CATEGORIES
Kategorier
தோணி கவிழ்ந்ததில் இருவர் பலி
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பகுதியை சேர்ந்த இருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கியதில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை (14) சிறியால் ஓடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்திய-இலங்கை கூட்டாண்மை
இலங்கையில் அரச துறையின் திறனை கட்டியெழுப்ப
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பான தெளிவூட்டல்
காத்தான்குடியில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பான தெளிவூட்டல்
நலன்புரி நன்மைகள் பிரிவு திறப்பு
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அசுவெசும் நலன்புரி நன்மைகளைப் பொதுமக்களுக்கு இலகுவாகப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் \"நலன்புரி நன்மைகள் பிரிவு\" இன்று கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
தனிநபர் உரிமைகளை பாதுகாக்க "விரைவில் விதிமுறை"
தனிப்பட்ட தரவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்களால் தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும் என தரவு பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.
இலங்கைக்கெதிரான தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் முஜீப், ரஷீட இல்லை
இலங்கைக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் முஜீப் உர் ரஹ்மான், ரஷீட் கான் ஆகியோர் இடம்பெறவில்லை.
"ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்"
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தனது நாட்டின் ஆயுத பலத்தை அதிகரித்து அச்சுறுத்துவதாலும், பதில் நடவடிக்கையாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சிகளை தீவிரப்படுத்துவதாலும் கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
"எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்"
பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால், தேர்தலில் எந்த கட்சிக்கும் இந்த பெரும்பான்மை பலம் கிடைக்காததால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஆபரேஷன் தியேட்டரில் போட்டோ ஷூட்
கர்நாடகாவில் அரச மருத்துவர் தனது வருங்கால மனைவியுடன் ஆபரேஷன் தியேட்டரில் (சத்திர சிகிச்சை பிரிவு) எடுத்த போட்டோ ஷூட்டுக்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அந்த மருத்துவரை பணியில் இருந்து நீக்கி, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மூன்றாவது போட்டி: ஆறுதல் வெற்றி பெறுமா ஆப்கானிஸ்தான்?
இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பல்லேகலவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
"நிறைவேற்று அதிகாரம் அவசியமாகவே உள்ளது"
நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று ஒப்புவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் சம தன்மை கொண்ட அதிகாரம் பேணப்பட வேண்டும் என்ற கருத்தும் தனக்கு ஆளமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிணவல் மோகத்தால் நாய் எரித்துக்கொலை
உயர் ரக பெட்டை (பிணவல்) நாயுடன், உறவுக்கொள்வதற்காக வந்துதிரியும் சாதாரண நாயொன்றை எரித்துக்கொன்றார் என சந்தேகிக்கப்படும், 65 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
"ஏல பூமியாக மாற்றிவிட்டார்"
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
"கட்சியின் வங்குரோத்து நாட்டின் வங்குரோத்து"
தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலை நாட்டின் வங்குரோத்து நிலையைக் குறிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்த அங்கிகாரம்
நிகழ்நிலை காப்பு சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாலியல் துஷ்பிரயோகம்: பொலிஸுக்கு 7 வருட சிறை
கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கின் சாட்சியங்கள் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்தரான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்
பெயரை சேர்க்க இலஞ்சம் வாங்கியவருக்கு விளக்கமறியல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ஹம்பாந்தோட்டை சமோதகம கிராம உத்தியோகத்தரை (grama sevaka) விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.
ஏ9 வீதி விபத்தில் அறுவர் காயம்
இராணுவ டிரக் வாகனமும் புரண்டது
விஷ பாலில் 7 பேர் கைது
கலஹாவில் மறைந்திருந்த போது சிக்கினர்
எம்.பியின் வாகன விபத்தில் டிராக்டரின் சாரதிக்கு காயம்
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த அதிசொகுசு வாகனம், சாலியவெவ, 15ஆவது மைல்கல் பிரதேசத்தில் கை டிராக்டரில் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில், கை டிராக்டரின் சாரதி காயமடைந்து, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா
சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் புரோ ஹாக்கி லீக் தொடரில் நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஸ்பெயின் அணிகள் மோதின.
ஸ்பானிய லா லிகாத் தொடர்: சமநிலையில் பார்சிலோனா - கிரெனடா போட்டி
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், நடப்புச் சம்பியன்களான பார்சிலோனாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில் கிரெனடா சமப்படுத்தியது.
ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு
'டெல்லி நோக்கி பேரணி' என்ற பெயரில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உட்பட 200 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (13) புதுடெல்லி நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
கட்டாய இராணுவ சேவை சட்டம்
மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021 பெப்ரவரி அன்று ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது.
செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக அரசு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய ஏற்பாட்டில் தமிழகத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானுக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.
“பெயரை போட முயற்சிப்பது உகந்ததல்ல"
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக விடயத்தில் பெயரை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தன்னிச்சையாக எவரேனும் செயல்படுவது உகந்ததல்ல என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணி தலைவருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இரகசிய கலந்துரையாடல் முடிவின்றி நிறைவு
இருவருக்கும் இரண்டு நாள்கள் அவகாசம்
மேபீல்ட் மாணவி துஷ்பிரயோகம்; இருவர் கைது: மக்கள் ஆர்ப்பாட்டம்
திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ், அதே தோட்டத்தைச் சேர்ந்த 60 மற்றும் 40 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
20 அன்று சலுகை அறிவிப்பு
மின்சாரக் கட்டணச் சலுகை தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.