CATEGORIES
فئات
மல்யுத்த வீரர்களை பகடைக்காயாக்கியது காங்கிரஸ்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கைப்பற்ற வேண்டுமென்ற தங்களது சதித் திட்டத்துக்கு வீராங்கனை வினேஷ் போகாட், வீரர் பஜ்ரங்க் புனியாவைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியது காங்கிரஸ் என்று அந்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
கார்கிலை ஆக்கிரமித்தது பாகிஸ்தான் ராணுவம்தான்
இந்தியாவின் கார்கில் பகுதியை ஆக்கிரமித்து போரில் ஈடுபட்டதில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பங்கு கிரிப்பதை அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி அஸிம் முனீர் பொது நிகழ்ச்சி ஒன்றில் முதல் முறையாக ஒப்புக் கொண்டார்.
ஆசிரியர்களின் புத்தாக்க முயற்சிகளுக்கு அரசு துணை நிற்கும்
தலைசிறந்த ஆசிரியர்கள் கற்பித்தலில் மேற் கொள்ளும் புத்துணர்வு முறைகளை அரசு எப்போதும் துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்ட முயலும் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத்துக்கு புத்துயிரூட்ட காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் முயற்சிக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
இரு விபத்துகள்: 4 பேர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் சாலையில் நடந்து சென்ற தந்தை, மகள் மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.
முன்னேற்றப் பாதையில் செல்கிறது இந்தியா
பொருளாதாரத்தில் இந்தியா தொடா்ந்து முன்னேற்ற பாதையில் செல்கிறது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
விநாயகர் சதுர்த்தி: விதவிதமான சிலைகள் வைத்து வழிபாடு
சென்னையில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வாழைப்பூ, பாதுஷா, சங்கு, மயிலிறகு போன்ற பொருள்களை கொண்டு விதவிதமான விநாயகா் சிலை செய்து பொதுமக்கள் வழிபட்டனா்.
விநாயகர் சதுர்த்தி: 2 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையிலிருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு: ஆன்மிக பேச்சாளர் கைது
அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
புதுக் கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற 14 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஐஏஎஸ் பணியில் இருந்து பூஜா கேத்கர் நீக்கம்
இடஒதுக்கீட்டில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் தேர்ச்சி பெற்றது செல்வதாக யுபிஎஸ்சி கடந்த மாதம் அறிவித்த நிலையில், அவர் மத்திய அரசால் அதிகார பூர்வமாக சனிக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 6 பேர் சுட்டுக் கொலை
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த வன்முறையில் 6 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இந்தியா ‘பி' அணி 321-க்கு ஆட்டமிழப்பு
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 'பி' அணி முதல் இன்னிங்ஸில் 116 ஓவர்களில் 321 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உ.பி.யில் வேன் மீது பேருந்து மோதி விபத்து: 15 பேர் உயிரிழப்பு: 16 பேர் காயம்
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பேருந்து மீது வேன் மோதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.
தெலங்கானா காங்கிரஸின் புதிய தலைவர் மகேஷ் குமார் கௌட்
தெலங்கானாவில் ஆளும் கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவராக அக்கட்சியின் எம்எல்சி மகேஷ் குமார் கௌட் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
செபி தலைவர் மாதபியிடம் விசாரணை: 'நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்யும்'
பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவர் மாதபி புச்சை விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைப்பு விடுப்பது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்ய வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவரும், காங் கிரஸ் பொதுச் செயலருமான கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட் டவர்களை மீட்டு. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை மீட்பு
தமிழகத்தைச் சேர்ந்த பிற்கால சோழர் காலத்தில் செய்யப்பட்ட கலிய மர்த்தன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது
தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் தீவிர தூய்மைப் பணி
வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.
ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள்
சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) நிகழாண்டு பயிற்சி முடித்து ராணுவ அதிகாரிகளாக இணையவுள்ள இளம் அலுவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடை பெற்றன.
பள்ளிகளில் நிகழ்ச்சிக்கு புதிய வழிமுறைகள்
அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வெளியிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
திருமணவயல் தியானப் பிள்ளையார்...
ஆதிசங்கரர் அருளிய ஆறு வகையான வழிபாட் டில் விநாயகர் வழிபாடும் ஒன்றாகும்.
குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க சீனா தடை
தங்கள் நாட்டு குழுந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளது.
இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு
ஜொ்மனியின் மியூனிக் நகரில் இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே போலீஸாா் மீது வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
வரலாற்று பதக்கம் வென்ற ஹர்விந்தர், தரம்பிர், கபில்
பாராலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கம் கிடைக்க, கிளப் த்ரோ, ஜூடோவில் முதல் முறையாக பதக்கம் கிடைத்துள்ளது.
மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்
‘சிந்துதுா்க் மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த சம்பவம், பண மதிப்பிழப்பு, விவசாயிகள் விரோத மசோதாக்கள் உள்ளிட்டவைக்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் பிதரமா் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
'தூய்மை இந்தியா' திட்டத்தால் பொது சுகாதாரத்தில் மாற்றம்-பிரதமர் மோடி
பொது சுகாதார கட்டமைப்பில் ‘தூய்மை இந்தியா திட்டம்’ பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமா் மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஜிஎஸ்டியில் மாற்றம்: ஆலோசனைகளை வரவேற்கிறோம்-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டுவருவது குறித்த சிறந்த ஆலோசனைகளை திறந்த மனதுடன் வரவேற்பதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது; அதை அனைவரும் ஏற்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக்கொண்டாா்.