CATEGORIES
Kategorier
கூட் நிலைப்பாடா?
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சரவை அமைச்சரான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்திருக்கும் விடயம் தொடர்பில் சபையில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
கடன் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவு
நாட்டில் 5 கோடியே 75 இலட்சம் வங்கி வைப்பாளர்கள் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
ராமநாதபுரம் நோக்கி நடை பயணம்
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று கடந்த 4ஆம் திகதி, எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் வழக்கு கடந்த 16ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழில் மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அனுரவே அடுத்த ஜனாதிபதி
இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவியில் அனுர குமார திஸாநாயக்கவை அமர்த்துவதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்து விட்டனர் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
“மின்கட்டணம் குறைக்கப்படும்”
சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் மின்கட்டணம் குறைக்கப்படும்.
வாழ்த்திய மனோ ‘பேர்ச்’ கேட்கிறார்
2017ஆம் ஆண்டு, எமது ஆட்சியின் போது மலையகத்துக்கு எமது அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பெருந்தோட்டங்களில் கட்டப்படும் இந்திய வீடமைப்பு திட்ட வீடுகளின் தொகையை மேலும் 10,000 த்தால் அதிகரிப்பதாக அறிவித்தார்.
சிறுமியை கடத்திய சிறுவன் கைது
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியைக் கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
“2/3 உம், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம்"
\"நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை\" எனும் சட்டமூலத்தின் ஷரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதனால் சட்டமூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது.
PTAயில் பல ஏற்பாடுகள் முரணானவை
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதனால் சட்டமூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதிய மாணவர்கள் அனுமதிக்கான நிகழ்வு
புத்தளம் - தெற்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட கொத்தான்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஆறாம் தரத்துக்கு புதிய மாணவர்கள் அனுமதிக்கான நிகழ்வு திங்கட்கிழமை (19) மிக விமரிசையாக நடைபெற்றுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசல் மானியம்
இலங்கையின் சுகாதார அமைப்புக்குள் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கை மானியமாகப் பெற்றுள்ளது.
பாரத்-லங்கா வீட்டுத்திட்டம் ஆரம்பம்
இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் லங்கா எனும் வீட்டுத் திட்டம் திங்கட்கிழமை (19) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
டிப்ஸாக இவ்வளவு தொகையா?
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள உணவகம் ஒன்றில் மார்க் என்பவர் இரவு உணவு உட்கொள்ள சென்றுள்ளார். உணவு மற்றும் தண்ணீர் போத்தல் ஓர்டர் செய்துள்ளார்.
"அக்பர் - சீதா ஒரே இடத்தில் இருக்க கூடாது"
திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த 12ஆம் திகதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
வி.எஃப்.எல் போச்சுமிடம் தோற்ற பயேர்ணீ மியூனிச்
ஜேர்மனிய புண்டெஸ்லிகா தொடர்
"மீனவர்கள் கைது தொடர்பில் தலையிட வேண்டும்"
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில், பிரதமர் மோடி இராஜதந்திர ரீதியாகத் தலையிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
"போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை"
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க, இஸ்ரேல் நடத்தி வரும் போர், 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது.
சன்னவிற்கு (AAAS) விருது
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிற்கு விஞ்ஞான சுதந்திரம் மற்றும் பொறுப்புக்கான விருது (American Association for the Advancement of Science, AAAS) (Scientific Freedom and Responibility Aaurd) அமெரிக்க விஞ்ஞான முன்னேற்ற சங்கத்தினால் (AAAS) வழங்கப்பட்டுள்ளது.
கொட்டகெதன இரட்டைக் கொலை 'செயின் கில்லர்'க்கு மரண தண்டனை
இரத்தினபுரி -கொட்டகெதன பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தாயையும் மகளையும் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட 'செயின் கில்லர்' என்பவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன திங்கட்கிழமை (19) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மன்னாள் சிறுமி படுகொலை: சந்தேக நபருக்கு விளக்கமறியல்
தலைமன்னார்- ஊர்மனை கிராமத்தில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் திங்கட்கிழமை (19) உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் 17க்கு முன்னர் புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம்
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டும் எனவும் நவம்பர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் விவசாயி தப்பினார்: வீதியை மறித்து மக்கள் போராட்டம்
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம்நொச்சிக்குளம் பகுதியில் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து திங்கட்கிழமை (19) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குறித்த கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகரித்த மின்சாரக் கட்டணத்தை ஆராய குழுவொன்றை நியமிக்க யோசனை
இலங்கை மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விதிகளுக்கு மாறாகத் திருத்தியமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனையை எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழுவொன்று பாராளுமன்றத்தில் கையளித்துள்ளது.
கெஹலியவின் சுகயீனத்தை ஆராய்வதற்கு குழு நியமனம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் சுகயீனம் தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக விசேட வைத்தியர்கள் 9 பேரடங்கிய வைத்திய குழுவை நியமிக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்குக் கட்டளையிட்டுள்ளார்.
பொன்சேகாவை நீக்க ஐ.ம.சவுக்கு தடை உத்தரவு
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியில் வகிக்கும் பதவிகள் மற்றும் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தத் தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் திங்கட்கிழமை (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற "நாம் தயாராக வேண்டும்"
‘பாரத்-லங்கா' வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரை
"ஹரினுக்கு மரண தண்டனை விதிக்கவும்"
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அறிவித்துள்ளமை இலங்கையின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை நேரடியாக மீறும் செயலாகும் என உதய கம்மன்பில திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
"ஹரினின் கூற்று பாரதூரமானது"
இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருப்பது மிகவும் பாரதூரமான அறிக்கை எனவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதன் மூலம் இலங்கையின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சருக்கு எதிராக சவப்பெட்டியுடன் உண்ணாவிரதம்
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையைப் புரியுமாறும், இராஜாங்க அமைச்சரை ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியைப் பறிக்குமாறு கோரியும், சவப்பெட்டியுடன் இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.