CATEGORIES
தக்காளி விலை கடும் உயர்வு
தக்காளி விலை பெட்டி ஒன்றுக்கு ரூ.50லிருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு
டெல்டா மாவட்டங்களில் காணப்படும் வெட்டுக்கிளிகள் தொடர்பாக, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
அவிநாசியில் பருத்தி விலை சரிவால் விவசாயிகள் கவலை
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இருப்பு வைக்கப்பட்டிருந்த பருத்தி, ஏல விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
நத்தம் பகுதியில் களைகட்டிய மாங்காய் சீசன் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சாணார்பட்டி வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் மாம்பழங்களுக்கு கூடுதல் விலை கிடைத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வண்டுகள் படையெடுப்பு வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளை நிலங்களில், இரவில் வண்டுகள் படையெடுப்பதால், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு இல்லை
தமிழக வேளாண் துறை இயக்குனர் தகவல்
தர்மபுரியில் தக்காளி விலை உயர்வு
அரூர் பகுதியில், தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மஞ்சள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
மஞ்சளின் வரத்து அதிகரித்த நிலையில், குவிண்டாலுக்கு, ரூ.1,000 விலை சரிந்துள்ளது.
தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறப்பு
கேஆர்பி அணைக்கு தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கார் சாகுபடி பணிகள் தொடக்கம்
தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சாரலுடன் காற்று வீசி வருகிறது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பருத்தி ரூ.40 லட்சத்துக்கு ஏலம்
ஊரடங்கு தளர்வால் கடந்த 2 மாதங்களுக்குப் பின் திங்கட்கிழமை முதல் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் மைதானத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
வாரச்சந்தையில்லாததால் கால்நடை விற்பனையில் நஷ்டம்
விவசாயிகள் கவலை
வேளாண் விளைபொருட்கள் ரூ.67.77 லட்சத்திற்கு வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த 1,374 விளை பொருள் மூட்டைகள் ரூ.67.77 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டது.
வயல்களுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் சங்கரன்கோவில் விவசாயிகள் அச்சம்
பாலைவன வெட்டுக்களிகள் என்றழைக்கப்படும் வெளிநாட்டு வெட்டுக்கிளிகள் இந்தியாவில் மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை சேதப்படுத்தியது.
கேரளாவில் ஏலக்காய் ஏலம் ரத்து
ஊரடங்கு தொடர்வதாலும், போக்குவரத்து தடை போன்ற காரணங்களால் ஏலக்காய் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
பலத்த காற்று, மழையால் வாழை சேதம் அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக வாழை சேதமடைந்துள்ளதால் அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வத்தல் குவிண்டாலுக்கு மீண்டும் ரூ.1,500 சரிவு
விற்பனை சரிவு மற்றும் ஏற்றுமதி இல்லாததால் வத்தல் குவிண்டாலுக்கு ரூ.1,500 வரை குறைந்துள்ளது. வட மாநிலங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பால், வரும் வாரங்களில் பருப்பு, பயறு விலை உயருமா என்ற எதிர்பார்ப்பும் வணிகர்களிடையே நிலவுகிறது.
நாவல் பழ சீசன் சீசன் துவங்கியது
அரசு கொள்முதல் நிலையம் அமைக்க அலங்காநல்லூர் விவசாயிகள் கோரிக்கை
பருவமழைக்கு காத்திருக்கும் பெரியாறு பாசன விவசாயிகள்
தென்மேற்கு பருவமழையால் இரு போக நெல் விவசாயம் செய்ய வாய்ப்பு உருவாகுமா என பெரியாறு பாசன விவசாயிகள் காத்துள்ளனர்.
கேரளாவில் துவங்கிய தென்மேற்கு பருவமழையால் தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை நேற்று கேரளாவில் துவங்கியது.
பருவமழை மீட்பு பணிகளுக்காக குழுக்கள் அமைப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை தாங்கி, தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
மல்லிகை பூ கிலோ ரூ.200க்கு விற்பனை விவசாயிகள் வேதனை
திண்டுக்கல், அறிஞர் அண்ணா பூ மார்க்கெட்டிற்கு வெள்ளோடு, நரசிங்கபுரம், சின்னாளப்பட்டி, செட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மல்லிகை, முல்லை, கனகாம்பரம், செவ் வந்தி, அரளி, சம்பங்கி, ரோஜாப் பூக்கள் நாளொன்றுக்கு 40 டன் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். இவை, இங்கிருந்து திருச்சி, கோவை, புதுக்கோட்டை, சீர்காழி, சிதம்பரம், சென்னை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா மாநிலங் களுக்கு விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள்.
வாழைக்கு முட்டுக்கொடுத்து காப்பாற்ற வேளாண் பல்கலைக்கழகம் அறிவுரை
தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் பலத்த காற்றும் மழை பெய்கிறது. அதனால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், வாழைக்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம், விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாலைவன வெட்டுக்கிளிகள் வரவில்லை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் உறுதி
நீலகிரி மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என ஆய்விற்கு பின் கோவை வேளாண் பல்லைக்கழக பூச்சியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ராஜஸ்தான், ம.பி. மாநிலங்களில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
தென் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு குறைவு
தேயிலை உற்பத்தியில் மந்த நிலை ஏற்படும்: எஃப்ஏஐடிடிஏ
இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் நடப்பு நிதியாண்டில் மந்த நிலை ஏற்படும் என்று அகில இந்திய தேயிலை வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏஐடிடிஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வட இந்தியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்
வட இந்தியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பு அலைக்கு இடையே, பாதிக்கப்பட்ட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளன.
வங்கக்கடல், அரபிக்கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வானிலை மையம் அறிவிப்பு
வைக்கோல் கட்டு ரூ.250க்கு விற்பனை
ஆனைமலை பகுதிகளில் வைக்கோல் தேவையால், பல இடங்களில் இருந்து வைக்கோல் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பு
வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லி மருந்து ட்ரோன் மூலம் தெளிக்கப்படுகிறது.