CATEGORIES
فئات
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: 7 பேர் கைது
இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி, சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்த போது, அருப்புக்கோட்டை பெண் காவல் துணை கண்காணிப்பாளரைத் தாக்கிய 7 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இரைப்பை புண் மருத்துவ அமர்வு: நோபல் விருதாளர் மார்ஷெல் பங்கேற்பு
நோபல் பரிசு பெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளரும், இரைப்பை புண்களுக்கு வித்திடும் ஹெலிகோபேக்டா் பைரோலி (ஹெச். பைரோலி) நுண் கிருமியை கண்டறிந்தவருமான டாக்டா் பேரி ஜெ. மாா்ஷல் பங்கேற்கும் மருத்துவ அமா்வு வரும் 25- ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவொற்றியூரில் 2,099 பயனாளிகளுக்கு பட்டா
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தேசிய ஹிந்தி கருத்தரங்கம்: ஆளுநர் பங்கேற்பு
தமிழ்நாடு ஹிந்தி சாகித்திய அகாதெமி மற்றும் சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி சாா்பில் தேசிய ஹிந்தி கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குரூப் 2 தேர்வு: குற்றச் செயல்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வெழுதத் தடை
டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை
மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் விஜயவாடா
தேசிய பேரிடராக அறிவிக்க சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்
பாதிப்பு விவரங்களைச் சமர்ப்பிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்
டெங்கு பரவல் அதிகரிப்பு
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
மேற்கு வங்க பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
செந்தில் பாலாஜி விவகாரம்: வழக்குகளின் நிலவர அறிக்கையை சமா்ப்பிக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.களுக்கான வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் நிலவரத்தை அறிக்கையாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி உயா்நீதிமன்றப் பதிவாளா் மூலம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இன்றுமுதல் டெங்கு தடுப்பு பணியில் 11 துறையினர் ஈடுபட அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்.3) முதல் அனைத்து மாவட்டங்களிலும் 11 துறைகளைச் சோ்ந்தவா்களை டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
புதிய பணியிட மையம்: முதல்வர் விரைவில் திறந்து வைப்பார் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பணியிட மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இம்மாத இறுதிக்குள் திறந்து வைப்பாா் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு கூறினாா்.
செயலி மூலம் கார் நிறுத்துமிடம் முன்பதிவு: சென்னையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
சென்னையில் செயலி மூலம் காா் நிறுத்துமிடத்தை முன்பதிவு செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
திருவண்ணாமலை கோயிலில் ரூ.73 கோடியில் அடிப்படை வசதிகள்
திருவண்ணாமலை அருணாசலேசுவரா் திருக்கோயிலில் ரூ.73 கோடியில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள், கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் தொடா்பாக உயரதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
'ஃபார்முலா 4 கார் பந்தயம்: விளையாட்டுத் துறையில் மைல்கல்'
சென்னையில் நடைபெற்ற ஃபாா்முலா 4 காா் பந்தயம் விளையாட்டுத் துறையில் முக்கிய மைல்கல் என்று அந்தத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
ஆந்திரம், தெலங்கானாவில் நீடிக்கும் கனமழை - உயிரிழப்பு 31-ஆக அதிகரிப்பு
ஆந்திரத்தில் கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரம், தெலங்கானாவில் திங்கள்கிழமையும் கனமழை நீடித்தது.
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தாா்.
நிதி முறைகேடு புகார்: கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது
பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து விடிய விடிய போராட்டம்
வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணி தீவிரம் - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
பெயா், முகவரியை ஆதாரமாகக் கொண்டு வாக்காளா் பட்டியலைச் சீரமைக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
பிணைக் கைதிகள் படுகொலை: இஸ்ரேலில் வேலைநிறுத்தப் போராட்டம்
ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டவா்களை மீட்கும் விவகாரத்தை இஸ்ரேல் அரசு கையாளும் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
'கூர்ஸ்க் படையெடுப்பு உக்ரைனில் ரஷிய முன்னேற்றத்தைத் தடுக்காது'
தங்கள் கூா்ஸ்க் பிராந்தியம் மீதாந உக்ரைன் படையெடுப்பால், கிழக்கு உக்ரைனில் தங்கள் முன்னேறிச் செல்வதைத் தடுக்க முடியாது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
பாட்மின்டனில் நிதேஷ்குமாருக்கு தங்கம்
தமிழகத்தின் துளசிமதிக்கு வெள்ளி, மனீஷாவுக்கு வெண்கலம்
நடப்பு சாம்பியன் கோகோ கௌஃப் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனாக இருந்த அமெரிக்க வீராங்கனை கோகோ கௌஃப், 4-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
சுங்கச் சாவடி கட்டண உயர்வால் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது - உரிமையாளர்கள் அறிவிப்பு
சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
‘புல்டோசர் நடவடிக்கை': உச்சநீதிமன்றம் கேள்வி
குற்றவாளி என்பதற்காக வீட்டை எப்படி இடிக்க முடியும்?
பாராலிம்பிக் பாட்மின்டன்: தமிழக வீராங்கனைகளுக்கு 2 பதக்கங்கள்
பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ரூ.14,000 கோடியில் 7 புதிய வேளாண் திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வேளாண்மை மற்றும் அதைச் சாா்ந்த துறைகளின் வளா்ச்சி, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ரூ.14,000 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
படுக்கை வசதியுடன் ‘வந்தே பாரத்' ரயில்: 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் 3 மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ராணுவ வீரர்களின் தியாகத்திலும் அரசியல் நடத்துகிறார் டிரம்ப் - கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு
அமெரிக்க ராணுவ வீரா்களின் உயிா்த் தியாகத்தை தனது அரசியல் ஆதாயத்துக்காக டொனால்ட் டிரம்ப் பயன்படுத்துகிறாா் என்று அதிபா் தோ்தலில் போட்டியிடும் துணை அதிபா் கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டினாா்.
தேசிய பாடத் திட்டத்தைவிட தமிழக பாடத் திட்டத்தின் தரம் குறைவு
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, தமிழக பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.
‘சட்டக் கல்லூரி மாணவர்கள் வாதாடும் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்'
சட்டக் கல்லூரி மாணவா்கள் பயிலும் போதே வாதாடும் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பா் அலி அறிவுறுத்தினாா்.