CATEGORIES
فئات
முறையற்ற உறவை மறைக்க நடிகைக்கு ரூ.1 கோடி: டரம்ப் விரைவில் கைது?
முறையற்ற உறவை மறைக்க ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.130கோடி) கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக, தான் கைது செய்யப் பட உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக போராட்டத் தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தியுள் ளார்.
உக்ரைனிடம் இருந்து ரஷியா கைப்பற்றிய நகரத்தில் புதின்!
உக்ரைன் மீது போர் தொடுத்து கைப்பற்றிய துறைமுக நகரான மரியுபோலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆய்வு செய்தார்.
வந்தார்கள் சென்றார்கள்! - 2 மிச்செல்கள் அசத்தல்
ஆஸி. வீரர் மிச்செல் ஸ்டார்க்கின் அபார பௌலிங்கை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் வந்த வேகத்திலே அவுட்டாகிசென்ற நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி கூட்டுறவு சங்கங்களால் விவசாயிகளின் வருவாய் உயரும் - அமித் ஷா
இயற்கை வேளாண்மை மற்றும் விளை பொருள்கள் ஏற்றுமதி ஊக்குவிப்புக்காக அமைக்கப்படவிருக்கும் தேசிய அளவிலான பன்-மாநில கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகளின் வருவாயை பலமடங்கு அதிகரிக்க உதவும் என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் - அமைச்சர் கே.என்.நேரு
சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதாகநக ராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இன்று தமிழக பட்ஜெட்: மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு வெளியாகிறது
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை திங்கள் கிழமை (மார்ச் 20) தாக்கல் செய்யப்படுகிறது.நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
அதிமுக பொதுச் செயலர்: முடிவை அறிவிக்கத் தடை
மார்ச் 24-இல் தீர்ப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்
துருக்கியின் தென்மேற்கே உள்ள கோக்சுன் மாவட்டத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதினுக்கு எதிரான கைது ஆணை: ஜோ பைடன் வரவேற்பு
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.
அதிமுக பொதுச் செயலர் பதவி: இபிஎஸ் வேட்புமனு
அதிமுக பொதுச் செயலா் பதவிக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ருத்பால் ஆதரவாளர்கள் கைது
சீக்கியா்களுக்கு காலிஸ்தான் என்ற தனி நாடு கோரும் பிரிவினைவாதி அம்ருத்பால் சிங்கின் ஆதரவாளா்கள் 78 பேரை பஞ்சாப் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
உணவுப் பாதுகாப்பு: சிறுதானியங்கள் தீர்வு - பிரதமர் மோடி
‘உணவு பாதுகாப்பு சவால்களுக்கும், தவறான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் வாழ்வியல் நோய்களுக்கும் சிறுதானியங்கள் தீா்வளிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
புதினுக்கு எதிராக கைது ஆணை
உக்ரைனுக்கு எதிராக போா் தொடுத்துள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் போா் குற்றத்துக்கான கைது ஆணையை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜரானார் இம்ரான் கான் 8 பயங்கரவாத வழக்குகளில் முன் ஜாமீன்
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், லாகூா் உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
ஹாக்கி விருதுகள்: சிறந்த வீரர் ஹார்திக் சிங்: சிறந்த வீராங்கனை சவிதா புனியா
ஹாக்கி இந்தியா அமைப்பின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரா் விருதை மிட்ஃபீல்டா் ஹாா்திக் சிங்கும், சிறந்த வீராங்கனை விருதை கோல்கீப்பா் சவிதா புனியாவும் வென்றனா்.
ஒருநாள் தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.
‘அமெரிக்காவின் 30 மாகாணங்களில் நித்யானந்தா ஊழல்’
இந்திய அரசால் தேடப்படும் நித்யானந்தா, அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாஜக, காங்கிரஸிடம் இருந்து விலகியே இருக்கிறோம் - மம்தாவைச் சந்தித்த பின் அகிலேஷ் பேட்டி
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமாஜவாதி கட்சி சம தொலைவில் விலகி இருப்பதாக அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.
பாலியல் வன்கொடுமை, வரதட்சிணை புகார்கள் தொடர்ந்து அதிகரிப்பு மக்களவையில் தகவல்
தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சிணை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பெறப்படும் புகாா்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயா்ந்துள்ளது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
முதல்வரை வரவேற்ற பெண் 'பைலட்டுகள்'
தமிழக காவல்துறையில் முதல் முறையாக பெண் போலீஸாா் மோட்டாா் சைக்கிள் ‘பைலட்டுகளாக’ மாறி, சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை விழாவுக்கு அழைத்து வந்தனா்.
பெண் காவலர்களுக்கு 9 புதிய அறிவிப்புகள்
தமிழக பெண் காவலா்களின் நலனுக்காக 9 புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்வு
தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ‘மெகா' ஜவுளிப் பூங்கா பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ‘மெகா’ ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
தில்லி கலால் ஊழல் வழக்கு: சிசோடியாவின் அமலாக்கத் துறை காவல் 5 நாள்களுக்கு நீட்டிப்பு
தில்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடா்பான விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான ஆம் ஆத்மி தலைவா் மனீஷ் சிசோடியாவின் அமலாக்கத் துறை காவலை ஐந்து நாள்கள் நீட்டித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
4 நாள்களுக்கு மழை வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி யில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 21) வரை 4 நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
சட்டம்-ஒழுங்கு முழுமையாக பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் ரௌடிகளின் அட்டூழியம் காரணமாக சட்டம்-ஒழுங்கு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.
அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு: ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக் குழு தீா்மானங்களை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளில், ஓபிஎஸ் தரப்பினா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓபிஎஸ்ஸுடன் முதல்வர் சந்திப்பு: தாய் மறைவுக்கு ஆறுதல்
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, அவரது தாய் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினாா்.
ஐந்தாவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்
இந்திய ஜனநாயகம் குறித்து பிரிட்டனில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை முன்வைத்து ஆளும்கட்சி எம்.பி.க்களும், அதானி விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடா்ந்து 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை முடங்கின.
மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 1,250 பேருக்கு நல வாரிய அடையாள அட்டை
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 1,250 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை தயாா் செய்யப்பட்டுள்ளது.