CATEGORIES
Kategorier
பலடி அடிக்க வெல்கம் தயார்?
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முகத்துக்கே மறுத்தார் தயாசிறி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முகத்துக்கே மறுத்துவிட்டார் என அறியமுடிகின்றது.
நிஷாந்தவின் மனைவிக்கு மொட்டில் பதவி
வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியும், சட்டத்தரணியுமான சமரி பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முட்டை ரூ.35
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவை எட்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
“பணம் இல்லாததால் போட்டியிடவில்லை"
மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேவையான நிதி தன்னிடம் இல்லை என்பதால் போட்டியிடும் வாய்ப்பை மறுத்ததாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கன்று ஈன தயாராக இருந்த 2 மாடுகள் வெட்டப்பட்டுள்ளன
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்வேரி பகுதியில் கன்று ஈனுவதற்கு தயாராக இருந்த இரண்டு மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியத்திற்கு எதிரான கருத்து - ஞானசாரருக்கு கடூழிய சிறை
இலங்கையில் இன, மத மற்றும் ஒற்றுமையைச் சீர்குலைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்
“பெண்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்”
வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, நாடளாவிய ரீதியில் பெண்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தமது அடிப்படைத் தேவைகளைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெண்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“மீதமிருக்கும் காணிகளை மீட்கும் முயற்சி தொடரும்”
சிறிய பிரச்சினைகளைப் பெரிதாக்கித் தீரா பிரச்சினையாக்காது அவற்றைத் தீர்வு கிடைக்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மீதமிருக்கும் மக்களின் காணிகளையும் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அவை அனைத்தும் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கான நடவடக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
தனிநபர் செலவு ரூ.17,000 ஆகும்
உத்தியோகபூர்வ வறுமைக் கோடு தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி தேசிய மற்றும் மாவட்ட அளவில் விலை மாற்றங்களைக் கணக்கில் கொண்டு சரிசெய்யப்படுகிறது
மருதமுனை இரட்டை படுகொலை: தந்தைக்கு விளக்கமறியல்
மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்ட கல்முனை நீதிவான் நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
‘தோட்ட சமூகம்' அல்ல; மலையக சமூகமாகும்
நாட்டிற்கு ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் ‘தோட்ட சமூகம்' இதுவரை 'தோட்டத் தொழிலாளர் சமூகம்' என்றே அழைக்கப்பட்டாலும் நாட்டுக்கு ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி பல வருடங்களுக்கு முன்பிருந்தே மலையக சமூகம் என மரியாதையுடன் அழைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
"33 சதவீத சம்பள உயர்வை ஏற்கமுடியாது”
அமைச்சர் ஜீவன் தொண்டமான்
வழிபாடுகளுக்காக 7 ஆலயங்கள் விடுவிப்பு
அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
“எந்தவோர் அரசியல் வாதியும் வரவில்லை”
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் விசனம்
“முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது"
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 இலட்சம் முட்டைகள் நாட்டில் கையிருப்பில் உள்ளதாகவும், இதன் காரணமாக முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
வீதி விபத்தில் வைத்தியர் பலி
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன், புதன்கிழமை (27) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மரணமடைந்துள்ளார்.
வரி குறைப்பு
அரிசி மற்றும் பெரிய வெங்காயத்துக்கான விசேட பண்ட வரி வியாழக்கிழமை (28) முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
'எடிசன்' விருது வென்ற 'ஐயோ சாமி'
தென்னிந்தியாவின் சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில், \"ஐயோ சாமி\" என்ற இலங்கைத் தமிழ்ப் பாடலைப் பாடிய விந்தி குணதிலக்க, 2023ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை வென்றுள்ளார்.
சபாநாயகர் யாப்பா ஜெனீவா பயணம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் 148ஆவது மாநாட்டில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கை பாராளுமன்றக் குழுவொன்று பங்கேற்றது.
புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு புத்துயிர் கொடுக்கிறார் ஜப்பானியர்
புறக்கோட்டை மிதக்கும் சந்தையை (Floating Market) மீண்டும் புத்துயிர் பெறும். அதற்கு ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவர் முன் வந்துள்ளார்.
விசாவை மாற்ற முயற்சி
இலங்கைக்கு வரும் வெள களுக்கு விசா வழங்கும் முறையிலிருந்து விலகி, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அந்தப் பணிகளை ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவில் கவனயீர்ப்பு
முல்லைத்தீவு - கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை புதன்கிழமை (27) முன்னெடுத்திருந்தனர்.
9 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு (26) சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மூவருக்கு கடவுச்சீட்டு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் மூவருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறித்த மூவருக்கும் இலங்கை துணை தூதரகத்தினால் கடவுச்சீட்டு.
முன்னாள் போராளி அதிரடியாக கைது
முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ.அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
"ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும்”
பாராளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெற்றாலும், ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் அதாவது செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவிகளுக்கு 'பேட்' வவுச்சர்கள்
பாடசாலை மாணவிகளின் சுகாதாரமான பழக்கவழக்கங்களை அதிகரிக்கும் நோக்கில், இலங்கையில் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை (அணையாடை ஆடை) (PAD) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் பெயரால் தேர்தல் உறுதிமொழி
நாம் தமிழர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி?
சாகல குழுவினர் இந்தியா பறந்தனர்
Chief Staff, President, National Security Adviser, Sagala Ratnayake