CATEGORIES
Kategorier
காற்று மாசு அதிகரிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
'மெட்டா' வுக்கு 100 மில்லியன் டொலர் நட்டம்
ஃபேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் திடீரென முடக்கப்பட்டதால், சமூக வலைத்தளங்களுக்குச் சொந்தமான மார்க் ஜூக்கர்பெர்க்கின் 'மெட்டா' நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முருகன், ரொபட் ஆகியோரை உயிருடன் விடுதலை செய்க
தமிழக முதல்வர் மறறும் இந்தியப் பிரதமர் மோடியிடம் ஸ்ரீதரன் கோரிக்கை
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பால் சபையில் சர்ச்சை
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமரிடம் எழுப்பிய கேள்விகளால் சபையில் புதன்கிழமை (06) சர்ச்சை ஏற்பட்டது.
"நாட்டை சீரழித்தவர்களை பாதுகாக்கும் ஜனாதிபதி"
நாட்டை சீரழித்தவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
“95 சதவீத இலாபத்தை பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும்”
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி காலப்பகுதிகளில் கிட்டத்தட்ட 35 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
குற்றவாளிக்கு I2 வருட கடூழிய சிறை
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நடுத்தர மக்களை சுரண்டி பிழைக்கிறார்கள்
வரி உள்ளடங்களாக 92 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் சந்தையில் 365 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. 110 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு 203 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.
நானா? நீங்களா?
ஹர்ஷ கேள்விக்கு ஜனாதிபதி பதிலடி
தங்க எம்.பிக்கு தடை
தங்கம் மற்றும் அலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்குள்ளான தேசிய முஸ்லிம் கூட்டணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற பதவி புதன்கிழமை (6ஆம் திகதி) முதல் ஒரு மாத காலத்திற்கு இடைய நிறுத்தப்பட்டுள்ளது இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமையைத் துஷ்பிரயோகம் செய்து 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பிரமுகர்கள் நுழைவாயிலின் ஊடாக சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில் புதன்கிழமை (06) முதல் ஒரு மாதத்திற்கான அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இடை நிறுத்தப்பட்டுள்ளது.
“பாதை வெற்றி உறுதியாகிறது”
அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில்மக்களுக்குமேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கருக்கலைப்பை அடிப்படை உரிமையாக்கியது பிரான்ஸ்
பிரான்ஸில் கருக்கலைப்பைப் பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘மெஸ்ஸியுடன் இணைந்து விளையாட ஆசை'
ஆர்ஜென்டீனாவின் முன்களவீரரான லியனல் மெஸ்ஸியுடன் மீண்டும் இணைந்து விளையாட ஆசை என பிரேஸிலின் முன்களவீரரான நெய்மர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷை வென்ற இலங்கை
பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.
ட்ரம்ப்பை தோற்கடித்த இந்திய வம்சாவளிப் பெண் நிக்கி ஹாலே
அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக நிக்கி ஹாலே முதல் வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு செவ்வாய்க்கிழமை (05) இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை பிரச்சினை தீர்வு காண்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் விரும்புவதில்லை
தையிட்டி பிரதேசத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரை 100 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
“இடமாற்றங்களை விடுத்து மனமாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்"
மலையக பிரதேசங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் இடமாற்றங்களை விடுத்து மனமாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
“இறக்குமதி செய்யப்படும் இறாலை மீள் ஏற்றுமதி செய்வது நாட்டுக்கு பாதிப்பு”
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறாலை இலங்கை யின் இறாலை போன்று மீள் ஏற்றுமதி செய்வது நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
9ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக எஸ்.சி.முத்துக்குமாரன சத்தியப்பிரமாணம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக எஸ்.சி.முத்துக்குமாரன செவ்வாய்க்கிழமை (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தடை பாராளுமன்றம் ஊடாக நடவடிக்கை
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்கி ஒரு வருடமாகின்ற போதும் இன்னும் தீர்ப்பு வழங்காமல் உயர்நீதிமன்றம் இந்தநாட்டின் 43 இலட்சம் மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.
“சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் தமிழர்களுக்காக எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை”
சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம், தமிழர்கள் சார்பாகக் குறிப்பாக வடக்கு,கிழக்கு தமிழர்கள் சார்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.
உதவித் தொகை வரி திருத்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுக்க கூடாது
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகள் இல்லாமல் சமூகப் பாதுகாப்பு உதவித் தொகை வரி திருத்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை குறைக்க தீர்மானம்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
“மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை”
\"மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை\" பாராளுமன்றத்துக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“இலங்கையர்களை மீட்க கடும் முயற்சி”
வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மியன்மார் போன்ற நாடுகளில் குற்றக்கும் பல்களிடம் அதிகளவில் சிக்கிக் கொள்கின்றனர் என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
சாப்பாட்டு பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, திங்கட்கிழமை (05) நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
“போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்”
அரச உயர் அதிகாரிகளின் கௌரவத்தையும் அவர்களின் சேவையையும் அவமதிக்கும் வகையில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா
நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
இலங்கை எதிர் பங்களாதேஷ்: இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு-20 தொடர்
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரானது சியல்ஹெட்டில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.