CATEGORIES
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
ஈரோட்டில் தக்காளியின் வரத்து அதிகரிப்பால் விலை சரிவை சந்தித்துள்ளது.
முட்டை விலை ரூ.4.20 ஆக நீடிப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து ரூ.4.20ஆக நீடிக்கிறது.
மஞ்சள் சந்தையை திறக்கக் கோரிக்கை
ஈரோடு மஞ்சள் சந்தையை திறக்க வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கச் செயலாளர் செ.நல்லசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாய் உற்பத்தி முடக்கத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு
ஊரடங்கு அமலில் இருப்பதால் கோரம் பாய் உற்பத்தி முடங்கி உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பாய்கள் தேக்கமடைந்து தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொப்பரை ரூ.19.28 லட்சத்திற்கு விற்பனை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் வழக்கம் போல செயல்படும் என திருப்பூர் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளர் ஆ.பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
திராட்சைக்கு விலையில்லை விவசாயிகள் கவலை
திண்டுக்கல்லில் விளைச்சல் இருந்தும், விலை கிடைக்காமல் திராட்சை விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தேயிலைத் தூள்கள் கொச்சிக்கு அனுப்பி வைப்பு
வால்பாறை பகுதி தொழிற்சாலைகளில் இருந்து தேயிலைத் தூள்கள் கேரள மாநிலம், கொச்சிக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
கத்திரிக்காய் விலை சரிவு
ஊரடங்கால் வியாபாரம் முடங்கிப் போய் கத்திரிக்காய் விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஊரடங்கால் ஆடுகளுக்கு தீவனமாகும் செண்டு மல்லி பூக்கள்
கரோனா தடுப்பின் காரணமாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செந் துறை பகுதி விவசாயிகள் கூறினர். எனவே தமிழக அரசு இழப்பீடு வழங்கி உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு தானியங்கள் 13.4 லட்சம் டன் கையிருப்பு உள்ளது
இந்திய உணவு கழக கிடங்குகளில், 13.4 லட்சம் டன், உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளது என, இந்திய உணவு கழகத்தின், தெற்கு மண்டல செயல் இயக்குனர், நஸிம் தெரிவித்துள்ளார்.
வாழைக்கு உரிய விலையில்லாததால் விவசாயிகள் கவலை
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் பயிரிட்டுள்ள வாழைக்கு உரிய விலையின்றி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வாரம் இருமுறை வாழைத்தார் ஏலம்
அளுக்குளியில் வாழைத்தார்கள் ஏலம் விடப்படுவதைத் தொடர்ந்து அந்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பார்வையிட்டார்.
முலாம்பழம் விலை சரிவு
பழக்கடைகளில் விற்கபனை செய்யப்பட்ட முலாம்பழம், ஊரடங்கால் சாலையோரத்தில், வாகனத்தில் குவித்து பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிப்பால் விவசாயிகள் கவலை
ஆனைமலை பகுதியில், வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சின்ன வெங்காயத்துக்கு விலையில்லை விவசாயிகள் கவலை
ஏற்றுமதி வாய்ப்பு மற்றும் மொத்த வியாபாரிகள் வருகையின்றி, சின்னவெங்காயத்துக்கு விலை கிடைக்கவில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கோடை மழையை பயன்படுத்தி தரிசு நிலங்களை உழவு செய்யவும்
வேளாண் அறிவியல் மையம் வேண்டுகோள்
கிர்ணி பழங்கள் வயலில் அழுகி வீணாகும் அவலம்
தலை உத்தரவால் வயல்களிலேயே கிர்ணி பழங்கள் அழுகி வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பண்ருட்டி பலா குறைந்த விலைக்கு விற்பனை
கள்ளக்குறிச்சியில் பண்ருட்டி பலாப்பழம் வண்டிகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேவாரத்தில் ஆடு, மாடுகளுக்கு உணவாகும் தக்காளி
தேவாரம், சின்னமனூர் தினசரி மார்க்கெட்டுகள் தடை உத்திரவினால் மூடப்பட்ட நிலையில், பறிக்கப்படும் தக்காளிகளை வாங்க ஆட்களில்லாததால், குப்பையில் கொட்டப்படுகின்றன.
செவ்வந்திப் பூக்கள் செடியில் வாடுவதால் விவசாயிகள் கவலை
ஊரடங்கால் பொன்னமராவதி பகுதியில் செவ்வந்தி பூக்கள் செடிகளிலேயே வாடுகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பருவமழை இயல்பான அளவில் இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவனந்தபுரத்தில் ஜூன் 1ல் பருவமழை தொடங்கும்
குண்டுமல்லி கொள்முதலால் விவசாயிகள் மகிழ்ச்சி
பனமரத்துப்பட்டியில் விளையும் குண்டுமல்லி, வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
செடிகளிலேயே வெடித்து வீணாகும் பருத்தி
விவசாயிகள் கவலை
கோயம்பேட்டில் பீன்ஸ் விலை சரிவு
வரத்து அதிகரிப்பால், பீன்ஸ் விலை குறைந்துள்ளது.
செடியிலேயே வாடும் அரளிப் பூக்கள்
சத்தியமங்கலம் பகுதியில் விற்பனையின்றி அரளிப் பூக்கள் செடியிலேயே வாடுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக கடலூர் ஸ்ரீ வள்ளி விலாஸ் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக கடலூர் ஸ்ரீ வள்ளி விலாஸ் சார்பில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முட்டை விலை ரூ.4.20 கறிக்கோழி விலை ரூ.102
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.20ஆகவும், கறிக்கோழி கிலோ ரூ.10 2 ஆக அதிகரித்துள்ளது.
சாலையில் எறியப்பட்ட தக்காளி
கோவை புறநகரில் விளைவித்த தக்காளிகளை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாததால், அழுகி வீணானது.
கறிக்கோழி விற்பனை உயர்வால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
அரசின் நடவடிக்கையால், விற்பனை அதிகரித்துள்ளதாக, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
மழையால் நெல் பயிர்கள் சேதம்
கடம்பத்தூர் ஒன்றியத்தில், பெய்த கோடை மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது.