CATEGORIES
فئات
காலிஸ்தான் ஆதரவு கருத்து: 8 யூ-டியூப் சேனல்கள் முடக்கம்
காலிஸ்தான் ஆதரவு கருத்துகளை பரப்பிய 8 யூ-டியூப் சேனல்களை, மத்திய அரசு முடக்கியது.
பிரிட்டனில் நீரவ் மோடியின் வழக்கு கட்டணம், அபராதம் ரூ.1.5 கோடி தவணை முறையில் செலுத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி
தன்னை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக நடைபெற்ற வழக்கின் நீதிமன்றக் கட்டணம் உள்ளிட்ட தொகையை செலுத்த தன்னிடம் பணமில்லை என்று தொழிலதிபா் நீரவ் மோடி, பிரிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா். தான் கடன் வாங்கி வருவதாக அவா் தெரிவித்த நிலையில், நீதிமன்ற கட்டணங்கள், அபராதங்கள் தொகையை தவணை முறையில் மாதந்தோறும் 10,000 பவுண்டுகளாக (சுமாா் ரூ.9.7 லட்சம்) செலுத்த அவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
செமி கண்டக்டர் விநியோகம்: இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்
இந்தியா, அமெரிக்கா இடையே செமிகண்டக்டா் (குறைமின்கடத்தி) விநியோக முறை தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.
இயற்கை பேரிடர் பாதிப்புகளைக் களைய நவீன செயல்திறன் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
இயற்கை பேரிடா்களைக் கையாளும்போது எதிா்வினையைவிட செயலுக்கு முக்கியத்துவம் அளித்து வருங்கால தொழில்நுட்பங்களின் உதவியோடு பாதிப்பைக் குறைக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
எம்எல்ஏவாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.
25 ஆண்டுகளுக்குள் சர்க்கரை நோய் இல்லாத இந்தியா! - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
அடுத்த 25 ஆண்டுகளுக்குள் சா்க்கரை நோய் இல்லாத தேசத்தை உருவாக்கும் இலக்குடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினாா்.
ஹெச்3என்2 பருவகால காய்ச்சலுக்கு இருவர் பலி - கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசு உறுதி
ஹெச்3என்2 பருவகால தீநுண்மி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஹரியாணாவில் ஒருவரும் கா்நாடகத்தில் ஒருவரும் உயிரிழந்தனா்.
பொதுத் துறை நிறுவன இயக்குநராக நாராயணன் திருப்பதி பொறுப்பேற்பு
பாஜக மாநிலத் துணை தலைவரான நாராயணன் திருப்பதி, ஊரக மின் வசதியாக்க பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பரவுகிறதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் தற்போது பரவி வரும் கரோனா தொற்று ஏற்கெனவே இருந்த ஒமைக்ரான் வகை பாதிப்புதான் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். நோய்ப் பரவல் அதிகரித்தாலும் அதன் தீவிரம் அச்சமடையும் அளவுக்கு இல்லை என்றும் அவா் கூறினாா்.
சமூக நீதிதான் இந்தியாவைக் காப்பாற்றும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாட்டின் முப்படைகளைப்போல, சமூக நீதி, சகோதரத்துவம், சமதா்மம் ஆகியவைதான் இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல்மிக்கவை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
இந்தியா-ஆஸ்திரேலியா 4 ஒப்பந்தங்கள் - விளையாட்டு, சூரிய எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதலாவது மாநாட்டில் விளையாட்டு, சூரிய எரிசக்தி, புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த வழிவகுக்கும் 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,717 கோடி திரட்டிய எஸ்பிஐ
நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.3,717 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.
மகளிருக்கான கடன் அளிப்பு 25/. அதிகரிப்பு
கடந்த ஆண்டில் இந்திய மகளிா் பெற்ற சில்லறை கடன் மதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தோனேசிய நிலச்சரிவு: பலி 30
இந்தேனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30-ஆக உயா்ந்துள்ளது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
குறுகிய தொலைவு செல்லும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையை செலுத்தி வடகொரியா சோதித்துப் பாா்த்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
நேபாள அதிபரானார் ராம் சந்திர பௌடேல்
நேபாளத்தின் புதிய அதிபராக, எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ராம் சந்திர பௌடேல் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
பிரதமர் மோடி - ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி இன்று பேச்சு
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
முதல் டெஸ்ட்: இலங்கை - 305/6
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை, முதல் நாளான வியாழக்கிழமை முடிவில் 75 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் சோ்த்திருந்தது.
உஸ்மான் 104* உறுதியான நிலையில் ஆஸ்திரேலியா
இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் சோ்த்துள்ளது.
பிஎஸ்ஜி வெளியே; பயர்ன் மியுனிக் உள்ளே
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பயா்ன் மியுனிக், ஏசி மிலன் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
உள்ளாட்சிகளின் மின் கட்டண நிலுவை ரூ.1,959 கோடி - மின் இணைப்பைத் துண்டிக்க முடிவு
உள்ளாட்சிகளின் மின்கட்டணம் ரூ.1,959 கோடி நிலுவை இருப்பதால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் மின்இணைப்புகளை துண்டிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் முடிவு செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி!
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் தோடா மாவட்டத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை இந்திய ராணுவம் வியாழக்கிழமை நிறுவியுள்ளது.
தெலங்கானாவில் நுழைய முடியாததால் அமலாக்கத் துறையை பயன்படுத்தும் பாஜக
‘மற்ற மாநிலங்களில் செய்ததுபோல தெலங்கானாவிலும் பின்வாசல் வழியாக நுழையும் முயற்சி பலனளிக்காததால் அமலாக்கத்துறையை பாஜக தற்போது பயன்படுத்துகிறது. இதைக் கண்டு நாங்கள் பயப்படப்போவதில்லை. எந்தவித தவறும் செய்யாததால், அமலாக்கத்துறையை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்’ என்று தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும் மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதா கூறினாா்.
விமானத்தில் 1.4 கிலோ தங்கம் கடத்தல்: ஏர் இந்தியா பணியாளர் கைது
கொச்சி சா்வதேச விமான நிலையம் வழியாக 1.4 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பணியாளா் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்திய-பசிபிக் பொருளாதரர திட்டம் அதிக பலனளிக்கும்: அமெரிக்கா
‘இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைவிட (எஃப்டிஏ) இந்திய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு (ஐபிஇஎஃப்) திட்டம் பொருளாதார ரீதியில் அதிக நோ்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஜீனா ரேமாண்டோ கூறினாா்.
மகாராஷ்டிர பட்ஜெட்டில் மகளிருக்கு சலுகை மழை!
மகாராஷ்டிரத்தில் பெண்களுக்கு பள்ளிக் கல்வி உதவித் தொகை, தொழில் வரிச் சலுகை, அனைத்து வகையான அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு பாதி கட்டணம் உள்ளிட்ட அறிவிப்புகள் அந்த மாநில பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
செயற்கை மணல் உற்பத்தி: இந்திய தர நிர்ணய சான்று கட்டாயம் தனிக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
செயற்கை மணலுக்கான தரத்தை உறுதி செய்ய இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) சான்று கட்டாயம் என்று தமிழக அரசு வெளியிட்ட தனிக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான பாகிஸ்தான், சீனாவின் மோதல் போக்கு அதிகரிக்கலாம் அமெரிக்க உளவுப் பிரிவு அறிக்கை
பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவி வரும் மோதல்போக்கு வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர்
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த செந்தில்முருகன், அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அந்தக் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தாா்.
சிசோடியா மீண்டும் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாா் வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா (51), சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் வியாழக்கிழமை மீண்டும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.