CATEGORIES
Kategorier
மண்சரிவு அபாயத்தால் 201 பேர் வெளியேற்றம்
மண்சரிவு அபாயம் காரணமாக லுணுகல மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 67 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் (30ஆம் திகதி இரவு) அவர்களது இருப்பிடங்களில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தந்தையின் கட்சி பதவிகளை வீட்டு விலகினார் மகன்
தேசிய காங்கிரஸின் உதவி செயலாளர் நாயகமும், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் முதல்வருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் புதல்வர், அதாஉல்லா அஹமட் சகி தனது தந்தையின் கட்சியின் சகல பொறுப்புகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
"போராட்டங்களை நசுக்க முடியாது"
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிகளை வைத்து எமது உரிமைப் போராட்டங்களை நசுக்க முடியாது என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மலையக மக்களை கௌரவித்து இந்தியாவில் முத்திரை வெளியீடு
இந்தியாவில் இருந்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்திய மத்திய அரசாங்கத்தினால் சனிக்கிழமை (30) விசேட முத்திரையொன்று வெளியிடப்பட்டது.
தட்டம்மை தடுப்பூசி ஜனவரி 6 ஏற்றப்படும்
தேசிய தட்டம்மை தடுப்பூசி திட்டத்திற்கு சமாந்தரமாக கண்டி மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் திகதி தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் கிஷாந்த சமராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையணித் தலைவராக ஹஸரங்க
இலங்கையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக தசுன் ஷானகவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
“போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும்"
ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.
ரஷ்யா மது ா ஏவுகணை தாக்குதல்; 21 பேர் பலி
உக்ரேன் - ரஷ்யா இடையேயான போர் 676ஆவது நாளாக நீடித்து வருகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
சுவ திவிய நிறுவனத்தின் முதலாவது பொது நிகழ்ச்சித்திட்டம் நிறைவேற்றம்
நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமான Suva Diviya நிறுவனம், இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தினால் “Unmask Diabetes\" என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு சிறப்பு பொது நிகழ்ச்சியை நடத்தியது, இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு
கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான விவசாய உற்பத்தி மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் \"முஸ்லிம் எய்ட்” அமைப்பினால் விவசாய உபகரணங்கள் (29) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கண்ணீர் கடலில் மிதக்கும் தமிழகம்
அரசியல் தலைவர்களின் அஞ்சலி
MH370 விமானத்தை கண்டுபிடிக்க புது திட்டம்
கடந்த 2014, மார்ச் 8ஆம் திகதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது.
டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்
இந்நிலையில், டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
காசா மக்களுக்கு தற்காலிக விசா
ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் இராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்
ஆவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.
விஜயராஜ் எனும் விஜயகாந்த்
சினிமா, அரசியல் என முன்னணி துறைகளில் தவிர்க்க முடியாத பல சாதனைகளைச் செய்தவர் விஜயகாந்த்.
சின்ன இங்கிலாந்து வெள்ளத்தில் தத்தளிப்பு
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக நுவரெலியாகந்தப்பளை பகுதியில் அதிக தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: நடுவில் வந்தவரால் பரபரப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறும் விவகாரம் தொடர்பாகப் பேசப்பட்டபோது, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
‘கேப்டன் விஜயகாந்த்' கொரோனாவில் மரணம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (28) காலை காலமானார் இறக்கும் போது அவருக்கு வயது (71).
வலுவான நாட்டை கட்டியெழுப்ப இலங்கையர்களாக முன்வர வேண்டும்
முஸ்லிம் மார்க்கக் கல்வி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு
2004 சுனாமி பேரலையில் சிக்கியோரில் 137 பேரில் உடல் பாகங்கள் இன்னும் இருக்கின்றன
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இனந்தெரியாத 137 பேரின் உடற் பாகங்கள் காலி, கராபிட்டியவில் உள்ள மருத்துவ பீடத்தின் தடயவியல் மருத்துவப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்தை இரத்து செய்ய முஸ்தீபு
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக தொழிலாளர் போராட்ட மையம் தெரிவித்துள்ளது.
6 பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச
6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் வியாழக்கிழமை (28) முதல் அமுலுக்கு வரும் எனவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்கான தேவை குறைந்தது
இலங்கையில் எரிபொருளுக்கான தேவை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“தடுக்க, நிறுத்த தவறின”
நீதித்துறையின் தீர்மானத்தின்படி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்தால், பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு திருச்சபை தயாராக உள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
'யுக்திய'வில் ,422 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையான யுக்தியவையில் 1,422 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 35 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றுமொரு கொரோனா மரணம் பதிவானது
சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் - நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்
மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று வியாழக்கிழமை (28) காலை கரை ஒதுங்கியுள்ளது.
மலையகத்தில் பாரிய மண்சரிவு வடக்கு, கிழக்கில் வான் பாய்கிறது
நாட்டின் பல பாகங்களிலும் தற்போது நிலவுகின்ற, சீரற்ற வானிலையால், மலையகத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தாழ்நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
கொடுப்பனவுகளை கொடுக்காவிடின் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவர்
மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை