CATEGORIES
Kategorier
700 வேட்பாளர்கள் பறந்து விட்டனர்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8 மாதங்களில் 341 மீனவர்கள் சிறைப்பிடிப்பு
தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகை சிறைபிடித்து அதிலிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மானியங்கள், சம்பள உயர்வுகள் தேர்தல் சட்டங்களை மீறுவதாகும்
2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பொது வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணித்து வரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, தேர்தலுக்கு முந்தைய மானியங்கள் மற்றும் சம்பள உயர்வுகள் வழங்குதல் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைக்கால தீர்மானங்கள் தேர்தல் சட்டங்களைத் தெளிவாக மற்றும் வேண்டுமென்றே மீறுவதாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டுகின்றது.
நல்லூர் தீர்த்தத்துக்கு 'விடுமுறை' கோரிக்கை
நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
பௌசிக்கு சிறை
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேட்ச் பிக்சிங்: ஆகாஷுக்கு சிறை
இந்திய ராயல் பஞ்சாப் அணியின் முகாமையாளராக இருந்தபோது போட்டிகளைக் காட்டிக்கொடுக்குமாறு (மேட்ச் பிக்சிங்) இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிலிம்ஸ்டெட் மற்றும் நியூசிலாந்து வீரர்நில் ப்ரூவுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட் மேலாளர் பெச்சலோடியா ஆகாஷுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா தீர்ப்பளித்தார்.
ரணிலின் விஞ்ஞாபனம் வியாழன் வெளிவரும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு-தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வியாழக்கிழமை (29) வெளியிடப்படவுள்ளது.
"முழு அதிகாரம்
சுதந்திரமானதும் நிதியானதுமான தேர்தலுக்கு அரசாங்கத்தின் முழு அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய பிரதமர் தினேஷ் குணவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமான நிறுவனமாகும்.
உலக சாதனைகள் முறியடிப்பு
போலந்தில் நடைபெறும் டயமன்ட் லீக்கில் தனது கோலூன்றின் பாய்தல் உலக சாதனையை சுவீடனின் அர்மன்ட் டுப்லான்ட்ஸ் முறியடித்ததோடு, 3,000 மீற்றர் உலக சாதனையை மூன்று செக்கன்களால் நோர்வேயின் ஜாக்கோப் இங்கிரிட்சன் வென்றுள்ளார்.
மேற்கு ஆபிரிக்க தாக்குதலில் 200 Guit சுட்டுக்கொலை
மேற்கு ஆபிரிக்காவின் புர்கினா பாசோவில் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 200 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை பிறப்பு குறைவதை தடுக்க சீனாவின் புதிய திட்டம்
குழந்தை பிறப்பு விகிதம் குறைவதை கட்டுப்படுத்த, திருமணம் செய்வதை எளிதாக்கவும் விவாகரத்து செய்வதை கடினமாக மாற்றவும் சீன அரசு திட்டமிட்டுள்ளது.
நெதர்லாந்து குரான் பிறீ: வென்றார் லான்டோ ICLA நொரிஸ்
நெதர்லாந்து குரான் பிறீயில் பிரித்தானியாவின் லான்டோ நொரிஸ் வென்றார்.
இளைஞனின் வயிற்றிலிருந்த அதிர்ச்சி தரும் பொருட்கள்
பீகார் மாநிலத்தில் 22 வயது இளைஞனின் வயிற்றில் இருந்து கத்தி, நகம் வெட்டி உள்ளிட்ட மருத்துவர்கள் பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
39 பேருடன், கடலில் மூழ்கிய மலேசிய கப்பல்
சிங்கப்பூர் அருகே மலேசிய கடற்படைக்கு செந்தமான கப்பல் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளது.
இலங்கை அணியில் மன்னார் கிதுஷன்
இலங்கை தேசிய 17 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் கிதுஷன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
“நாம் வாழ்வதற்கு ரணில் ஆள வேண்டும்"
இந்நாட்டு மக்கள் இன்னும் வாழவேண்டுமாயின், தற்போதைய ஜனாதிபதியும் சுயேச்சை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க மீண்டுமொருமுறை ஆள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கொழும்பு குப்பைகளுக்கு மீண்டும் கடும் எதிர்ப்பு
கொழும்பிலிருந்து குப்பைகளை ரயிலில் புத்தளத்திற்கு கொண்டு வரும் வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து புத்தளம் நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 30ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“உயரமாயின் காவலாளி; குட்டையாயின் தொழிலாளி”
உயரம் என்றால் காவலாளி குட்டை என்றால் தொழிலாளி என்ற கொள்கைகளை என்ற கொள்கையைக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டின் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து எதுவும் பேச முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“என்னுடன் சிறந்த குழு”
ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்துக் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும், தன்னுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவை மிஞ்ச வேறு எந்த கட்சியிலும் குழுவொன்று இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“கட்சி முடிவெடுத்தால் ஜனாதிபதிக்கு ஆதரவு”
கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் ஆளுநர் வேண்டும் என்று எந்தவொரு உடன்படிக்கையும் சஜித் பிரேமதாசவுடன் செய்து கொள்ளப் படவில்லை.
ஐ.ம.ச.விஞ்ஞாபனம் வெள்ளி வெளிவரும்
ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
“24 மாதங்களில் வறுமை ஒழிப்பு”
பெண்களுக்கு முதலிடம் கொடுத்து மாதாந்தம் 20,000 ரூபாய் வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கு வேட்புமனு கோரல்
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262ஆம் அத்தியாயமான) 26ஆம் பிரிவின் கீழ் எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளரையும் உப தவிசாளரையும் அதன் உறுப்பினர்களையும் தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான பெயர் குறித்த நியமனங்களைக் கையேற்கும் அறிவித்தல், எல்பிட்டிய பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அலுவலரினால் திங்கட்கிழமை (26) வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் “புதிய அரசமைப்பு”
எம்.பிக்களுக்கான ஓய்வூதியம் நீக்கப்படும் இலவச வாகன அனுமதி பத்திரம் இரத்து அமர்வுக்கான கொடுப்பனவ நிறுத்தப்படும் ஒரேயொரு ஜனாதிபதி இல்லம் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்து அமைச்சரவை கடுமையாக சுருங்கும்
இஸ்ரேலில் ஹிஸ்புல்லா வான்வழித் தாக்குதல்
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இலங்கையை வென்ற இங்கிலாந்து
இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஓல்ட் ட்ரஃபோர்ட்டில் புதன்கிழமை (21) ஆரம்பித்து சனிக்கிழமை (24) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
I.N.S. மும்பை கொழும்புக்கு விஜயம்
இந்தியக் கடற்படையின் முன்னரங்க போர்க் கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயமாக இன்று திங்கட்கிழமை 26ஆம் திகதி கொழும்புக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இருவர் பேரினவாதிகள்; ஒருவர் மழைக் காளான்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களில் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க பேரினவாதிகளாவர் மற்றொரு வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ நேற்றைய மழைக்கு முளைத்த காளான் என என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.