CATEGORIES
திருமழிசையில் குப்பையில் கொட்டப்படும் காய்கறிகள் சேமிப்பு கிடங்கு இல்லாததால் வியாபாரிகள் வேதனை
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் காய்கறிகளை வாங்க ஆட்கள் இல்லாமல், தினமும் டன் கணக்கான காய் கறிகள் குப்பையில் கொட்டப்படுகின்றன.
தென்மேற்குப் பருவமழை நகர்வு நிலைமை சாதகமாக மாற வாய்ப்பு
தென்மேற்குப் பருவமழையின் நகர்வு நிலைமை சாதகமாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இராமநாதபுரத்தில் 2ம் போக நெல் விளைச்சல்
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்தும் விவசாயம் பொய்த்து போவது வழக்கம்.
நிலக்கடலையில் புரோடினியா புழுவைக் கட்டுப்படுத்த வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்திரை மற்றும் வைகாசிப் பட்டத்தில் விதைக்கப் பட்ட நிலக்கடலைப் பயிரில் தற்பொழுது புரோடினியா புழுவின் தாக்குதல் ஆங்காங்கு தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்திடக் கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்துப் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
பருவமழையில்லாததால் விதைப்பு பணிக்கு காத்திருக்கும் விவசாயிகள்
தென்மேற்கு பருவ மழை 3 வாரங்களுக்கும் மேலாக இல்லாத காரணத்தால், விதைப்பு பணிகளுக்காக காத்திருக்கும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வரும் அக்டோபர் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்
அமைச்சர் காமராஜ் தகவல்
வெளிமாநிலங்களுக்கு போக்குவரத்து தடையால் உப்பு ஏற்றுமதி பாதிப்பு
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம், ஒரு வாரத்தில், நான்கு அடி சரிந்தது.
இயற்கை ரப்பர் இறக்குமதிக்கு தடை தோட்ட அதிபர்கள் கோரிக்கை
உள்நாட்டு ரப்பர் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இயற்கை ரப்பர் இறக்குமதிக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை தடை விதிக்க வேண்டும் என தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
1,300 டன் உரம் வருகை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக கடந்த 12ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 15ந் தேதி பிற்பகல் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு கல்லணை வந்தடைந்தது.
பூசணிக்காய்க்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை
பூசணிக்காய்க்கு விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வரத்து அதிகரிப்பால் நேந்திரன் விலை சரிவு
நேந்திரன் வாழை வரத்து அதிகரித்ததையடுத்து அதன் விலை, கிலோவுக்கு, ரூ.15 சரிந்துள்ளது.
விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமயம் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் தெளிப்பு நீர் மற்றும் மழை தூவான் பாசனக்கருவிகள் அமைக்கப்பட்ட குலமங்கலம், மேலபனையூர் மற்றும் விராச்சிலை ஆகிய கிராமங்களில் கருவிகள் செயல்படும் விதங்கள் குறித்து ஆய்வுகள் மேற் கொண்டார்.
பெரியாறு அணையில் சாரல் மழை நீர்மட்டம் உயரவில்லை
பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இருந்தபோதிலும் நீர்மட்டம் உயரவில்லை.
சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய விவசாயிகளுக்கு, சொட்டு நீர் பாசனம் அமைக்க வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
ஊரடங்கால் அதிகளவில் களவில் மிளகு தேக்கம்
ஊரடங்கு தடை காரணமாக, மிளகு தேக்கமடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விலை சரிவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சொட்டுநீர் பாசன வசதியில் தமிழகம் முதலிடம்
இந்தியாவில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 242 எக்டேரில் சொட்டு நீர் பாசன வசதி செய்து தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை முன்னேற்றம்
புதுதில்லியில் உள்ள, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: தென்மேற்கு பருவமழை, மேற்கு மத்தியப்பிரதேசத்தின் மேலும் பல பகுதிகள், கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் மேலும் பல பகுதிகளில் முன்னேறியுள்ளது.
தென்னையில் ஊடுபயிராக மரவள்ளி : விவசாயிகள் ஆர்வம்
கிணற்றுப் பாசனத்துக்கும், தென்னையில் ஊடுபயிராகவும், மரவள்ளி பயிரிட உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 1 அடி குறைந்தது
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை திகழ்கிறது. டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ந் தேதி தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடிக்காக ஜனவரி மாதம் 28ந் தேதி வரை சுமார் 330 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்படும்.
நெல் கொள்முதலில் புதிய சாதனை படைப்போம் அமைச்சர் காமராஜ் தகவல்
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக எட்டாண்டுகளுக்குப் பின் குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மாங்காய் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை
திருப்பூர் மாவட்டத்தில் ஜல்லிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் விளைகின்ற செந்தூரம், நீலம், மல் கோவா, பங்கனபள்ளி உள்ளிட்ட உயர்ரக, ஒட்டுரக மாம்பழங்கள் சுவை மிகுந்தவை. ஆண்டுக்கு ஒரு முறையே மகசூல் தரக்கூடிய இவ்வகை மாம்பழங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ஆனைமலையில் ரூ.26.15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.26.15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 டன் காய்கறி சார்ஜாவுக்கு ஏற்றுமதி
கோவை மாவட்டத்திலிருந்து சர்ஜாவுக்கு 19 டன் காய்கறி ஏற்றுமதி செய்யப்பட்டது.
விளைச்சல் இருந்தும் சோளத்திற்கு விலையில்லை விவசாயிகள் கவலை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, சேடபட்டி பகுதியில் சோளப்பயிர்களை சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.
திருமயம் வட்டாரத்தில் மண்வள அட்டை மாதிரி சேகரிப்பு தீவிரம்
திருமயம் வட்டாரத்தில் மண்வள அட்டை மாதிரி சேகரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் கொப்பரை உலர்களம் இடம் மாற்றம்
தென்மேற்கு பருவமழையால், பொள்ளாச்சி, நெகமம் பகுதியில் செயல்பட்ட, கொப்பரை உற்பத்தி களங்கள் காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் ஊத்துக்குளி பகுதிக்கு இட மாற்றம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் காய்கறிகள் விற்பனை தோட்டக்கலைத் துறை துவங்குமா?
நான்கு மாவட்டங்களில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், காய்கறிகள், பழங்கள் விற்பனையை, மீண்டும் தோட்டக்கலை துறையினர் துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை முன்னேற்றம்
தென்மேற்குப் பருவமழை மேற்கு மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகள், கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் பல பகுதிகளில் மேலும் முன்னேறி உள்ளது.