Poging GOUD - Vrij

திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்!

Malai Murasu

|

March 21, 2025

கொல்கத்தா பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன!!

திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்!

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) கோலாகமாக தொடங்குகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்கும் கண்கவர் நடன நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. நாளை தொடங்கவுள்ள லீக் போட்டிகளில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளைக் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்), உலகின் முதன்மையான 20 ஓவர்கிரிக்கெட் தொடராகும். அந்த வகையில் 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. வழக்கம் போல் இம்முறையும் 10 அணிகள் களம் காணுகின்றன.

ஒவ்வொரு அணி நிர்வாகமும் தேவையில்லாத வீரர்களை விடுவித்தும், அணிவியூகத்துக்கு ஏற்ப புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருப்பதால், என அணி வீரர்கள், கேப்டன்கள், பயிற்சியாளர்கள் கணிசமான அளவில்மாற்றங்கள் நடந்துள்ளன. முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். இறுதியாக 62 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

imageஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் 5 அணிகள் புதிய 5 கேப்டன்களுடன் களம் காணுகிறது. டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்'ஐ லக்னோ அணி அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அவரை அந்த அணியின் கேப்டனாக நியமித்தது. இதனால் டெல்லி அணியின் கேப்டனாக கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து கடந்த முறை கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் அய்யரை, பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து அவரை அந்த அணியின் கேப்டனாக நியமித்துள்ளது.

Malai Murasu

Dit verhaal komt uit de March 21, 2025-editie van Malai Murasu.

Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.

Bent u al abonnee?

MEER VERHALEN VAN Malai Murasu

Malai Murasu

கையில் ராக்கி கட்டிய தினமே 14 வயது தங்கையை கற்பழித்து கொலை செய்த கொடூரன் கைது!

தூக்கிட்டதாக நாடகமாடியது அம்பலம் !!

time to read

1 min

August 13, 2025

Malai Murasu

உள்ளங்கை அளவில் ஓர் எதிரி! நீர்!

இன்றைய காலகட்டத்தில் சில நேரம் உங்கள் கணவரின்கவனத்தைத் திருப்புவது சற்று சிரமம்தான். வீட்டில், வெளியில், உணவகங்களில், தொலைக்காட்சி பார்க்கும்போது, நாம் பேசும்போது, மணியோசை கேட்டு கைப்பேசியை கையில் எடுக்கும் கணவர் அந்த அழைப்பை அல்லது ஒரு குறுஞ்செய்தியை மட்டும் பார்த்துவிட்டு மறுபடியும் உங்களுடன் மனதளவில் இருக்கிறாா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஏனெனில், கைப்பேசியைக் கையில் எடுத்தவுடன் அடுத்தடுத்து அவர்கள் அதில் லயித்து தன்னிலை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

time to read

2 mins

August 13, 2025

Malai Murasu

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணி: 1,700 பேர் மட்டுமே தனியார் நிறுவனத்திடம் விடப்படுகின்றனர் ! போராட்டத்தை கைவிட அரசு அறிவுறுத்தல் !

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிக்கு தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப் பட்ட 2 மண்டலங்களில், மொத்தமுள்ள 3800 பணியிடங்களில் 1700 பணியாளர்கள் மட்டுமே தனியார் நிறுவனத்திற்கும், மீதமுள்ள பணியாளர்களை மாநகராட்சியில் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கானது என்பதால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

August 13, 2025

Malai Murasu

வடசென்னையில் காங்கிரசாரின் தொடர் உண்ணாவிரதம் முடித்துவைப்பு!

வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.

time to read

1 min

August 13, 2025

Malai Murasu

Malai Murasu

மருத்துவக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு!

காதலனும் இன்னொரு இடத்தில் தற்கொலை செய்தார் !!

time to read

1 min

August 13, 2025

Malai Murasu Chennai

அடுத்த மாதம் அமெரிக்கா...

வர்த்தக உறவில் நெருடல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பதகதா பொருளாதார நடவடிக்கையாகக் கருதுகிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க 25 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது. கூடுதலாக 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி இம்மாதம் 27-ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக அதிகரிக்கும்

time to read

1 min

August 13, 2025

Malai Murasu

Malai Murasu

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தி.மு.க.வில் சேர்ந்தார்!

எடப்பாடியின் முடிவுகளை அமித்ஷா எடுப்பதாக பேட்டி!!

time to read

2 mins

August 13, 2025

Malai Murasu

Malai Murasu

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!

ஆசிரியர் போக்சோவில் கைது!!

time to read

1 min

August 13, 2025

Malai Murasu

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

அதிபர் டிரம்பை சந்தித்து வரிவிதிப்புச் சிக்கல் குறித்தும் விவாதிப்பார் என தகவல்!!

time to read

1 mins

August 13, 2025

Malai Murasu

சென்னை கொளத்தூர் தொகுதியில் ‘அன்னம் தரும் அமுதக் கரங்கள் 175-ஆவது நாள் நிகழ்ச்சி!

அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு கலந்து கொண்டனர்!!

time to read

1 min

August 13, 2025