Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்!

Malai Murasu

|

March 21, 2025

கொல்கத்தா பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன!!

திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்!

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) கோலாகமாக தொடங்குகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்கும் கண்கவர் நடன நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. நாளை தொடங்கவுள்ள லீக் போட்டிகளில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளைக் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்), உலகின் முதன்மையான 20 ஓவர்கிரிக்கெட் தொடராகும். அந்த வகையில் 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. வழக்கம் போல் இம்முறையும் 10 அணிகள் களம் காணுகின்றன.

ஒவ்வொரு அணி நிர்வாகமும் தேவையில்லாத வீரர்களை விடுவித்தும், அணிவியூகத்துக்கு ஏற்ப புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருப்பதால், என அணி வீரர்கள், கேப்டன்கள், பயிற்சியாளர்கள் கணிசமான அளவில்மாற்றங்கள் நடந்துள்ளன. முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். இறுதியாக 62 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

imageஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் 5 அணிகள் புதிய 5 கேப்டன்களுடன் களம் காணுகிறது. டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்'ஐ லக்னோ அணி அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அவரை அந்த அணியின் கேப்டனாக நியமித்தது. இதனால் டெல்லி அணியின் கேப்டனாக கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து கடந்த முறை கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் அய்யரை, பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து அவரை அந்த அணியின் கேப்டனாக நியமித்துள்ளது.

Malai Murasu

Denne historien er fra March 21, 2025-utgaven av Malai Murasu.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Malai Murasu

Malai Murasu Chennai

கோயில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்கள் கை!

சென்னைபுதுவண்ணாரப் பேட்டையில் கோயில் உண் டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ள னர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

சென்னையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

விமானங்கள் தாமதமாக புறப்பட்டன!!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு: கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஈரோடு மாவட்டம் பவா னிசாகர் அணையில்திறக்கப் படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப் பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட் டுகிறது. இதனால் குளிக்கும் வசதி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

சென்னை வந்த ரெயிலில் குட்கா கடத்திய வாலிபர் கைது!

சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் குட்காகடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

பொருள் செழிப்பு, வணிகத்தில் வெற்றி தரும் வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்!

காரைக்குடி திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என். வைரவன்பட்டி திருத்தலம். இந்தப் பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இது மூன்றாவது பெரிய கோயில் ஆகும்.

time to read

2 mins

July 27, 2025

Malai Murasu Chennai

தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

அன்புமணி ராமதாஸ் பேச்சு !!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

மும்பையில் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது டிரக் மோதி ஒருவர் பலி; 21 பேர் காயம்!

மும்பை-எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

7 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தாய்லாந்து - கம்போடியா ஒப்பந்தம்!

டிரம்ப் அறிவிப்பு!!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

யூ.கே. முத்து மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மரணம் அடைந்தார். மு.க முத்து மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

July 27, 2025