CATEGORIES
Kategorier
ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த கடற்படை
ராமேஸ்வரம், கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டது
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் நெடுநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மு.காவின் மனு மீது இன்று விசாரணை
பாராளுமன்றத்தில் கடந்த ஜனவரி 10ஆம் திகதி கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு எதிராக 36 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்திருக்கும் மனு திங்கட்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கைது செய்யாவிடின் 'யுக்திய' வினால் முடியாது
இலங்கை முழுவதும் தற்போது அமுல்படுத்தப்படும் 'யுக்திய' செயற்பாடு மிகச் சிறந்த வேலைத்திட்டம் எனவும், அதனை முறையான முறையில் மேலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஆசிய மனித உரிமைகள் பேரவையின் தலைவரும், பூகோள அமைதிகாக்கும் பெடரல் சபையின் இலங்கைப் பிரதிநிதியுமான கலாநிதி திமுத்து பாலசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்த மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர்
இலங்கை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்களாகவே பெரும்பாரும் காணப்படுகின்றன என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே பாதிக்கப்பட்டு இச்சட்டத்தின் வலியை உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறினார் கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக நீதி வேண்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் சனிக்கிழமை (27) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சீன அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்படும் "1,996 வீடுகளின் திட்டத்தை விரைவுபடுத்தவும்”
குறைந்த வருமானம் பெறுவோர், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 1,996 வீடுகளின் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.
நவம் மீது தாக்குதல்
தமிழரசுக் கட்சியின் பொது நிர்வாக சபையின் உறுப்பினரும் ஊடகவியலாளரும் திருகோணமலை நவம் மீது மற்றுமோர் உறுப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
கரட்டின் விலை 50 ரூபர்வால் குறைந்தது
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலையில் கரட் விலை 50 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மானிய விலையில் தேயிலை உரம்
தேயிலை செய்கையின் விளைச்சலை அதிகரிக்க மானிய விலையில் தேயிலை உரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் திங்கட்கிழமை (29) கைச்சாத்திடப்படவுள்ளது.
ஜனாதிபதிக்கு “முதுகெலும்பு இல்லை"
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ஏன்? என்பதற்கு விளக்கமளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், இது புதுமையான அரசாங்கம் இது.
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் ஆண்டின் சிறந்த வீரராக சூரியகுமார் யாதவ்
இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளில், ஆண்டின் சிறந்த வீரராக இந்தியாவின் சூரியகுமார் யாதவ் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகத் தெரிவாகியுள்ளார்.
கருவறைக்கு சென்ற அனுமன்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் திங்கட்கிழமை (22) முடிந்த நிலையில், அதன் கருவறையில் நடந்த சுவாரசிய சம்பவம் தொடர்பிலான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கொசு வலை கவுன்சிலர்
திருமுருகன் பூண்டி நகராட்சி கூட்டம் புதன்கிழமை (25) நடந்தது. நகர்மன்றத் தலைவர் குமார் தலைமை வகித்தார்.
கோப்பா டெல் ரே தொடர்: பார்சிலோனா அவுட்
ஸ்பானிய கோப்பா டெல் ரே தொடரிலிருந்து பார்சிலோனா வெளியேற்றப்பட்டுள்ளது.
மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
“ஓய்வு பெறுவதாக தான் அறிவிக்கவில்லை”
குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தான் அறிவிக்கவில்லை என்று இந்தியாவின் பிரபலமான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்றாகும்
இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்றாகும் (ஜனவரி 25), இதனை முன்னிட்டு, பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
2024 இல் Daraz இன் முதல் இலவச விநியோக கொண்டாட்டம் அறிமுகம்
ஒன்லைன் e-வணிக கட்டமைப்பான Daraz, புத்தாண்டை வரவேற்கும் வகையில், முதன்முறையாக Daraz இலவச விநியோக கொண்டாட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 2024 ஜனவரி 27ஆம் திகதி முதல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு நவநாகரீகம், அழகுசாதனப் பொருட்கள், வீட்டு மற்றும் அலங்காரப் பொருட்கள் மற்றும் பல மில்லியன் கணக்கான பொருட்களை இலவசமாக விநியோகித்துக் கொள்ளக்கூடிய வசதியை அனுபவிக்க முடியும்.
Business Today TOP 40 2022 - 2023 இல் SLT-MOBITEL
SLT-MOBITEL, Business Today's TOP 40 2O22-2O23 தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்ட தொலைத்தொடர்பாடல் தொழிற்துறையைச் சேர்ந்த நிறுவனமாக ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
“வீண் செலவு செய்யும் அளவுக்கு இ.தொ.கா வளர்ந்து விட்டது"
மலையக அரசியலிலே, மக்கள் பணத்தில் கொண்டாட்டம் நடத்துவதும், வீண் விரயம் செய்வதும் புதியதொன்றல்ல.
மாவீரர்களுக்கு விளக்கேற்றிய விவகாரம்: த.தே.ம. முன்னணி அமைப்பாளர் அவரது மகனுக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர், அவரது மகன் உட்பட்ட இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டு.
கந்தகாட்டில் இருந்து 50 கைதிகள் தப்பியோட்டம்
வெலிகந்தை - கந்தகாட்டு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அங்கிருந்து 50 கைதிகள் புதன்கிழமை (24) இரவு தப்பியோடிவிட்டனர்.
“உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும்"
இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இரவில் கடுங் குளிர்: பகலில் துகள் பனி
சுரேன், செ.தி.பெருமாள் நுவரெலியாவில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.
மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க “கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்கவும்”
மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா - இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே தமிழக முதல்வர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் கோரம் இராஜாங்க அமைச்சர் நிஷாந்த பலி
பாதுகாப்பு உத்தியோகத்தரும் மரணம்
இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கிறது: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா மேற்கிந்தியத் தீவுகள்?
அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பிறிஸ்பேணில் பகலிரவுப் போட்டியாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
135 குழந்தைகளுக்கு ராமர், சீதை பெயர்கள்
அயோத்தியில் ராமர் கோயிலின் தாக்கம் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
இந்தியா எதிர் இங்கிலாந்து: இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, ஹைதரபாத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.