CATEGORIES
Kategorier
தீப்பற்றி எரிந்த கடைகள் முற்றாக நாசம்
காத்தான்குடி தெற்கு எல்லையிலுள்ள ஆரையம்பதியில் வர்த்தக நிலையங்கள் மீது தீப் பரவியதில் புடவைக் கடை உட்பட மூன்று கடைகள் மற்றும் வாகனங்கள் கழுவும் சேர்விஸ் கராஜ் என்பன எரிந்து நாசமாகியுள்ளதுடன், வாகனங்களும் எரிந்து முற்றாக சாம்பலாகியுள்ளன.
இலங்கைக்கான புதிய தூதுவர்களுடன் செந்தில் சந்திப்பு
புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்துள்ளனர்.
2,763 கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு டிசெம்பரில் பரீட்சை
நாட்டில் ஏற்பட்டுள்ள 2,763 கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படுமென பிரதமரும் மாகாண, மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல். வி.சி. 57 ரொக்கெட் மூலம் ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டெம்பர் 2ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
"வைக்கோலை எரிக்காதீர்கள்"
புதுடெல்லியின் காற்று மாசு 400 முதல் 470 புள்ளிகளாக இருந்து வருகிறது. தலைநகரில் காற்று மாசு 399 ஏ.கியூ.ஐ. ஆக செவ்வாய்க்கிழமை (07) இருந்தது. இந்த காற்றை சுவாசிக்கும் நபர் 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கரப்பந்தாட்ட போட்டியில் 'ஏபர்நெட் லங்கா' சாம்பியன்
அகில இலங்கை வர்த்தக நிறுவனங்களுக்கிடையில் தேசிய மட்ட ரீதியில் கொழும்புமஹரகம தேசிய கரப்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்று போட்டியில் உடப்புஸ்ஸலாவை 'ஏபர்நெட் லங்கா நிறுவனம்' முதலிடம் பெற்றுள்ளது.
"பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை எரிபொருள் இல்லை"
ஹமாஸ் - இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்துவரும் நிலையில், ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது.
தெருக்களில் ஓஷிய பச்சை திரவம்
நியூயோர்க் நகர தெருக்களில் பச்சை நிறத்தில் ஓடிய தண்ணீர் குறித்த புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் தளத் வெளியாகியுள்ளது.
"உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்”
தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உலகக் கிண்ணம்: மக்ஸ்வெல் தாண்டவத்தால் அரையிறுதியில் அவுஸ்திரேலியா
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு கிளென் மக்ஸ்வெல்லின் தாண்டவத்தால் அவுஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிர்த்து தபாலகங்கள் முடங்கின
அஞ்சல் தொலைத் தொடர்பு தொழிற் சங்கங்கள் நாடளாவிய ரீதியில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுத்திருந்தன.
“என்னை கலாநிதி என்று அழைக்கவும்”
“என்னை உரையாற்ற அழைக்கும் போது 'கலாநிதி' என்ற எனது கல்வித்தகுதி பட்டத்தை கூறியே அழைக்க வேண்டும். இதனை நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்” என சபைக்கு தலைமைதாங்கிய எம்.பி.க்கு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் அறிவுறுத்தினார்.
பொலிஸ் மா அதிபர் யார்?
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியினால் 3ஆவது தடவையாகவும் அதன் பின்னரும் அனுப்பப்பட்ட பரிந்துரைகள் எதுவும் அரசியலமைப்பு பேரவையினால் உறுதிப்படுத்தப்பட்டு நியமிக்கப்படவில்லை என்றும் இது அரசியலமைப்பு பேரவையின் சக உறுப்பினர்களுக்கும் தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக உட்கட்டமைப்புக்கு அரை பில்லியன் டொலர்கள் நிதி
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசியப் பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கக் கூடிய ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிக்கு உதவுவதற்காக அரை பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையினை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DFC) அறிவித்தது.
‘சூது’ சம்மியா, ரொஷானா?
கிரிக்கெட் சபையினரின் பல ஊழல் மோசடிகளை சபையில் ஆதாரங்களுடன் அமபலப்படுத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, 'சூது' சம்மியா? அல்லது ரொஷான் ரணசிங்கவா தேவை என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் எனக் கோரிநின்றார்.
நீர் கட்டணம் குறித்து தேசிய கொள்கை
நீர் கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வெளியிடவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
“குழந்தைகளின் மயானமாகிறது காசா”
\"காசா குழந்தைகளின் மயானமாகிறது. உடனடியாகப் போரை நிறுத்துங்கள்” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை
கொண்டுவர முடியும் என்கிறார் சுமந்திரன் எம்.பி
சவால் விடும் நுளம்பு
இலங்கைவாழ் அனைத்து குடி மக்களையும் நல்ல சூழலில் தேகாரோக்கியம் மிக்க பிரஜைகளாக கொண்டுவரும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எனினும், டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதற்கு பிரதான காரணமாக, தங்களுடைய சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்காமையே ஆகும்.
கூரை இல்லாத பஸ் தரிப்பிடம்
மொனராகலை-வெல்லவாய வீதியில் நீர்ப்பாசன அலுவலகத்துக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடத்தில், நிழற்குடையானது மேற்கூரையின்றி, வானத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றது.
வீதியை மறைத்து வீதிக்காக போராட்டம்
கலஹா - தெல்தோட்டையில் பிரதேசத்தில் இருந்து ஹேவாஹேட்ட வரையான வீதி மிகவும் பழுதடைந்து காணப்படுவதை கண்டித்து பிரதேசவாசிகள் மற்றும் பஸ் சாரதிகள் ஒன்றிணைந்து நூல்கந்துர பிரதேசத்தின் நாராஹின்னவிற்கு அருகில் வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெங்கு அபாயம்
சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய வெற்றுக்காணிகளை வைத்திருப்போர் ஒரு வார காலத்திற்குள் காணிகளை துப்பரவு செய்யுமாறு, சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர். எஸ்.ஐ. எம். கபீர் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்துள்ளார்.
"மூவர் குறித்தும் முடிவுக்கு வரவில்லை”
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் தொடர்பில் எவ்விதமான முடிவுக்கும் வரவில்லையென பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கயந்த கருணாதிலக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அரிசி மாயம் ஐவர் இடைநீக்கம்
அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான நான்கு களஞ்சியசாலைகளில் அரிசி கையிருப்பு காணாமல் போனமை தொடர்பில் ஐந்து களஞ்சியசாலை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அல்லது அதன் விதிகள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்றும், சில ஷரத்துக்களில் குழுநிலையில் திருத்தங்களை மேற்கொண்டால் எளிய பெரும்பான்மை மூலமாக நிறைவேற்ற முடியுமென உயர் நீதிமன்றம் தரமானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை
தேர்தல் முறை திருத்தம் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமையும் பட்சத்தில் எதிர்வரும் முதலாவது தேசிய தேர்தலை புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியுமா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
“வேலியிட்டது தோட்டக்காரன்"
இடைக்கால கிரிக்கட் குழுவை நீக்குமாறு கோரிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாவிட்டில், விளையாட்டுச் சட்டத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வேன் என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக விளையாட்டு அமைச்சர் ரொஷான்
அர்ஜூன குழுவுக்கு இடைக்கால தடை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூனரணதுங்க தலைமையில், விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை, செவ்வாய்க்கிழமை (07) பிறப்பித்துள்ளது.
மணப்பெண் தேடி பாதயாத்திரை
பாதயாத்திரை தற்போதைய காலகட்டத்தில் திருமண விடயங்களில் பெண்களின் எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது.
"காசா முனையை இரண்டாக பிரித்து விட்டோம்”
இஸ்ரேல் - காசா முனை பகுதி மீது நடத்தி வரும் போரில் இதுவரை சுமார் 9770 பேருக்கு மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.