CATEGORIES
Kategorier
“வெட்கம் இல்லை”
ராஜபக்ஷர்கள், யுத்த வெற்றியை முதன்மையாகக் கொண்டு நாட்டின் உரிமையை எழுதி எடுத்தது போல, வெட்கமின்றி ஐ.தே.கவின் தலைமைத்துவத்தை எழுதி எடுத்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கத் தயாராகி வருவதாக அவருக்கு நெருங்கிய பத்திரிகைகள் ஊடாக பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
"நான் தயார்”
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
"வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து கவனம் செலுத்த உள்ளோம்"
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பங்காளர் அமைப்பான AHRC நிறுவன பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரமுகர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் திங்கட்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.
கடைத்தொகுதிகளை அமைக்க ஆளுநர் உறுதி
கடந்த 28ஆம் திகதி இரவு தீயினால் எரிந்து நாசமான மாவனல்லை பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தைச் சுற்றி உள்ள சுமார் 30 கடைத்தொகுதிகளின் நிலைமைகளை சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஏழு குடியிருப்பாளர்களுக்கு 20,000 ரூபாய் தண்டப்பணம்
யாழ்ப்பாணம்-கொக்குவில் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த ஏழு குடியிருப்பாளர்களுக்கு தலா 20, 000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
யானை - மனித மோதலை தடுக்ககோரி மனுத் தாக்கல்
யானை-மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மோசடி செய்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பில் விவசாயிகளிடமிருந்து சட்டவிரோத கள்ள தராசு மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்ட 8 வியாபாரிகள் மீது புதன்கிழமை (07) வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டுத் திணைக்கள பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்
வீதி மின் விளக்குகளை களவாட முயன்ற கும்பலை தடுக்க முற்பட்ட, சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடர்: இறுதிப் போட்டியில் ஐவரி கோஸ்ட், நைஜீரியா
தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐவரிகோஸ்ட், நைஜீரியா ஆகியன தகுதி பெற்றுள்ளன.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார்.
'மிஸ் ஜப்பான்' பட்டத்தை திரும்ப அளித்து பெண்
கடந்த ஜனவரி 22ஆம் திகதி அன்று ஜப்பானில் நடைபெற்ற 'மிஸ் ஜப்பான்' போட்டியில், கரோலினா ஷினோ எனும் 26 வயது இளம் பெண் பட்டத்தை வென்றார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மனு மீது 15ஆம் திகதி தீர்ப்பு
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி அமுலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலங்கைதான் அதிக மின்சார கட்டணத்தை வசூலிக்கிறது
இலங்கை மின்சார சபை மக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணம் மற்றும் திறைசேரியிலிருந்து பெறும் மானியம் மூலமும் தனது உற்பத்தி செலவினை சமப்படுத்துமென வாக்குறுதி வழங்கியுள்ளது
நிகழ்நிலை காப்புச் சட்டம் "வியாக்கியானங்களை புறக்கணித்தே நிறைவேற்றம்"
அரசியலமைப்புக்கு முரணான செயற்பாட்டுக்கு சபாநாயகர் சிம்மாசனத்தில் அமர்ந்தவாறு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களைப் புறக்கணித்தே நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வஜிரவின் ஆசை
ஒரு வருடமும் எட்டு மாதங்களில் நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு சென்ற ஜனாதிபதிக்கு பன்னிரெண்டு வருடங்கள் நாட்டை ஒப்படைத்தால் ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக மாற்றுவது ஒரு சிறிய விடயம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
"சில குறைகளுக்காக தீயிலிட முடியாது"
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் ஒருசில குறைபாடுகள் உள்ள தற்காக முழுச் சட்டத்தை யும் தீயிலிட முடியாது.
இந்தியா செல்கிறார் சஜித்?
எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், இந்தியாவின் உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் "நிச்சயம் வெல்வார் முதலில் கலைப்பார்"
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிச்சயம் வெற்றிப்பெறுவர் எனத் தெரிவித்துள்ள, ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா, ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர், முதலில் பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தல் நடத்துவார் என்றார்.
500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முஸ்தீபு
சர்வதேச விமான நிலைய யாழ்ப்பாணம் விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க பல்வேறு தரப்புக்களும் தீர்மானித்து உள்ளன.
கெஹலியவுக்கு ஒட்சீசன்: இந்திய மருந்து மட்டுமே
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு மருந்துகளுக்கு அப்பால் ஒட்சீசன் வழங்கப்படுகின்றது என சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
விமல் அணியின் எம்.பியாக ஜகத் பியங்கர பதவிப்பிரமாணம்
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட எம்.பி.யாக ஜகத் பியங்கர சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணாமல் "முன்னேற்ற முடியாது"
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடன உரையில் 'இனப்பிரச்சினைக்குத் தீர்வு' என்ற ஒரு வார்த்தை கூடக் கிடையாது.
துணை இராணுவ படைகளில் 41,606 பெண்கள்
பாதுகாப்பு படை
முதலாவது டெஸ்டில் - தென்னாபிரிக்காவை வென்ற நியூசிலாந்து
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மௌன்ட் மகட்டரேயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் 281 ஓட்டங்களால் நியூசிலாந்து வென்றது.
“விளையாட்டு துறையை ஊக்குவிப்பது நமது கடமை”
மட்டக்களப்புகிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவபுரம் விளையாட்டு மைதானம் பல இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனினால் புதன்கிழமை (07) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
படையெடுக்கும் காட்டு யானைகளால் - அச்சத்தில் விவசாயிகள்
மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேசத்தில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், புதன்கிழமை (07) காலை காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மறுத்தார் கெஹலிய
சுகாதார அமைச்சரும் பொதுஜன பெரமுன
கெஹலியவுக்கு மற்றுமொரு தலையிடி
கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயரில் கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்த பெயரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு - “அரசியல் தீர்வுகள் இல்லை”
நெருக்கடி 'முகாமைத்துவத்தில் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்? தங்களுக்குத் தாங்களே ஒளியாக வாழ வேண்டும்.
சஜித்துடன் தயா சந்தகிரி
முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் பதவி நிலை பிரதானியுமான அட்மிரல் தயா சந்தகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.