CATEGORIES
فئات
டென்னிஸ்: விடைபெற்றார் சானியா மிர்ஸா
தொடங்கிய இடத்திலேயே நிறைவு
டில்லி கேபிடல்ஸ் அதிரடி வெற்றி
ஃஷபாலி, மெக் லேனிங், தாரா நோரீஸ் அபாரம்
சீன பாதுகாப்புத் துறைக்கு ரூ.18 லட்சம் கோடி ஒதுக்கீடு
தொடர்ந்து 8-ஆவது ஆண்டாக அதிகரிப்பு
இந்தியாவின் புகழைக் கெடுக்க முயற்சி
ராகுல் மீது அமைச்சர் ரிஜிஜு குற்றச்சாட்டு
இந்திய ஜனநாயக அமைப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதல்
இந்திய ஜனநாயகத்தின் அமைப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
வடமாநிலத் பாதுகாப்பு தொழிலாளர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சார்பில் ஞாயிற்றுக் கிழமை மாதவரத்தில் நடைபெற் றது.
பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகள் எத்தனை?
வீடு வீடாக கணக்கெடுப்பு தீவிரம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில், அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதல்வர்
சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களை மக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தார்.
பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 9 தலைவர்கள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் தென் இந்தியா வளர்ச்சியடையும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் தென் இந்தியா பெரிதும் வளா்ச்சியடையும் என இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. சிவன் தெரிவித்தாா்.
‘ஸ்புட்னிக்’ தடுப்பூசி கண்டுபிடிக்க உதவிய ரஷிய விஞ்ஞானி கொலை
ரஷியாவின் கரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-வி’யை தயாரித்த 18 விஞ்ஞானிகளில் முக்கியமானவரான ஆண்ட்ரே போடிகாவ் (47) கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.
மார்ச் 9-இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூடடம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் தோல்வி குறித்து ஆராய, அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் மாா்ச் 9-இல் நடைபெறவுள்ளது.
ஐ.நா. தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் இந்தியா குற்றச்சாட்டு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த தனிச்சிறப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
சோமாலியா: பாதுகாப்புப் படை-ஆயுதக் குழு மோதலில் 145 பேர் பலி
சோமாலியாவில் தனி நாடாக செயல்பட்டு வரும் சோமாலிலாண்ட் பகுதியில் அரசுக்கு எதிரான அமைப்புக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் 145 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி பொது மருத்துவமனை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இந்தோனேசியா எண்ணெய் கிடங்கில் தீ: 15 பேர் பலி
இந்தோனேசியா தலைநகா் ஜகாா்த்தாவில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்; 16 போ் மாயமாகியுள்ளனா்.
84% யுரேனியம் செறிவூட்டல் விவகாரம் ஈரான் அதிகாரிகளுடன் ஐ.நா. குழுவினர் சந்திப்பு
அணு ஆயுதங்களில் பயன்படுத்தக் கூடிய அளவை விட சற்று குறைவாக யூரேனியத்தை 84 சதவீதத்துக்கு ஈரான் செறிவூட்டியுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து அந்த நாட்டு உயரதிகாரிகளை ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வின் நிபுணா்கள் குழு சனிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியது.
பாக்முத் வீதிகளில் ரஷிய-உக்ரைன் படையினர் தீவிர சண்டை
உக்ரைனின் பாக்முத் நகரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறி வரும் ரஷிய படையினருக்கும், அந்த நகரை பல மாதங்களாகப் பாதுகாத்து வரும் உக்ரைன் படையினருக்கும் இடையே நகர வீதிகளில் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர நெடுஞ்சாலையில் உலகின் முதல் மூங்கில் சாலையோர தடுப்பு நிதின் கட்கரி
‘மகாராஷ்டிர மாநிலத்தில் சந்திராபூா் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் உலகின் முதல் மூங்கில் சாலையோர தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை கூறினாா்.
கடல் நீர் மட்டம் உயர்வு: 2100-க்குள் பாதிப்புக்குள்ளாகும் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்கள்
மனித சமூகம் தனது செயல்பாடுகளின் மூலம் வெளியேற்றும் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவு தொடா்ந்து அதிகரிக்குமானால், இந்தியாவின் சென்னை, கொல்கத்தா உள்பட ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் கடல் நீா் மட்டம் உயா்வால் இந்த நூற்றாண்டுக்குள் பாதிக்கப்படும் என ‘நேச்சா் க்ளைமேட் சேஞ்ச்’ இதழில் வெளியான ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது பில் கேட்ஸ்
சுகாதாரம், வளா்ச்சி, பருவநிலை ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்து வருவம் இந்தியா மீது முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையை தனக்கு ஏற்படுத்தி உள்ளதாக மைக்ரோசாப்ட் துணை நிறுவனா் பில் கேட்ஸ் தெரிவித்தாா்.
பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனையில் அவசரம் காட்டவில்லை
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் மத்திய அரசு அவசரம் காட்டவில்லை என்றும் நாட்டின் முக்கிய துறைகளின் நிறுவனங்களில் அரசு தொடா்ந்து பங்கு வகிக்கும் என்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதிப்பட தெரிவித்தாா்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி முதல் முறையாக இந்தியா வருகிறார் மார்ச் 8 முதல் 4 நாள்கள் பயணம்
‘வலுவான இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவு நம்முடைய பிராந்திய நிலைத்தன்மைக்கு நல்லது’ என ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தாா்.
கீழடி அகழ் வைப்பகம்: இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம், கீழடியில் எழில்மிகு முறையில் உருவாக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 5) திறந்து வைக்கிறாா்.
உச்ச வேகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு பிரதமர் மோடி வலியுறுத்தல்
‘2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு, உள்கட்டமைப்பு மேம்பாடு உச்ச வேகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.
தமிழகத்தில் வெளி மாநிலத்தவர் பாதுகாப்புடன் உள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மட்டும்தான் வெளி மாநிலத்தவா்கள் பாதுகாப்புடன் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
மனீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள்கள் சிபிஐ காவல்
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள, தில்லி கலால் கொள்கை தொடா்புடைய ஊழல் வழக்கில் கைதான முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை 2 நாள்கள் நீட்டித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
மகாராஷ்டிரம்: 6 இருமல் மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இருமல் மருந்துகள் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துவருவதாக சா்வதேச அளவில் புகாா்கள் எழுந்து வரும் சூழலில், மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வந்த 6 இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை மாநில அரசு தற்காலிக ரத்து செய்துள்ளது.
தமிழக அதிகாரிகளுடனான பேச்சு திருப்தி: பிகார் குழு
தங்கள் மாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு விஷயம் தொடா்பாக தமிழக காவல் துறை, அரசுத் துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு திருப்தியளிப்பதாக பிகாா் அரசுத் துறைச் செயலா் பாலமுருகன் தெரிவித்தாா்.
வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
வெளிமாநிலத் தொழிலாளா்கள் விவகாரத்தில் வதந்திகளைப் பரப்பி, அதன்மூலம் அச்சம், பீதியை ஏற்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.