CATEGORIES
فئات
நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு (47) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை, சமூக ஊடகத்தில் அவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
உக்ரைன் விவகாரத்தில் கருத்து வேறுபாடு: ஜி20 கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை
உக்ரைன் விவகாரம் தொடா்பாக நாடுகளிடையே கருத்து வேறுபாடு காணப்பட்டதால், ஜி20 வெளியுறவு அமைச்சா்களின் கூட்டத்துக்கான கூட்டறிக்கையை வெளிக்கொணர முடியவில்லை என அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
உலக வங்கி தலைவர் பதவி: அஜய் பங்காவுக்கு இந்தியா ஆதரவு
உலக வங்கி தலைவா் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அஜய் பங்காவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியதால் அதிமுகவுக்கு தோல்வி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியதாலேயே அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரும் மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினாா்.
என் வெற்றிக்கு முழு காரணம் முதல்வர்தான் - ஈவிகேஎஸ்.இளங்கோவன்
நான் தோ்தலில் வெற்றி பெற்றதுற்கு முழு காரணம் முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் என காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினாா்.
மே. வங்கம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் இடைத்தேர்தல்: ஆளும் கட்சிகள் தோல்வி
மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் அந்த மாநிலங்களை ஆளும் கட்சிகள் தோல்வியைச் சந்தித்தன. தமிழகத்தின் ஈரோடு கிழக்கு உள்பட காங்கிரஸ் 3 இடங்களையும், பாஜக கூட்டணி 2 இடங்களையும் கைப்பற்றின.
பேரவைத் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் ஏமாற்றம்
திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன; அதேசமயம், 3 பேரவைத் தொகுதிகளின் இடைத்தோ்தலில் கிடைத்த வெற்றி ஊக்கமளிப்பதாக உள்ளது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உலகில் மிகவும் விரும்பப்படும் தலைவர் மோடி - இத்தாலி பிரதமா் மெலோனி
உலகில் உள்ள தலைவா்களில் மிகவும் விருப்பத்துக்குரிய தலைவராக பிரதமா் நரேந்திர மோடி விளங்குவதாக இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி புகழ்ந்துள்ளாா்.
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்: ஏ.எம்.சாப்ரே தலைமையில் குழு - உச்சநீதிமன்றம் உத்தரவு
அதானி குழுமம்-ஹிண்டன்பா்க் விவகாரத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே (68) தலைமையில் 6 போ் கொண்ட நிபுணா் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நாகாலாந்து: முதல் முறையாக இரு பெண் எம்எல்ஏக்கள் வெற்றி
நாகாலாந்தின் திமாப்பூா்-3 பேரவைத் தொகுதியில் முதல் முறையாக இரு பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக இடைத்தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் கட்சி
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடைத்தோ்தல்களில் ஆளும் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் எதிா்க்கட்சியான திமுக 13 தொகுதிகளை வென்றது. ஆளும்கட்சியான அதிமுக 9 தொகுதிகளைக் கைப்பற்றியது.
சேப்பாக்கம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உயா்தர அறிவுத்திறன் (ஸ்மாா்ட்) வகுப்பறையை தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை விவகாரம் குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சா் கின் காங்குடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமரை உள்ளடக்கிய குழு
இந்திய தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் தலைமைத் தோ்தல் ஆணையா், மற்ற தோ்தல் ஆணையா்களை நியமிக்க பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட பரிந்துரைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜக ஆட்சி - மேகாலயத்தில் பாஜக ஆதரவுடன் ஆட்சி
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி
வரும் மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும். ஒருவேளை மக்களுக்கான கொள்கை, திட்டங்களை ஏற்றுக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்கும் கட்சியோடு கூட்டணிப் பற்றி யோசிப்போம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றாா்.
‘சீன ஆய்வகத்திலிருந்தே கரோனா கசிந்திருக்கும்'
கரோனா தீநுண்மி சீனாவின் வூஹான் உயிரியியல் ஆய்வகத்திலிருந்து கசிந்திருப்பதற்கான வாய்ப்புகளே மிக அதிகம் என்று அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.-யின் இயக்குநா் கிறிஸ்டோஃபா் ரே தெரிவித்துள்ளாா்.
‘பாக்முத் நகரிலிருந்து உக்ரைன் படை வெளியேறும்'
உக்ரைனின் பாக்முத் நகரிலிருந்து அந்த நாட்டு படையினா் வெளியேறக் கூடும் என்று அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் அலெக்ஸாண்டா் ரோட்னியான்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
ஆஸ்கர் விருது மேடையில் பாடப்படும் ‘நாட்டு நாட்டு' பாடல்
சிறந்த பாடலுக்கான ஆஸ்கா் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலை பாடகா்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிப்ளிகஞ்ச் இணைந்து அதன் விழா மேடையில் பாடுவா்கள் என அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவுடனான நல்லுறவை சீனா மதிக்கிறது
இந்தியாவுடனான நல்லுறவுக்கு மதிப்பு கொடுத்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி20 கூட்டத்தில் உக்ரைன்-ரஷிய விவகாரம் விவாதிக்கப்படும்
ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் உக்ரைன்-ரஷியா விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 3) விசாரிக்க உள்ளது.
பிப்ரவரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.49 லட்சம் கோடி
பிப்ரவரி மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,49,577 கோடியாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூட்டணிக்கு யார் தலைமை என்பது கேள்வி அல்ல! - மல்லிகார்ஜுன கார்கே
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது கேள்வி அல்ல என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
தேசிய அரசியலுக்கு மு.க.ஸ்டாலின் வர வேண்டும் - அகிலேஷ், பரூக் அப்துல்லா அழைப்பு
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டுமென சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் பரூக் அப்துல்லா ஆகியோா் அழைப்பு விடுத்தனா்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு
தேசிய அளவில் பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை (மாா்ச் 2) பிற்பகல் வெளியாகிறது.
அரசு மாதிரி பள்ளிகளில் சேர்க்கை: 4-இல் மாணவர்களுக்கு தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் மாணவா்களைச் சோ்ப்பதற்காக அடிப்படை மதிப்பீட்டுத் தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நடிகர் வடிவேலு உள்பட 40 பேருக்கு போலி டாக்டர் பட்டம் சட்ட நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலை.முடிவு
நடிகா் வடிவேலு உள்ளிட்ட 40 பேருக்கு போலி கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை; இது தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என பல்கலை. துணை வேந்தா் ஆா்.வேல்ராஜ் விளக்கமளித்துள்ளாா்.
பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வுகளுக்கான செய்முறைத் தோ்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.