CATEGORIES
Kategorier
“அந்தப் பெண்மணியை நான் மன்னித்துவிட்டேன்”
யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த 2004ஆம் ஆண்டு, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், அவசரகாலச் சட்டவிதியின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு தரை வழி
யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு: மோடியுடன் பேசியுள்ளதாக கூறினார்
“வடக்கில் சிவில் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரச்சினையை தீர்ப்பேன்"
வடமாகாணத்திற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ்.
யுவதியின் சடலத்தை தோண்டி நிர்வாணமாக்கி வீசிய அவலம்
நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர், சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி எடுத்து, சடலத்தின் ஆடைகள் அத்தனையையும் கழற்றி நிர்வாணமாக விட்டுச் சென்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இறுதி எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
ஹமாஸூக்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் : முன்னிலையில் அவுஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
இந்தியாவுக்கு 78 ஓட்டங்கள் தேவை
தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைச் சமப்படுத்த
இலங்கை குழாமில் அவிஷ்க, தனஞ்சய, வன்டர்சே
சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் அவிஷ்க பெர்ணாண்டோ, ஜெஃப்ரி வன்டர்சே, அகில தனஞ்சய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
"பெற்றோருக்கு இனி அனுமதி கிடையாது”
ரித்தானியாவில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
இறப்பர் விவசாயிகளின் குழந்தைகளின் : கல்விக்கு சியெட் ஆதரவு
சியெட் களனி ஹோல்டிங்ஸ், அதன் விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கமான இறப்பர் விவசாயிகளின் குழந்தைகளின் கல்வியை ஆதரிப்பதற்காக ஒரு புதிய சமூகத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
"ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்க”
திருகோணமலை ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களது எதிர்காலம் நிச்சயமற்றதாக காணப்படுவதாகத் த தெரிவித்து வியாழக்கிழமை (04) திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமூக ஆர்வலர்கள் முறையிட சென்றுள்ளனர்.
“சுண்ணக்கல் அகழ்வு நடைபெற்றால் பல கிராமங்கள் அழிவடையும்”
பொன்னாவெளி மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்த உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர திசநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழக மீனவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதிய நிதி: 100% வரை அதிகரிப்பு
சில நோய்களுக்கும் மருத்துவ உதவி கண் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ உதவி குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி மாத வருமான வரம்பு 02 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பு
பாராளுமன்றம் கலைக்கப்படுமா?
இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
நாட்டைப் பற்றி சிந்திக்கும் பயணத்திற்காக "அனைவரும் ஒன்றிணைவோம்"
வரப்பிரசாதங்கள், சலுகைகள், தனிப்பட்ட நன்மைகள், அதிகார பதவிகள் மற்றும் அரசியல் பங்குகளின் அடிப்படையிலான அரசியல் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முற்றாக நிராகரித்துள்ளன எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தங்களைப்பற்றி அல்லது நாட்டை பற்றி சிந்திக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
குற்றச் செயல்களை ‘யுக்திய' தூண்டுகிறது
பெற்றோர்கள் இருவரும் கைது செய்யப்படும்போது, அவர்களது வீடுகளில் பாதுகாப்பற்ற நிலையில், சிறுவர்கள் பாதாள உலகத்தில் சேர்வததற்கும், பெண்களை விபச்சாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 'யுக்திய' நடவடிக்கை வழிவகுக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க புதன்கிழமை (03) தெரிவித்துள்ளார்.
போதகரின் போதனையால் ஏழு பேர் மர்மமாக மரணம்
கடந்த சில நாட்களில் பதிவாகிய ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காணி மோசடிகள்: நொத்தாரிசுகள் ஐவருக்கு முன்பிணை
யாழ்ப்பாணத்தில், கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளு டன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன்பிணை பெற்றுள்ளனர்.
சிலருக்கு பிரவேசிக்க தடை
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்டோர் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி வளாகங்களுக்குள் பிரவேசிக்கத் தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (04) உத்தரவு பிறப்பித்துள்ளது.
மூன்று நாட்களில் 282 பேருக்கு டெங்கு
யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்து முதல் மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளதாக யாழ்.
நொத்தாரிசுகள் ஐவருக்கு முன்பிணை
தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன இந்நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியும், நொத்தாரிசுமானவரை ஐந்து இலட்ச ரூபாய் சரீர பிணையில், யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்று புதன்கிழமை (03) முன் பிணை வழங்கியுள்ளது.
தாலியை அறுத்த இருவர் சிக்கினர்
யாழ்ப்பாணத்தில் தேன் விற்பனையில் ஈடுபடுவது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் பெறுமதியான தாலியை அறுத்து சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
"109 ஐ அழுத்தவும்”
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இராணிவத்தையில் தீ: மூன்று வீடுகள் கருகின
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை பெரிய இராணிவத்தை தோட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டு மூன்று வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்லடுக்கு பாதுகாப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மகஜர் சிலருக்கு நீதிமன்றத்தால் தடை விதிப்பு
பெட்ரோல் தட்டுப்பாட்டால் குதிரையில் உணவு விநியோகம்
தெலுங்கானா மாநிலத்தில் டேங்கர் லொறிகள் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஞானவாணி-அறநெறி பொறுப்பாசிரியர் முதலிடம்
\"மகிழைக் கவிக்கு” மட்டக்களப்பு மாவட்ட பாடல் ஆக்கப் போட்டியில் இரத்தினபுரி மாவட்டம் காவத்தை- தலுகலை ஞானவாணி அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியரும் கவிஞரும் ஆன்மீக பிரசாரகருமான தட்சணாமூர்த்தி சசிகாந்தன் முதலிடம் பெற்றுள்ளார்.
ஹமாஸின் முக்கிய தலைவர் பலி
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நிலநடுக்கத்தால் நகர்ந்த ஜப்பான் நிலப்பரப்பு
ஜப்பானில் ஆங்கில புத்தாண்டு தினமான 2024 ஜனவரி முதலாம் திகதியன்று ரிக்டரில் 7.5 அளவில் நிலநடுக்கம் பதிவானது.