CATEGORIES
Kategorier
வெற்றியை நோக்கிப் பயணிக்கும் இலங்கை
பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில்
இளைஞர் எழுச்சி மாநாடு
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் எழுச்சி மாநாடு பசறை நூலக கேட்போர் கூட மண்டபத்தில், மலையக மக்கள் முன்னணியின் உப தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் கவுன்ஸில் உறுப்பினரும், முன்னாள் பசறை பிரதேச சபை உறுப்பினருமான கண்மணி சிவநேசன் தலைமையில் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
கடற்படையினர் இருவர் கைது
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடற்படை புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவரையும், அவர்களிடம் கஞ்சாவைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரையும் ஊர்காவற்துறை பொலிஸார் சனிக்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
McDonald's க்கு தடை
McDonald's வர்த்தக நாமத்தின் கீழ், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பால்மா குறையும்
நுகர்வோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்தார்.
இன்று சந்திர கிரகணம்
2024ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் இன்று திங்கட்கிழமை(25) அதாவது மார்ச் 25 ஆம் திகதி நிகழவுள்ளது. பங்குனி உத்திரமும் இன்று (25) கொண்டாடப்படுகிறது.
300 பேரும் இரண்டு வாரங்களுக்கு பின் விடுவிப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள்
4/21 தாக்குதல் உண்மைகள் தெரிந்தால் “உடனே கூறுங்கள்”
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்
நவால்னியின் மனைவி கோரிக்கை
புட்டின் உடன் பேச்சு வேண்டாம்
இசைச் சகோதரிகளின் சர்ச்சை அறிக்கை
டி.எம்.கிருஷணாவிற்கு விருது வழங்கிய இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை என கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய விசா
கடுமையான விதிகளுடன்
59ஆவது தடகள் போட்டி
இலங்கை இராணுவ-படையணிகளுக்கு-இடையிலான 59 வது விளையாட்டு தடகள விளையாட்டுப் போட்டி தியகம் மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமாகும்.
டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது: இலங்கையை வீழ்த்துமா பங்களாதேஷ்
இ லங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
வெப்பநிலை தொடர்பில் ஐநா சிவப்பு எச்சரிக்கை
இந்தாண்டில் (2024) வெப்பநிலை அதிகமாக இருக்கும் என ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மீனவர்கள் 32 பேர் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 32 பேர், ஐந்து விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு திடீர் சுகயீனம்; விபத்தில் 16 பேர் காயம்
சுமணசிறி குணதிலக்க உல்கந்த பிரதேசத்திலிருந்து வெல்லவாய நகருக்கு பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெள்ளவாய பௌத்த மந்திராவுக்கு அருகில் வீதியை விட்டு விலகி வியாழக்கிழமை (21) கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பாடசாலை மாணவர்கள் ஐவர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா சிறைச்சாலை “வதை முகாமை விட மோசமானது"
சிறைசென்று விடுதலையானோர் தெரிவிப்பு
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம்
மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் மலையக ஒன்றியத்தின் தலைவரான வேலு குமார் எம். பி. தெரிவித்தார்.
புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்கிறேன்
நிதர்ஷன் வினோத்
யாருக்கு அலை வீசினாலும் வெற்றி பெறுவது நாமே
சவால்களை ஏற்காத ஒரு தலைவரால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் மொட்டுக் கட்சியில் ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர், ஆனால், சவால்களை வென்ற தலைவருக்கு வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறிமலை பூசாரிக்கு வருத்தம்
வவுனியா வடக்கு - வெடுக்குநாறிமலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“சம்பிரதாயம் தெரியாத சபாநாயகர்”
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
சபாநாயருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: தோற்றது
ரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்கட்சிகளினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
பறக்கும் படையினரால் பொதுமக்கள் அவதி
\"தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர் பொதுமக்களின் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்கின்றனர்.
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் பதும் நிஸங்க முன்னேறினார்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் எட்டாமிடத்துக்கு இலங்கையின் பதும் நிஸங்க முன்னேறியுள்ளார்.
ஹசரங்கவுக்கு 2டெஸ்ட் தடை
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கையின் சகலதுறை வீரரான வனிடு ஹசரங்க இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
தென்னை மரத்தில் தங்க வளையல்
வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயரத் தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“சமுதாயத்தை அழிக்கின்ற செயல்”
தங்களின் தவறுகளை மூடி மறைக்கத் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மூடி சமுதாயத்தை அழிக்கின்ற செயலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து அந்த வைத்தியசாலையை மீண்டும் உடனடியாக திறக்க சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ். ஸ்ரீதரன் வலியுறுத்தினார்.
“குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி"
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிக்குள்ளேயே கருத்து மக வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
அறிவித்த உடன் விலகினார் வசந்த
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாகப் பதவி விலகி வரும் நிலையில், அந்த குழுவின் உறுப்பினராகப் புதிதாக அறிவிக்கப்பட்ட சுயாதீன எத்திரணியைச் சேர்ந்த வசந்த யாப்பா பண்டார, தனது பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே பதவி விலகலை அறிவித்தார்.