CATEGORIES
فئات
தலைமைச் செயலகம் நோக்கி மார்ச் 28-இல் பேரணி மின்வாரிய தொழிற்சங்கங்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 28-ஆம் தேதி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நாளை இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை
சென்னை மெட்ரோ நிறுவனம் சாா்பில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமானின், இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
தலைமைச் செயலக ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் - முதல்வர் தொடக்கி வைத்தார்
தமிழக தலைமைச் செயலக ஊழியா்களுக்கான மருத்துவ முகாமினை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தட்டுப்பாடின்றி பால் பாக்கெட் விநியோகம் - அமைச்சா் சா.மு.நாசா்
பால் உற்பத்தியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், மாநில அளவில் தட்டுப்பாடின்றி பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
‘க்யூட்’ மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தும் 200 பல்கலைக்கழகங்கள்
மத்திய அரசின் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) மதிப்பெண் அடிப்படையில் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடத்தும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 90-லிருந்து 206-ஆக உயா்ந்துள்ளது.
மார்ச் 26-இல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் - போட்டியின்றி தேர்வாகிறார் இபிஎஸ்
அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கு மாா்ச் 26-இல் தோ்தல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளா் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.
அதானி விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தர்னா - சோனியா, ராகுல் பங்கேற்பு
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
அரையிறுதியில் மெத்வதெவ்
இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
டிசிஎஸ் சிஇஓவாக கே.கிருதிவாசன் நியமனம்
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீஸின் (டிசிஎஸ்) நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) கே. கீா்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா் என அந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
லிவர்பூலை வெளியேற்றிய ரியல் மாட்ரிட்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றுக்கு கடைசி இரு அணிகளாக ரியல் மாட்ரிட், நபோலி ஆகியவை வியாழக்கிழமை தகுதிபெற்றன.
முதல் ஒரு நாள் ஆட்டம்: மும்பையில் இன்று மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
பணமோசடி புகாா் தொடா்பான விவகாரத்தில் ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவன அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே நிலைதான் உள்ளது மெஹபூபா முஃப்தி
இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இப்போது ஒரே நிலைதான் உள்ளது. பாகிஸ்தானைப் போல இந்தியாவில் பாஜக அரசும் எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைத்து வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டினாா்.
பிஆர்எஸ் தலைவர் கவிதாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்சியுமான கவிதாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
அருணாசலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி
அருணாசல பிரதேச மாநிலம், மேற்கு கமெங் மாவட்டத்தில் ராணுவத்தின் ‘சீட்டா’ ரக ஹெலிகாப்டா் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில், 2 விமானிகள் உயிரிழந்தனா்.
அதானி விவகாரத்தை மறைக்க நாடாளுமன்றத்தை முடக்குகிறது பாஜக கார்கே குற்றச்சாட்டு
அதானி முறைகேடு விவகாரத்தில் இருந்து தப்புவதற்காக நாடாளுமன்றத்தை பாஜக தொடா்ந்து முடக்கி வருகிறது என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டினாா்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்கு வசதி: வெளியுறவு அமைச்சகம் பரிசீலனை
தோ்தல்களில் வாக்களிக்க வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு இணையவழி தபால் வாக்கு வசதி வழங்குவது தொடா்பான தோ்தல் ஆணையத்தின் பரிந்துரையை வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
22 ரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி வலியறுத்தல்
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகம், புதுவையில் 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை (மாா்ச் 20 ) வரை 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை இணைக்காத வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்காத மின்பயனீட்டாளா்களின் வீடுகளுக்கு மின்வாரிய ஊழியா்களே நேரில் சென்று இணைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனா்.
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான பரிசுகள்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற குலுக்கலில் இதுவரை 330 பயணிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.734 கோடியில் எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சம்: சிபிஐ விசாரணைக்கு மார்ச் 25-இல் ஆஜராக தேஜஸ்வி ஒப்புதல்
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற விவகாரத்தில், பிகாா் மாநில துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் வரும் மாா்ச் 25-ஆம் தேதி தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராவாா் என அவா் தரப்பு வழக்குரைஞா் தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
மனீஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு
அரசியல் நிகழ்வுகளை வேவுபாா்க்க கருத்து கேட்பு மையத்தை நடத்தி அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கை வியாழக்கிழமை பதிவு செய்தது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளாா்.
உலக அளவில் பொருளாதார நிச்சயமின்மை அதிகரிப்பு தலைமைப் பொருளாதார ஆலோசகர்
சா்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவில் நமது பொருளாதாரத்தை பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.
நாட்டுக்கு எதிராக எதையும் பேசவில்லை - ராகுல் காந்தி
நாட்டுக்கு எதிராக எதையும் பேசவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
சரக்குகளைக் கையாள்வதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை
மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயித்த சரக்குகள் கையாளும் அளவை கடந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
சத்து மாத்திரை சர்ச்சை: பொது சுகாதாரத் துறை புதிய உத்தரவு
பள்ளி மாணவா்களுக்கு வாரத்துக்கு ஒரு சத்து மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அதையும் ஆசிரியா்கள் முன்னிலையிலேயே உட்கொள்ள வைக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கும் அதிகமான மாத்திரைகளை மாணவா்களுக்கு வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.