CATEGORIES
Kategorier
சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வையாளருக்கு மீண்டும் விளக்கமறியல்
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
தணிக்கை சபை ரத்து
பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஆக்கப்பூர்வ உரிமைகளைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு பொது அரங்கக்கலை வகைப்படுத்தல் சட்ட வரைவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர் குழுவினால் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
சர்வதேச மாநாடுகளில் உரையாற்ற உகண்டா பயணமானார் ஜனாதிபதி
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் 677 மற்றும் சீனாவின் 3ஆவது தென் மாநாடு என்பவற்றில் (3rd South Summit of the Group of 77 & China) பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டாவுக்குகான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
மாவீரர் துயிலும் இல்லம் சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து சுவீகரிப்பதற்கான இராணுவத்துக்கு நில அளவீட்டு பணி வியாழக்கிழமை (18) இடம்பெறவிருந்த நிலையில், குறித்த அளவீட்டு பணிகள் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
குருந்தூர் மலையில் இரகசிய பேச்சு
இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து குருந்தூர்மலை ஆலயம் சார்ந்தவர்கள் என கூறிக்கொள்ளும் சிலருக்கும், பௌத்தமத குருமார்களுக்கும் இடையில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
பராமரிப்பு மையத்துக்கு தேசிய கொள்கை
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பகல் நேரப் பராமரிப்பு மைய வசதிகள் பற்றிய தேசியக் கொள்கை தொடர்பில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
"பழைய சட்டத்தை மீள அமுல்படுத்த வேண்டும்"
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதைத் தடுக்கும் விதிமுறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
“வற் சான்றிதழை காட்சிப்படுத்தவும்”
வருடாந்தம் 80 மில்லியன் ரூபாய் இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபார நிலையங்களும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரியில் (வற்) பதிவு செய்யப்பட வேண்டும்.
மரக்கறிகளின் விலைகள் “ஏப்ரல் வரை குறையாது”
காலநிலை மாற்றம் காரணமாகவே மரக்கறி பயிர்செய்கைக்கு பாதிப்பு. மரக்கறிகளின் விலை உயர்வு தொடர்பில் யாரும் குழப்பமடைய தேவையில்லை.
"ஜனாதிபதியாக பதவியேற்றார் அனுர"
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, சமூக வலைத்தளங்களின் ஊடாகவே நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று விட்டார் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
சிறுமி துஷ்பிரயோகம்: பூசகருக்கு கடூழிய சிறை
சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை எட்டு வருடங்களுக்கு பின்னர் குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம், குற்றவாளிக்கு 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கெதிரான தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
அயோத்தி ராமருக்கு பிரமாண்ட லீட்டு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்வதற்காக சுமார் 1,265 கிலோ கிராம் எடையுள்ள லட்டு தயாரித்துள்ளார்.
சேவல் சண்டையால் ஏ.ரி.எம்.களில் பணம் தட்டுப்பாடு
ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 3 நாட்களாக சேவல் சண்டைகள் களைகட்டி உள்ளது.
குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் முன்னிலையில் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.
"ஒவ்வொருவரும் பசியில் தவிக்கிறார்கள்”
கடந்த 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி தொடங்கி ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் பலஸ்தீன காசா பகுதியில் தொடுத்துள்ள போர், 100 நாட்களை கடந்தும் தீவிரமடைந்து வருகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக முன்னிலையில் அவுஸ்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
இரண்டாவது போட்டியில் இலங்கையை வென்ற சிம்பாப்வே
இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியை சிம்பாப்வே வென்றது.
“எங்களின் பிரதான எதிரி தென் கொரியா”
வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un). \"சுப்ரீம் பீபிள்'ஸ் அசெம்பிளி\" எனும் வட கொரிய பாராளுமன்றத்தில் கிம் உரையாற்றினார்.
இந்தியாவில் இந்தி கற்பதற்கு உதவித்தொகை
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2024-2025ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வுக்கு, ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தானில் (இந்தி மத்திய நிறுவனம்) இந்தி படிப்பதற்காக இலங்கை நாட்டவர்களுக்கு உதவித்தொகையை வழங்குகிறது.
தமிழ் பண்னையாளர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை “அரச இயந்திரம் பாராமுகம்
தவிசாளர் நீரோஸ் கடும் குற்றச்சாட்டு
தவணை பிந்தியது
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் அடுத்த பாடசாலை தவணை பெப்ரவரி 5ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடுவன்களுக்கு கருத்தடை
மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஆண் குரங்குகளுக்கான கருத்தடை திட்டத்தை வெகு விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
மீன் குஞ்சிகளுடன் இந்தியர்கள் I8 பேர் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய கடற்றொழிலாளர்கள் 18 பேர், செவ்வாய்க்கிழமை மாலை (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘யுக்திய’வுக்கு ஆசி வேண்டி நல்லூரில் விசேட வழிபாடு
நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு விசேட செயற்றிட்டமான ‘யுக்திய’ நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிஸார் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
“சீர்குலைக்க சில தரப்பினர் முயற்சி"
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தவிர, வேறு மாற்று வழியில்லை எனவும், எனவே அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து அந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை “நாங்கள் ரத்து செய்வோம்"
\"உண்மையான நிகழ்நிலை பாதுகாப்பிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
தனியார் வகுப்புகளுக்கு 30 சதவீதம் செலவு
தற்போதைய போட்டிக் கல்வி முறைமையில் அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் தொகையை விட பெற்றோர்கள் 30 சதவீதம் அதிகமாக தனியார் வகுப்புகளுக்காக செலவிட வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
முதுகெலும்பில்லாத அரசாங்கம் “தேர்தல்கள் தொடர்பில் தம்பட்டம் அடிக்கிறது"
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற செய்தியைப் பரப்பி மக்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து ஜனாதிபதி எடை போட்டு வருகிறார்.
13 வருடங்கள் இலவசமாக சாப்பாடு கொடுத்தவரை கொத்திய யாசகர்
சுமார் 13 வருடங்களாக பகலுணவை இலவசமாகக் கொடுத்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவியை கத்தியால் கொத்திய யாசகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.