CATEGORIES
Kategorier
மனம் உறுதி பெற 10 வழிகள்!
மனதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் மஇந்த உலகில் வந்துவிட்டன. தேவை யற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்து விட்டோம். முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற் றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான். மன மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற் றிலும், நமக்குள்ளேயும் மன மகிழ்ச்சி மற் றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே உள்ளன. அந்த வழிகள் இதோ:
மசாலாக்களின் மறுபக்கம்
நாம் தினசரி உணவுக்காகப் பயன்படுத்தும் பல வகையான உணவுப் 'பொருட்களில், மசாலா என்னும் துணைஉணவுப் பொருட்கள் பிரதான உணவாகப் பயன்படுத்தப்படாமல், உணவு சமைக்கும்போது, காரம், புளிப்பு, உவர்ப்பு போன்ற சுவைகளைக் கூட்டுவதற்கும், செரிமானம் சீராக நடைபெ றுவதற்கும், பிற உணவுப் பொருட்களின் இயற்கைத் தன்மைகளை உடலுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
நிமோனியா தடுக்க...தவிர்க்க!
உலகளவில் ஆண்டுதோறும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற் பட்டோர் நிமோனியாவால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை, ஐந்து வயதுக்குட்பட்ட குழந் தைகளில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நிமோனியாவால் மரணமடைவதாக இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால், நிமோனியா குறித்த விழிப்புணர்வை பொதுமக் களுக்கு ஏற்படுத்தவே ஆண்டு தோறும் நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. நிமோனியா குறித்து அறிவோம் தற்காத்துக்கொள்வோம்.
காயம் தவிர்ப்போம்! கண்ணொளி காப்போம்!
வள்ளிப் பாட்டி தன் வாழ்நாளில் பெரும் பகுதியை வயற்காடுகளில் கழித்தவர். முன்பாக அவரது கண்ணில் மரக்கிளையில் இருந்த குச்சி ஒன்று குத்திவிட்டது. அதை அவர் கவனிக்காமல் விட்டுவிட்டார். ஓரிரு நாட்கள் கழித்து பாட்டியைப் பார்த்தவர்கள் யாரோ “கண்ணில் ஏதோ கட்டி மாதிரித் தெரியுது” என்க, கண்ணாடியில் பார்த்த போது அவரது கருவிழியின் ஓரத்தில் மிகச் சிறிய கட்டி ஒன்று இருப்பது தெரிந்தது. அவராகவே சில சுயமருத்துவங்களைப் பார்த்திருக்கிறார்.
ஆரோக்கியமான காலை உணவு அவசியம்!
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில், சிறந்த கல்வி நிலையம், மிகத் திறமையான ஆசிரியர்கள், வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதலாவதாக வரும் மாணவராக இருந்தாலும், காலை உணவை அவர் தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பால் மட்டும் குடித்து விட்டு உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் காலை 10, 11 மணிக்குள் சோர்ந்துவிடுவார்கள். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது.
முக்குணமும் சத்தியமே..!
ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற களை எளியோருடன் உரையாட தேர்ந் தெடுக்கும் வழிகளில் முக்கியமானது கதை சொல்லுதல். அவருடைய கதை சொல்லும் பாணி அலாதியானது. அதிலொன்று. மூன்று திருடர்கள்.
புத்துணர்ச்சி தரும் புதினா!
உணவே மருந்து, உணவே மருந்துக்கு துணை என நாம் அனைவரும் அறிவோம். அவ்வகையில் குறைந்தவிலையில் அனைவராலும் எளிதில் வாங்கக் கூடிய கீரைகள் நமது உடல் நலனை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. அதிலும் குறிப்பாக அதிக நறுமணம் கொண்ட புதினாக் கீரையை அனைவரும் சமையலில் பயன்படுத்திவருகிறார்கள். இது உணவு களில் சுவையினை அதிகரிக்கவும், நறுமணத்தை அளிக்கவும் பயன்படுத்தபட்டு வருகிறது. இருப்பினும் இக்கீரையை வாசனைப்பொருளாக மட்டுமின்றி பல் வேறு மருத்துவ காரணங்களுக்காகவும் தமிழ் சமூகம் பயன்படுத்தி வந்துள்ளது.
குடல் அழற்சி நோய்!
இரைப்பை மற்றும் குடல் சம்பந்தப் பட்ட நோய்க ளில், IBS எனும் குடல் அழற்சி நோயும் ஒன்று. இது பெருங்குடல் சம் பந்தப்பட்ட நோயாகும். இது உணவு உண்டதும் மலம் கழிக்க வேண் டும் என்ற உணர்வை தூண்டக் கூடிய ஒன்றா கும். உலகளவில் சுமார் 20 சதவீதம் பேர் இந்த IBS நோயால் அவதிப் படுகின்றனர் என்று ஆய் வுகள் தெரிவிக்கின்றன. இந்நோயின் தன்மை, அறிகுறிகள் மற்றும் தீர் வுகள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர். கண்ணன்
நிமோனியாளிலிருந்து விடுதலை!
இப்பொழுது, உலகின் ஒவ்வொரு வருடமும் 20 % குழந்தைகள், 5 வயது அடைவதற்கு முன்னமே நியூமோனியாவினால் இறக்கின்ற னர். இது பல்வேறு காரணங்களின் விளைவாக ஏற்படுகிறது. இந்தியாவில் சுமார் 4 லட்சம் குழந்தைகள் இந்நோயினால் 5 வயதிற்குள்ளாக இறக்கின்றனர், இந்த 4 லட்சத்தில் 2 லட்சம் குழந்தைகள் நியூமோனியாகாக்கல் (பாக்டீரியா) நோயினால் இறக்கின்றனர்.
40 + பெண்கள்...தேவைப்படும் பரிசோதனைகள்... அறுவைசிகிச்சைகள்!
ஆரோக்கியமான வாழ்வு என்பது வரம். அத்தகைய ஆரோக்கி யம், முதிர்ந்த வயதில் அனைவருக்கும் கிடைக்கும் எனில் அது மிகப்பெரிய வரம். முதுமைக்கால நோய்களை எல்லாம் மருந்தினால் மட்டுமே போக்கிவிட முடியாது. சில நோய்களுக்கு அறுவைசிகிச்சையும் தேவைப்படும். ஆனால், முதியோர்களில் சிலர் எளிதில் அதற்கு ஒப்புதல் தருவதில்லை. அறுவை சிகிச்சை மீதான அச்சமே அதற்குக் காரணம், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குச் சில நோய்களை அறுவைசிகிச்சையின் மூலமே குணப்படுத்த முடியும்.
முடத்தை அகற்றும் முடக்கற்றான் கீரை!
இந்தியா, சீனா, இலங்கை மற்றும் எகிப்து போன்ற நாடுகள் கீரைகளை மூலிகை தாவரமாக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறைப்படுத்தியுள்ளன. காரணம் இக்கீரைகள் தான்கொண்டுள்ள மூலக்கூறுகளின் காரணமாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த கீரைகளில் ஒன்றுதான் முடக்கற்றான் கீரை.
சிறுநீரகக் கற்கள் அறிகுறிகள்!
சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறு நீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.
வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடற்பருமன்!
னித உடலின் நான்கு அடிப்படை திரவங்கள் (ரத்தம், மஞ்சள் பித்த நீர், கறுப்புப் பித்த நீர், சளி) குறித்து விளக்கும் நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்டஸ், தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் உணவு, இந்த உயிர்த் திரவங்களையும் அதிகமாக்கிவிடுகிறது. இவற்றைச் சமன் செய்வதற்கு உடற்பயிற்சி ஏதும் செய்யவில்லையெனில், நோய்கள் ஏற்படும் என்கிறார். ஒரு மனிதன் தனது சராசரி எடையைவிட அதிகமாக இருந் தால், அது அவரது உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கையையேக் காட்டுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.
மெனோபாஸுக்கு பிறகு ஏற்படும் உதிரப்போக்கு தீர்வு என்ன?
இறுதி மாதவிடாய்ப் பருவத்தை அடைந்தபிறகு மாதவிடாய்த் தொல்லைகள் இல்லாமல் ‘நிம்மதியாக இருக்கலாம் என்று அர்த்தம் இல்லை. சிலருக்கு இந்த நிம்மதி தொலைகிறது. ஆம், சுமாராகப் பத்தில் ஒரு பெண்மணிக்கு இந்தப் பிரச்னை வருகிறது. மாதவிடாய் நின்ற ஒருவருக்கு ரத்தப்போக்கு ஏற்படுவது கவலைக்குரிய விஷயம். மாதவிடாய் நின்று ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் திடீரென்று ரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
பெண்கள் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!
குடும்பத்தில் உள்ள அனைவ ரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒருவீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
யானையை வம்பிழுக்கும் சிம்மம்
அளவான பயிற்சியும் சரியான பயிற்சியும்...
மன அழுத்தம் முதல் ஆட்டிசம் வரை...தீர்வு...PYTMS சிகிச்சை!
நம் உடலின் அத்தனை இயக்கங்களுக்கும் மூளைதான் மூலகாரணி. மூளை செயல் பாட்டில் சிறிது மாறுதல் உண்டானாலும் நம் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாடுகளில் நிச்சயம் குறைபாடுகளோ, குழப்பங்களோ உண்டாகும். பசி முதல் பயம் வரை என அனைத்துக்கும் மூளைதான் அடிப்படை என்பதாலேயே எப்படிப்பட்ட விபத்துகள் நடந்தாலும் முதலில் தலையில் ஏதேனும் அடிப்பட்டுள்ளதா என மருத்துவர்கள் ஆராய்வார்கள்.
முதுகெலும்பைப் பாதுகாப்போடு!
நம் உடல் இயக்கத்துக்கு ஆதாரமான ஒன்று, முது கெலும்பு. ஆனால், இன்றைய காலச் சூழலாலும், நவீன வாழ்க்கைமுறை மாற்றங்களாலும் வயது வித்தியாசமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் அவதிப்படும் ஒரு விஷயம் முதுகுவலிதான்.
அதிகாலையில் கண் விழிக்க!
வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான்.
பச்சிளங் குழந்தை சுவாச தவிப்பு நிலை...
என்ன செய்ய வேண்டும்?
கல்லிரல் காப்போம்...அழற்சியைத் தடுப்போம்!
கல்லீரல் அழற்சியை அல்லது வீக்கத்தைக் கல்லீரல் அழற்சி நோய் என்று அழைக்கிறோம். இது நுண்ணுயிரிகளினாலும், மது போன்ற ஆபத்தான பொருட்களினாலும் கல்லீரல் பாதிக்கப்படுவதாலும் ஏற்படலாம். அறிகுறிகளே இன்றியும் அல்லது குறைந்த அறிகுறி களுடனும் இது காணப்படும். ஆனால் பெரும்பாலும் மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவற்றை உண்டாக்கும். இரு வகையான கல்லீரல் அழற்சி நோய் உண்டு: குறைந்த கால அளவினது மற்றும் நீடித்தது.
வருத்தம் தரும் வாய்ப்புண்!
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். சாப்பிடும்போதும் பேசும் போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.
மீண்டும் நிபா வைரஸ்... தப்பிப்பது எப்படி?
கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் உலகம் முழுதும் பரவத் தொடங்கியது. குறிப்பாக, கேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டறிப்பட்டது.
ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்..!
ஆண்களை அதிகளவில் பாதிக்கும் புற்றுநோய்களில் முக்கியமானது புரோஸ்டேட் புற்றுநோய். இது வயதான ஆண்களிடையே ஏற்படும் ஒருவகை புற்றுநோயாகும். இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்த புற்றுநோய் தற்போது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது. அதனோடு புற்றுநோயில் இறப்பை ஏற்படுத்துவதில் இது இரண்டாவது புற்றுநோயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சிறுநீரகவியல் மருத்துவர் நசரேத் சாலமன்,.
மனதை ஒருமுகப்படுத்த 5 வழிகள்!
மனதை ஒரு முகப்படுத்துதல் என்பது ஒரு முக்கியமான செயல்திறன் ஆகும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும், மனதையும், மூளையையும் ஒரு முகப்படுத்தி, மிகவும் கவனமாகச் செய்தால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும்.
ஆர்த்ரைட்டிஸ் அறிவோம்!
உலகளவில் பரவலாக காணப்படும் நோய்களில் ஆர்த்ரைடிஸும் ஒன்று. முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டுமே ஆர்த்ரைடிஸில் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது அப்படியில்லை. துடிப்பும் துறுதுறுப்பும் மிக்க இளைஞர்கள் கூட கை, கால் வலி, மூட்டு வலி என்று மருத்துவமனையை நாடுகின்றனர்.
காற்றுக்கென்ன வேலி?
எந்த ஒரு ஆற்றலும் தன் பாதையில் தடைபட்டாலோ தேங்கி நின்றாலோ இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று, அழுத்தம் ஏற்பட்டு உயர் அழுத்தம் கொண்ட ஆற்றலாக மாறி, வெளிப்பட சரியான தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அல்லது அழுத்தம் மிகுந்து உடைப்பை ஏற்படுத்தி ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படும்.
பூசணிச் சாறின் நன்மைகள்!
வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணிச் சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்களை பார்ப்போம்.
வளரிளம் பருவத்தினருக்கான உணவுமுறை!
பரக்க பரக்க உண்ணும் தவறான பழக்கம் என்பது அதிக அளவு உணவை குறுகிய நேரத்தில் உண்ணுதலாகும். குழந்தைப் பருவம் முதல் இப்பழக்கம் ஏற்பட்டாலும் பெரியவராகும் வரை உணரப்படுவதில்லை.
மீத்தா ரகுநாத ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!
தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடிவும் நீ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில்நாயகியாக அறிமுகமானவர் மீத்தா ரகுநாத்.