல்
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.
வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இரவில் வட மாநிலங்களில் தீவிரம்
வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில தினங்களில் இரவு நேரங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வானூர் வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு மானியம்
வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
மழை முன்னெச்சரிக்கை பணிக்கு திட்ட மதிப்பீடு தயார்?
வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட நீர்வழித்தடங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள, பொதுப்பணித் துறை தயாராகி வருகிறது.
தெலங்கானாவில் 36 லட்சம் டன் காய்கறி உற்பத்தி இலக்கு நிர்ணயம்
வரும் 2020-21ம் ஆண்டில் 36 லட்சம் டன் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா மாநில தோட்டக்கலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இந்த மாதம், 31 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
கரோனா தடையால் கொல்லிமலை மிளகு விலை சரிவு
கொல்லிமலையில் மிளகு உற்பத்தி அதிகரிப்பு, கரோனா தொற்று காரணமாக வாரசந்தைகள் கூடாததால், அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.
விலையில்லாததால் பருத்தியை எரித்து போராட்டம்
நாகை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், ஆச்சாள்புரம், கொண்டல், வள்ளுவர்குடி, அகணி, கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, தென்னலக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கோடை பயிராக பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மிளகாய்க்கு விலையில்லை விவசாயிகள் கவலை
மடத்துக்குளம் பகுதியில், எதிர்பார்த்த விலையில்லாததால், மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மீன் விற்பனைக்கு மாற்று இடம் ஆட்சியர் நடவடிக்கை
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க, அதே பகுதியில் மீன் விற்பனைக்கு மாற்று இடத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கு பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தென்மேற்கு பருவமழை ஜூன் 1ல் துவங்கியதில் இருந்து நீர்வரத்து அதிகபட்சமாக ஜூலை 4ல் வினாடிக்கு 311 கன அடியாக இருந்தது.
அலங்காநல்லூரில் விரைவில் கரும்பு அரவை தொடங்கும்
அலங்காநல்லூரில் விரைவில் கரும்பு அரவையை தொடங்குவதென தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கடலையில் விளைச்சல் அதிகரிக்க ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்
நிலக்கடலை எண்ணெய் வித்துப்பயிர்களின் அரசன் மற்றும் ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகின்றது. எண்ணெய்- வித்துப் பயிர்களில் நிலக்கடலை ஒரு முக்கியமான பயிராகும். நிலக்கடலையில் 47 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை எண்ணெய் சத்தும் 26 சதவீதம் புரதச்சத்தும் உள்ளது.
இந்தியாவில் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் சரிவு
பொது முடக்கத்தின் எதிரொலியாக நாட்டின் தேயிலை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 54 சதவீதம் சரிவடைந்துள்ளது.
மேற்கு, மத்திய, கிழக்கு இந்தியப் பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு, மத்திய மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வாழைத்தார் விலை சரிவால் கோவையில் விவசாயிகள் கவலை
கோவை மாவட்டத்தில் தென்னை, பாக்கு, சின்னவெங்காயம், மஞ்சள், வாழை உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது. வாழையை பொறுத்தமட்டில் தொண்டாமுத்தூர், பேரூர், காரமடை, துடியலூர், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வாழைத்தார் மண்டிக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஜூலையிலும் இலவச ரேசன் பொருள்கள் முதல்வர் பழனிசாமி உத்தரவு
தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கும் ரேசன் பொருள்களை இலவசமாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார்.
ஒரே நாளில் 73 உர அடுக்குகளை எடுத்துச் சென்று மத்திய உர அமைச்சகம் சாதனை
ஜூன் 30, 2020 அன்று ஒரே நாளில் 73 உர அடுக்குகளை எடுத்துச் சென்று மத்திய உர அமைச்சகம் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.