CATEGORIES
Kategorier
இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா!
இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பாட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, திரிபலா சூரணம் உதவுகிறது. திரிபலாவின் நன்மைகளை பார்ப்போம்.
மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு
பிசிஓடி எனப்படும் Polycystic ovarian syndrome (PCOD) என்று சொல்லக்கூடிய நோயில் ஒழுங்கற்ற மாதவிடாய் காணப்படும். சில நேரங்களில் வராது. முகத்தில் பருக்கள் காணப்படும்.
பால் + கலந்து களிப்போம்!
பால் அனைத்து வயதினரும் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுப் பொருள். ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான கால்சியம், புரோட்டீன், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து, ரிபோஃப்ளேவின, பொட்டாசியம், பாஸ்பரஸ், அயோடின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்றவை அதிகளவில் உள்ளன.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க!
பொதுவாக, குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சாதாரண குறைபாடுதான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம். தூக்கத்தின்போது தன்னையறியாமலே படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மருத்துவ உலகம் Nocturnal Enuresis என்று குறிப்பிடுகிறது.
டாட் டூ போட்டுக் கொள்ளலாமா?
அந்தக்காலத்தில், தங்கள் பெயர் அல்லது தங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயரை உடலில் பச்சைக்குத்திக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்தது. அதுவே, தற்போது டாட்டூ என்கிற பெயரில் நவீனமயமாகிவிட்டது. இதில் ஆண், பெண் பேதமின்றி அனைவரும் டாட்டூ குத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதிலும் இளைஞர்கள் பலரும், தங்கள் பெயர் அல்லது தங்கள் பெயரின் முதல் எழுத்து, சிறு உருவங்கள், பிடித்த பிரபலங்களின் பெயர்கள் போன்றவற்றை டாட்டூவாக போட்டுக்கொள்கிறார்கள்.
அகவையை அனுபவித்தல்!
சமீபத்தில் நீயா நானா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறைகொண்ட பெண்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு பெண் தனது பேத்தி தன்னை பாட்டி என அழைக்கக்கூடாது என்று கறாராக வாதாடினார். எனக்கு வயதாகிவிட்டது எனும் உணர்வை தருகிறது. ஆகவே பேத்தி என்னை அம்மா என்றோ பெயர் சொல்லியோ அழைக்கலாம் என தெரிவித்தார். அங்கிருந்த அத்தனை பெண்களும் இதை ஆதரித்தனர். ஆண்களுக்கும் இதே வயதாகுதல் சார்ந்து மிகப்பெரிய ஒவ்வாமை இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.
முகப் பொலிவை மேம்படுத்தும் பூக்கள்!
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையான நன்மைகளைக் கொண்டது. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதனால் சருமத்தை இளமையாக மாற்றுவதோடு, மினுமினுப்பாகவும் வைக்க உதவுகிறது. அந்த வகையில், பூக்கள் முக அழகை பராமரிக்க எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம்:
அமீபியாசிஸ் அறிவோம்!
எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்கா என்ற ஒட்டுண்ணியால் உண்டாகும் நோயே அமிபியாசிஸ். எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்காவால் பாதிக்கப்படுபவர்களில் 10-20 % பேருக்கே நோய் ஏற்படும். இது யாவரையும் பாதிக்கும் என்றாலும் வெப்ப மண்டலப் பகுதியில் சரியான சுகாதார வசதியற்று வாழ்பவர்களுக்கே பரவலாகக் காணப்படுகிறது.
ஆங்குலர் சீலிடிஸ் காரணங்கள் அறிகுறிகள்... சிகிச்சைகள்!
புன்னகை, நம் அழகான முகத்தை மேலும் அழகாக்கி காட்டும். புன்னகைக்கு ஆரோக்கியமான உதடுகள் அவசியம். இருப்பினும், இது எப்போதும் அப்படி இருப்பது இல்லை.
நம்பிக்கையோடு நடையிடுங்கள்!
டயாபடீக் பாதப் பராமரிப்பு!
கல்லீரல் அறிவோம்… உடல்நலன் காப்போம்!
மனித உடலில் உள்ள உள்ள மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். சுமார் 1. 5 கிலோ எடை உள்ளது. நமது வலது பக்க மார்புக் கூட்டில் மார்புக்கு கொஞ்சம் கீழே அடியில் உள்ளே வைத்து பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட ஆட்டின் ஈரல் ஒத்த உருவம் மற்றும் நிறம் உடையது. அதே அளவு மிருதுவானது.
பற்களின் நிறம் மாறுவது ஏன்?
மற்றவர்களைப் பார்த்து புரியும்போது புன்னகை பற்கள் பளிச்சிட வேண்டும் என்று விரும்பாதவர்கள் உண்டா? முகத்துக்கு ஃபேசியல், பிளீச்சிங் என்று செயற்கை முறையில் அழகூட்டுவதைப் போல மஞ்சளான பற்களுக்கு அழகூட்ட பலரும் பல் மருத்துவமனைகளிலும், அழகு நிலையங்களிலும் வரிசைகட்டி காத்திருக்கிறார்கள்.
தலைசுற்றல் தீர்வு என்ன...
நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்னைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது! உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காதுதான்.
பாலினத் தேர்வைப் புரிவோம்...LGBTQ+ சில அறிதல்கள்!
காபி ஷாப்பில் உட்கார்ந்து இருந்த போது, சோசியல் மீடியாவில் என்னுடைய பதிவுகளை தொடர்ந்து பார்ப்பதாக கூறிக்கொண்டு ஒரு பெண் அருகே வந்து தன்னை அறிமுகப்படுத்தினாள். உங்களிடம் கொஞ்சம் பேசலாமா என்றதும், டாம் பாய் கணக்கா அவள் கேட்ட தோரணை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சரி பேசலாம் என்றேன். டாம் பாய் கணக்கா ஒரு இளம்பெண் மிக நேர்த்தியாக அரசியலில் இருந்து பேச ஆரம்பித்தவள், அதன் பின் தன்னை ஒரு எ செக்சுவல் என்று அறிமுகப்படுத்தினார். உண்மையில் ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து இருக்கும்போது, காலேஜ் படிக்கும் பெண் தன்னுடைய பாலினத்தில் ஏற்பட்ட வித்தியாசத்தைப்பற்றி புரிந்து வைத்திருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு நோயாளிகள் என்னிடம் வந்தனர். ஒருவர் ஐம்பது வயதைக் கடந்த விவசாயி. இன் னொருவர் முப்பது வயது இல்லத்தரசி. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள். கடந்த 10 நாட்களுக்குள்ளாக பார்வைக் குறைபாடு, கண்ணில் வலி, சிவப்பு மற்றும் நீர் வடிதல்.
ஆபீஸ் ஸ்ட்ரெஸ்... தடுக்க... தவிர்க்க!
சுரேஷுக்கு 45 வயது. ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. மீட்டிங், டார்கெட் என அலுவலகத்தில் மூச்சுவிட நேரமின்றி பரபரப்பான வேலை. டென்ஷனைக் குறைக்க, அவ்வப்போது சிகரெட்களாக ஊதித் தள்ளுவார். வார இறுதியில் நண்பர்களுடன் மது அருந்துவார். இந்தத் தவறான வாழ்க்கைமுறையால் உடல்பருமனுக்கு ஆளானார். அதைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என வரிசைகட்டின. ஒரு நாள் கடுமையான வயிற்றுவலி ஏற்பட, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது, ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே, குடும்பத்திலும் பிரச்னை என்பதால், இப்போது மனோஜைக் கவனித்துக்கொள்ளக்கூட ஆள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.
ரத்த அழுத்தமும் வாழ்வியல் மாற்றமும்!
உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டால், ரத்த அழுத்தப் பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவரவோ, அதிலிருந்து விடுபடவோ முடியும் என்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா.
அஞ்சுதல் அஞ்சாமை...
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவர்.
செயற்கை உணவு நிறங்கள்
செயற்கையாக சேர்க்கப்படும் உணவு நிறங்கள் இயற்கைப் பொருட்களில் இருந்து எடுக்கப்படாமல், முழுவதும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இயற்கைப் பொருட்களிலிருந்து உணவு நிறங்கள் பிரித்தெடுக்கப்படும்போது நிகழும் பல கட்ட செயல்முறைகள் எதுவும் இந்த செயற்கை நிறங்களின் தயாரிப்பில் இருப்பதில்லை.
குடிநோய் உருவாக்கும் பாதிப்பு
கல்யாணம் என்றாலும் குடி, கருமாதி என்றாலும் குடி, வேலை கிடைத்தாலும் குடி, வேலை போனாலும் குடி... இப்படிக் குடித்துக் குடித்து, தமிழ்க்குடியே பெருங்குடிகாரக் கூட்டமாகி இருக்கிறது இன்று. ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தெரியாமல் குடித்த காலம் மலையேறிவிட்டது. ஊருக்கு உள்ளேயே கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் நடுநாயகமாக மதுக் கடைகள் வீற்றிருக்கின்றன. இதனால், டீன் ஏஜ் வயதினர் மட்டும் அல்ல, 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்கூட குடிக்கின்றனர். மது அருந்துவது ஒழுக்கக்கேடான செயல் என்ற நிலைபோய், குடிக்கவில்லை எனில் கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
உதிரம் கொடுப்போம்... உயிர் காப்போம்!
ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை எங்கோ ஒரு மூலையில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்கிறது மருத்துவ உலகம். ஆனால், மருத்துவத்துறை இவ்வளவு வளர்ச்சி அடைந்த நிலையிலும், இப்போதும் கூட பல நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் உயிர் இழக்கும் சம்பவங்களும் ஆங் காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம், ரத்ததானம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே. எனவே, ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14- ஆம் தேதி உலக ரத்த கொடையாளர் தினம் (World Blood Donor Day) அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து 38 ஆண்டுகளாக இயங்கி வரும் லயன்ஸ் ரத்தவங்கியின் சேர்மன் A.மதனகோபால்ராவ் நம்முடன் பகிரந்து கொண்டவை:
அலர்ஜியை அறிவோம்..! டீடெய்ல் ரிப்போர்ட்!
அலர்ஜியைப் பொறுத்தவரையில், 'பூமியில் உள்ள எந்த ஒரு பொருளும் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்' என்பதுதான் பொதுவான கருத்து. என்றாலும், அலர்ஜிக்கு சிகிச்சை பெற வருவோரின் புள்ளிவிவரப்படி சில பொருட்கள் மட்டும் 'அலர்ஜி ஆகும் பொருட்கள்' என முத்திரை குத்தப்பட்டுள்ளன. அவற்றை மட்டும் இப்போது பார்ப்போம்.
இளநரையை போக்கும் எளிய வழிகள்!
இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயை தலையில் தேய்த்து வர முடி செழித்து வளரும்.
குழந்தைகளுக்கான காது பராமரிப்பு
குழந்தைகளின் காதிலுள்ள மெழுகை `அழுக்கு’ என்று தவறாக நினைத்துக்கொண்டு அகற்றக் கூடாது.
பற்களை சுத்தம் செய்தல்...ஸ்கேலிங் அறிவோம்!
பற்களின் ஆரோக்கியம் என்பது உங்கள் உடலின் பொதுவான ஆரோக்கியத்தின் முக்கியமான அங்கமாகும். உங்களுக்கு என்ன வயதானாலும், உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவேண்டும், மேலும் வைத்துக் கொள்ளவும் முடியும்.
ஐஸ்வர்யா மேனன் ஃபிட்னெஸ், டிப்ஸ்!
காதலில் சொதப்புவது எப்படி என்கிற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன் பின், ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2, நான் சிரித்தால், தீயா வேலை செய்யணும் குமாரு, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதைத்தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
வேண்டுதலை வைக்க வேண்டிய சந்நிதி!
நம் அனைவருக்கும் இருக்கும் நல்ல அம்சங்களில் ஒன்று, மனதுக்குள் ஒன்றை நினைத்து வேண்டிக்கொள்ளுதல் அல்லது உறுதிமொழி செய்துகொள்ளுதல்.
தாம்பத்யம் எனும் பந்தம்!
மௌனராகம் படத்தில் மோகனும், ரேவதியும் திருமணமான ஏழே நாளில் விவாகரத்து வேண்டும் என்று கேட்பார்கள். அதற்கு வக்கீல் கூறும் பதிலில் இருந்து தான் தம்பதியர்கள் பிரிய வேண்டுமென்றால் ஒரு வருடம் சேர்ந்து வாழவேண்டும் என்ற தகவலே அந்தப் படம் மூலம் தான் 90களில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு தெரிய வந்து இருக்கும் என்றே நம்புகிறேன். குடும்ப அமைப்பு கட்டுக்கோப்புடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் சட்டங்களும் தம்பதியர்களுக்கு சேர்ந்து வாழும் எண்ணத்தை உருவாக்க காலஅவகாசம் கொடுத்து இருக்கிறது என்று நீதிமன்றம் நம்மிடம் தெரிவிக்கிறது.
குறைந்தும் மறைந்தும் வரும் தொற்றுக்கள்
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எழுபது வயதான பெண்மணி ஒருவருக்கு திடீரென பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சைக்கு வருகிறார் நன்கு அறிமுகமானவர். அவ்வப்போது கண்ணாடி அணிவதற்கு, கண்புரை அறுவைசிகிச்சைக்காக என்று வந்திருக்கிறார்.
இயற்கை நிறங்கள் அறிவோம்!
இயற்கையில் கிடைக்கும் உணவுகளில் உள்ள நிறமிகள், உணவுப் பொருட்களின் உள்கட்டமைப்பின் செல்களில் பதிந்திருப்பவை. இவையே பழங்கள், காய்கள், தானியங்கள், பருப்புகள், கீரைகள் போன்ற உணவுப் பொருட்களுக்கு மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, ஊதா உள்ளிட்ட மேலும் பல நிறங்களைக் கொடுக்கின்றன.