CATEGORIES
Kategorier
தோல் நோய் அபாயம்
இந்த நாட்களில் மிகவும் வறண்ட காலநிலை காரணமாகத் தோல் நோய்களின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பறந்தார் மைத்தி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா ஊடாக அமெரிக்கா சென்றதை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
"தனித்துவமான வாய்ப்பு உருவாகியுள்ளது"
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் அரசியல் கட்சியான ஜே.வி.பியும் நல்ல பங்களிப்பை வழங்கிய ஒரே பெரிய உட்கட்டமைப்புத் திட்டம் உமா ஓயாவாகும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, திட்டமும் புதிய அரசியல் கலாசாரமும் அந்த திட்டத்துடன் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சினிமா கலைஞர்களை அழைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம்
தமிழக சினிமா ஒரு பிரமாண்டமான பணம் கொழிக்கும் வியாபாரம். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை
சிறுநீர் கழித்த பொலிஸ் மீது பொலிஸார் தாக்குதல்
மரமொன்றில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகரை கடுமையாக தாக்கியதாக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் சனியன்று நினைவு பேருரை
அமரர் டாக்டர் ஏ. எம். ஏ அஸீஸ் நினைவஞ்சலிக்கூட்டம் மற்றும் நினைவுச் சொற்பொழிவு என்பன கொழும்பு - 10 ஒராபி பாஷா மாவத்தை, இல 406 இல் அமைந்துள்ள சாஹிரா கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.45க்கு நடைபெறவுள்ளது.
பேச்சு நின்னு போச்சு இன்று மீண்டும் வலை நிறுத்தம்
நிதியமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, சுகாதாரத்துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் மீண்டும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
குதிரைகளை அனுப்பியவருக்கு புண்ணியத்தால் கிடைத்த பதவி
மரிக்கார் தெரிவிப்பு: 2024க்கு பின்னரே நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்
அறிமுகமானது UPI முறைமை
இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள ஒருசீர் கொடுப்பனவு இடைப்பரப்பு (Unified Payment Interface) (UPI) எனும் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமையை இலங்கையிலும் திங்கட்கிழமை (12) அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் இன்று பேச்சு தஞ்சையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள்
இந்தியாவின் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் திங்கட்கிழமை (12) மாலை நடைபெற உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் -மத்திய அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
‘எடி'க்கு 116
கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய நகரமான வில்டிஸில், ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவின் வயதான பெண்மணியான எடி சிசரேலியின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பாலியல் வன்முறையை மறைத்தவருக்கு பொதுமன்னிப்பு பதவி விலகினார் ஹங்கேரி ஜனாதிபதி
ஹங்கேரி நாட்டின் பழைமைவாதக் கட்சியின் ஜனாதிபதி சனிக்கிழமை (10) பதவி விலகியுள்ளார்.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடர்: லெவர்குசனிடம் தோற்ற மியூனிச்
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், பயேர் லெவர்குசனின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோற்றது.
ஆசியக் கிண்ணத் தொடர்: சம்பியனானது கட்டார்
ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத் தொடரில் கட்டார் சம்பியனானது.
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்ற 3 சுயேச்சைகள் நவாஸுக்கு ஆதரவு
பாகிஸ்தானில் கடந்த 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை உடனடியாக ஆரம்பித்தபோதும், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இது அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கும், போராட்டத்துக்கும் வழிவகுத்தது.
உலகை மிரட்டவிருக்கும் 2024 எல் - நினோ தாக்கம்
விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Sun Siyam பாசிகுடாவின் சுதந்திர தினக் கொண்டாட்டம்
இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்குடன், மறுசீரமைக்கப்பட்டு அண்மையில் மீண்டும் திறந்து வைக்கப்பட்ட Sun Siyam பாசிகுடா, 76ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.
கலை நிகழ்ச்சியும் பட்டமளிப்பு விழாவும்
யாழ். இணுவிலில், சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா இணுவில் பொது நூலகத்தில் ம.கஜந்தரூபன் தலைமையில் சனிக்கிழமை (10) நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி
புத்தளம் - பல்லம நந்திமித்ர பாடசாலைக்கு அருகில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
‘பாய் பங்கலா பாய்' குழுவினருக்கு உதவிய ஜீவன்
பொகவந்தலாவைகெர்க்கஸ்வோல்ட் (லெட்சுமி தோட்டம்) மத்திய பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 'தியட்டர் மேட்ஷ்' நாடக குழுவினருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிதியுதவி அளித்துள்ளார்.
"விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன”
தென்னிந்தியப் பாடகர் ஹரிஹரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா, இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பத்தில் அமுழ்த்தி குளிர்காய விரும்பும் சுயநலத் தரப்புக்களுக்கு வாய்ப்பாக மாறிவிடும் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அறுவர் கைது: மூவருக்கு காயம்
யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், அறுவர் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த மூன்று பேர் யாழ்.
‘அசேல'வுக்கு நஞ்சூட்ட முயன்ற நபர் கைது
கதிர்காமம் ஸ்ரீ அபிநவராம விகாரையின் பராமரிப்பில் இருந்த 'அசேல' என்ற யானைக்கு விஷம் வைத்து கொலை செய்வதற்கு முயன்றார் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் சுமார் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாமல் எம்.பி விசேட சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தியாவின் உத்தர பிரதேசத்திற்கு இரண்டு நாள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
"மக்களுக்கு புரிந்து விட்டது"
கடந்த பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆஸி. பெண்ணின் அந்தரங்கத்தை தொட்டவருக்கு சிக்கல்
மசாஜ் சேவையை பெற்றுக்கொள்ள சென்ற அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயற்சித்ததாக கூறப்படும் நபர் தொடர்பில், அவுஸ்திரேலியா பெண், முறைப்பாடு செய்துள்ளார் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்தில் கயிறு இறுகி சிறுவன் மரணம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியில் கழுத்தில் கயிறு இறுகியதில் சிவகுமார் டிலக்சன் (12 வயது) சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (11) உயிரிழந்துள்ளார்.
மைத்திரி ஆதரவு
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முட்டையின் விலை எகிறுகிறது
இவ்வருடம் இறக்குமதி செய்யப்பட்ட 7 மில்லியன் முட்டைகள் எதிர்வரும் வாரத்தில் லங்கா சதொசவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
"அவசரம் இல்லை”
ஜனாதிபதி வேட்பாளரை பல அரசியல் கட்சிகள் ஏற்கெனவே அறிவித்துள்ள போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளரை தேர்தல் நெருங்கும் போது பெயரிட தீர்மானித்துள்ளது என கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.