CATEGORIES
கோவை மாவட்டத்தில் திடீர் மழை
கோவை, மார்ச் 21| தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர் விடுமுறையால் காய்கறி விலை உயர்வு
திருப்பூர், மார்ச் 21| உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என தினமும், 700 டன் வரை காய் கறிகள் வரத்து வருகிறது.
கொய்மலருக்கு விலையில்லை விவசாயிகள் பாதிப்பு
ஊட்டி, மார்ச் 21| கொய்மலர் வாங்க ஆட்கள் இல்லாததால், விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவால் தேயிலைத் தூள் தேக்கம்
கோவை, மார்ச் 21| கரோனாவால் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைத் தூள்கள் தேக்க மடைந்துள்ளன.
கரோனாவால் மதுரையில் பூ வியாபாரம் சரிவு
மதுரை, மார்ச் 20 கரோனாவால் மதுரை மாட்டுத்தாவணி பூச்சந்தையில் பூ வியாபாரம் 85 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் வளாக நெல், மலர் மற்றும் இடுபொருள்கள் வியாபாரிகள் சங்கச் செயலர் ராமசந்திரன் தெரிவித்தார்.
காபியில் வெள்ளை தண்டுத் துளைப்பான் நோய் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட ஆலோசனை
திண்டுக்கல், மார்ச் 20 காபியில் வெள்ளை தண்டுத்துளைப்பான் நோயை கட்டுப்படுத்தலாம் என தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் பாபு ஆலோசனை வழங்கி உள்ளார்.
சிறுமலையில் மிளகு சீசன் துவங்கியது
திண்டுக்கல், மார்ச் 20 திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் மிளகு சீசன் துவங்கியதால், வரத்து அதிகரித்து ஒரு கிலோ ரூ.292 விற்பனையாகிறது.
தர்ப்பூசணி விற்பனை அமோகம்
பெரம்பலூர், மார்ச் 20 வெயிலின் தாக்கத்தைத் தணிக்க குளிர்ச்சியூட்டும் பழங்களான தர்பூசணி, முழாம் உள்ளிட்ட பழ வகைகளும், இளநீரும் சாலையோரங்களில் குவிக்கப் பட்டுள்ளதால், அதன் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
தென்னைக்கு சுண்ணாம்பு அடிப்பதன் மூலம் கரையான் தடுக்கலாம்
திருப்பூர், மார்ச் 20 தென்னை மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பதின் மூலம் கரையான் அரிப்பதை தடுக்கலாம் என வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
பருத்தி ரூ.25 லட்சத்துக்கு ஏலம்
திருப்பூர், மார்ச் 20 அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பருத்தி ரூ.25 லட்சத்துக்கு விற்பனையானது.
முட்டைகளை குளிர்பதனக் கிடங்குகளில் தேக்கி வைக்க மானியம்
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தகவல்
கேரளாவில் ஏலக்காய் ஏலம் துவங்கியது
தேனி, மார்ச் 19 கரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஏலக்காய் ஏலம், புதன்கிழமை கேரள மாநிலம் புத்தடியில் மீண்டும் துவங்கியது.
சிப்ஸ் தயாரிக்க பயன்படும் வாழை பயிரிட விவசாயிகள் ஆர்வம்
தேனி, மார்ச் 19 கரோனா அச்சத்தால் சின்னமனூர் நேந்திரம் வாழை விலை சரிவடைந்தும், அதே நேரம் நஷ்டமில்லாததால் விவசாயிகள் பலரும் இதனை பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர்.
மக்காச்சோள விலை சரிவால் விவசாயிகள் கவலை
திருப்பூர், மார்ச் 19 மடத்துக்குளம் பகுதியில், மக்காச்சோளம் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொப்பரை ரூ.9.26 லட்சத்துக்கு விற்பனை
திருப்பூர், மார்ச் 19 ரூ.9.26 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை கூடத்தில் நடந்தது.
மீன்களின் விலை இரு மடங்கு உயர்வு
இராமநாதபுரம், மார்ச் 19 இராமநாதபுரத்தில் புதன்கிழமை மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்திருந்தது.
வேளாண் விளைபொருள்கள் ரூ.25.78 லட்சத்துக்கு ஏலம்
ஈரோடு, மார்ச் 19 ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25.78 லட்சத்துக்கு விளை பொருள்கள் ஏலம் நடைபெற்றது.
23ம் தேதி முதல் மஞ்சள் மார்க்கெட் விடுமுறை
ஈரோடு, மார்ச் 18 ஈரோடு பகுதிகளில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது.
கரோனா அச்சுறுத்தல் முட்டை கொள்முதல் விலை ரூ.1.90ஆக நிர்ணயம்
நாமக்கல், மார்ச் 18 உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
கரோனா எச்சரிக்கை வெளிமாநிலங்களுக்கு உப்பு சப்ளை நிறுத்தம்
தூத்துக்குடி, மார்ச் 18 கரோனா எச்சரிக்கை காரணமாக தூத்துக் குடி துறைமுகத்தில் 40 சதவீத ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் புதன்சந்தையில் மாடுகள் விலை சரிவு
நாமக்கல், மார்ச் 18 கரோனா தாக்கத்தால் வரும் மார்ச் 31 வரை மாட்டு சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விலை குறைந்துள்ளது.
கேரளாவில் கரோனா திண்டுக்கல்லில் பூக்கள் விற்பனை சரிவு
திண்டுக்கல், மார்ச் 18 கரோனா வைரஸ் பாதிப்பால், திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்புவது பாதிப்படைந்து உள்ளது.
தென்னை நார் ஏற்றுமதி நிறுத்தம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
விருதுநகர், மார்ச் 18 கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவிற்கு தென்னை நார் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பொய்கை மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது
வேலூர், மார்ச் 18 கரோனா அச்சத்தால் பொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்துள்ளது.
வெயிலின் அளவு அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை , மார்ச் 18 மதுரை, திண்டுக்கல் உள்பட, ஐந்து மாவட்டங்களில், இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ், வெயில் அதிகரிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளைப்பூண்டு அறுவடை அமோகம்
வெள்ளைப்பூண்டு அறுவடை தீவிரமாக்கப் பட்டுள்ள நிலையில் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரத்தில் தர்பூசணி விற்பனை அதிகரிப்பு
விழுப்புரத்தில் தர்பூசணி விற்பனை தீவிரமடைந்துள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி ஊக்க நிதி
மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்
கரோனாவால் ரூ.14 கோடி மதிப்பிலான கறிக்கோழிகள் தேக்கம்
கரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் பீதியால் தமிழகத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான கறிக்கோழி விற்பனை பாதிக்கப் பட்டுள்ளது.