CATEGORIES
فئات
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் நிவாரணங்களில் கூடுதலாக 4 சதவீதம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு அனுமதியளித்துள்ளது.
ராகுல் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீதான தகுதிநீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப்4 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
விற்பனைக்கு வரும் அரசின் 3.5% ஹெச்ஏஎல் பங்குகள்
பொதுத் துறை ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் நிறுவனமான ஏரோனாடிக்ஸ் (ஹெச்ஏஎல்) 3.5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆப்கன் நிலநடுக்கம்: பலி 21-ஆக உயர்வு
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 21-ஆக உயர்ந்தது.
பாகிஸ்தான்: பஞ்சாப் தேர்தல் ஒத்திவைப்பு
பாகிஸ்தானில் ஏப்ரல் 30-இல் நடைபெறுவதாக இருந்த பஞ்சாப் மாகாண தேர்தல் 5 மாதங்களுக்கு மேல் ஒத்துவைக்கப்பட்டுள்ளது
தியாகிகள் தினம்: பிரதமர் மோடி மரியாதை
தியாகிகள் தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு பிரதமர் மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.
இலங்கை கடற்படையினரால் புதுகை மீனவர்கள் 12 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
இணையவழி சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்
இணையவழி சூதாட்டத்துக்கு தடை விதிக்க வகைசெய்யும் சட்டமசோதா பேரவையில் வியாழக்கிழமை (மார்ச் 23) மீண்டும் நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மேலும் 6 தமிழக நகரங்களில் ஜியோ 5ஜி சேவை
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ, தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 6 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை
வட கொரியா ஏவுகணைகளை வீசி மீண்டும் புதன்கிழமை சோதனை நடத்தியது.
இந்தியா வம்சாவளி நடிகை மிண்டிக்கு அமெரிக்காவின் மதிப்புமிக்க பதக்கம் அதிபர் பைடன் வழங்கினார்
இந்திய வம்சாவளி நடிகை மிண்டி கேலிங்குக்கு அமெரிக்காவின் மதிப்புமிக்க கலைப் பதக்கத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.
பெண்களுக்கு சம ஊதியம் வேண்டும்
ஆண்ககளுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
கோயம்பேடுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு கிலோ ரூ.10-க்கு விற்பனை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விருதுநகரில் மெகா ஜவுளிப் பூங்கா: தமிழக அரசு-மத்திய அரசு ஒப்பந்தம்
விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசு - மத்திய அரசுக்கு இடையே புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயிர்க் கடன் இலக்கு ரூ.14,000 கோடி
ரூ.1,000 கோடியில் வேளாண் தொழில் பெருந்தடம்; வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள்
மார்ச் 25 வரை மழை நீடிக்கும்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 25– ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி ஏப். 8-இல் தமிழகம் வருகை
பிரதமர் நரேந்திர மோடி ஏப். 8-ஆம் தேதி தமிழகத்துக்கு வருகை தருகிறார். சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார்.
குழந்தைகள் அபகரிப்பு குற்றச்சாட்டு: ஐ.நா. கூட்டத்தைக் கூட்ட ரஷியா திட்டம்
உக்ரைனுக்கு எதிரான போரில் அந்நாட்டில் இருந்த குழந்தைகளை அபகரித்ததாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது போர் குற்றவாளி குற்றச்சாட்டை சுமத்தி சர்வதேச நீதிமன்ற கைது வாரண்ட் அண்மையில் பிறப்பித்திருந்த நிலையில், இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட ரஷியா திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற முடக்கம் நீடிப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்வில்லை
நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காணும் நோக்கில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா செவ்வாய்க்கிழமை நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சுமுக முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
கரோனா பாதிப்பு 1.8 சதவீதமாக அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு விகிதம் தற்போது 1.8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
2,599 இரண்டாம் நிலைக் காவலர்கள் விரைவில் தேர்வு: டிஜிபி
தமிழகத்தில் 2,599 இரண்டாம் நிலைக் காவலர்களை தேர்வு செய்வதற்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
36 செயற்கைக்கோள்களுடன்: மார்ச் 26-இல் விண்ணில் பாய்கிறது எல்விஎம்-3 ராக்கெட்
பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் வரும் 26-ஆம் தேதி விண்ணில் செலுத்த இந் திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.
முதலிடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்
மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் 18ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை திங்கள்கிழமை வென்றது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கிய பயணம் தொடரும்
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற திசை நோக்கிய பயணம் தொடரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஜூன் மாதம் திறப்பு
கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உலகளாவிய விளையாட்டு நகரம்
உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் சென்னையில் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்புடன் கரோனா தொற்று
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்புடன் கரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000 கோடியில் அமலாகிறது வடசென்னை வளர்ச்சித் திட்டம்
வடசென்னை பகுதிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வளர்ச்சித் திட்டம் ரூ.1,000 கோடியில் அமல்படுத்தப்பட உள்ளது.