CATEGORIES
Kategorier
மக்ஸ்வெல் மாயாஜாலம்
முடிவடைந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் 13ஆவது உலகக் கிண்ணத் தொடரில் போட்டியொன்றில் அதிகபட்சமாக அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 (128) ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக ஷமி
சர்வதேச கிரிக்கெட் சபையின் 13ஆவது உலகக் கிண்ணத் தொடரில் அதிகபட்சமாக 24 விக்கெட்டுகளை இந்தியாவின் மொஹமட் ஷமி வீழ்த்தியுள்ளார்.
ஆறாவது தடவையாக சம்பியனான அவுஸ்திரேலியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில் ஆறாவது தடவையாக அவுஸ்திரேலியா ச சம்பியனாகியது.
10 'சம்பவங்கள்'
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அவுஸ்திரேலிய அணி. பலம் வாய்ந்த இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது ஆஸி.
இந்தியா தோல்வியால் அதிர்ச்சியில் மரணம்
திருப்பதி அருகே துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி குமார் என்பவர், தன்னுடைய வீட்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்துள்ளார்.
உரிமையைக் கேட்டு வீதிக்கு இறங்கிய தோட்ட தொழிலாளர்கள்
இராகலை மத்திய பிரிவு தோட்ட தொழிலாளர்கள் தமக்கான வீட்டு உரிமையைக் கேட்டு இராகலை நகரில் வீதிக்கு இறங்கி அமைதி பேரணியுடன் திங்கட்கிழமை (20) போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
சித்தங்கேணி இளைஞனுக்கு “நீதி வேண்டும்"
பொலிஸாரின் தடுப்புக்காவல்களில் இடம்பெற்ற கொலைகளில் இறந்தவர்களுக்கான நீதி எந்தவோர் இடத்திலும் நிலைநாட்டபடவில்லை.
“பன்றிகளின் அழைப்பை சிங்கமான நான் ஏற்கேன்”
பன்றியுடன் மோதினால் அதன் மீதுள்ள மலம் தன்மீதும் ஒட்டிக் கொள்ளும்
“ரங்காவுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கவும்”
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிவான் நீதிமன்றத்துக்கு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது
வட்டுக்கோட்டைக்கு எஸ்.ரி.எப் பாதுகாப்பு
நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்
புலிகளின் சின்னங்களை பயன்படுத்தக் கூடாது
மு.தமிழ்ச்செல்வன்
வெளி நபர்களுக்கு கதவடைப்பு
பாராளுமன்றத்தில் தற்பொழுது செயற்படும் பல்வேறு குழுக்களின் கூட்டங்களில் வெளிநபர்கள் பங்கேற்க அனுமதியில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தில், திங்கட்கிழமை (20) அறிவித்தார்.
வடக்கு, கிழக்குக்கு பட்ஜெட்டில் “0.1 சதவீதமே ஒதுக்கீடு"
வரவு-செலவுத் திட்டத்திலும் வடக்கு, கிழக்கு முற்றாக புறக்கணிக்கப்பட்டது
நானுஓயாவில் மண்சரிவு
நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஹாத்த பகுதியில் சனிக்கிழமை (18) ஏற்பட்ட மண்சரிவால் அந்த வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது.
மயிரிழையில் தப்பிய பயணிகள்
யாழ்ப்பாணம்மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து ஒன்று போட்டிப் போட்டு மற்றைய தனியார் பேருந்தை முந்த முயன்றவேளை, நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதவிருந்த நிலையில், நூற்றுக்கணக்கான பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் சனிக்கிழமை (18) யாழ். முழங்காவில் பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது.
சீரற்ற காலநிலையால் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த மதீனா திருத்துவ கல்லூரி போட்டி
இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சம்மேளனம் நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 13 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கடினபந்து கிரிக்கெட் தொடரில், கண்டி பொறமதுல்ல மத்திய கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மடவல அல் மதீனா தேசிய கல்லூரிக்கும், கண்டி திருத்துவக் கல்லூரிக்குமிடையிலான போட்டியானது சீரற்ற காலநிலையால் வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்தது.
டெஸ்ட் போட்டிகளுக்கான பங்களாதேஷின் அணித்தலைவராக ஷன்டோ
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷின் அணித் தலைவராக நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒலியலைத் தாக்குதல் நடத்தியது சீனா
அவுஸ்திரேலியாவின் கடற்படை வீரர்கள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல் நடத்தியதாக அவுஸ்திரேலியா குற்றஞ்சாட்டியுள்ளது.
அண்டார்டிகாவில் விமானம் தரையிறங்கி உலக சாதனை
அண்டார்டிகாவில் கண்டம் பனியால் சூழப்பட்டுள்ள மனிதர்கள் வசிக்க முடியாத நிலப்பரப்பாகும்.
வளையல்கள் அணிந்த பெண் மீது தாக்குதல்
திருமணமான பெண்ணொருவர் பல வர்ணங்களில் வளையல் அணிந்ததால், கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அந்த பெண்ணை கண்முடித்தனமாக தாக்கியுள்ள சம்பவமொன்று மும்பை-நவி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நுழைவுக் கட்டணம் ஒரு நாளைக்கு இல்லை
உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (19) இந்தியாவின் - மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைக் காண கட்டணம் வசூலிக்கப்படாது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சைலன்சரை அகற்றி ஒட்டினால் சிக்கல்
மோட்டார் வாகனங்களில் சைலன்சர் குழாயை அகற்றி பெரும் சப்தத்துடன் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோர், பொது மக்களின் உதவியுடன் கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதென காத்தான்குடி பொலிஸாருக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கும் இடையில் நடை பெற்ற சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“மின்சார உற்பத்தி சார்ந்த பிரச்சினை உக்கிரமாகும்”
அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்ட மூலம் பிற்போக்கு சட்ட மூலமாகும். இச்சட்டமூலம் மின்சார உற்பத்தி சார்ந்த பிரச்சினை மேலும் உக்கிரமாக்கும். இது மற்றுமோர் அரசியல் நியமனம் சர்ந்த விடயமும் விளைவுகளை அடையாத விவகாரமுமாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
களனிதிஸ்ஸவுக்கு 6 வாரங்களுக்கு பூட்டு
பராமரிப்பு பணிகள் காரணமாக 6 வாரங்களுக்கு மின்னுற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் பிரிவு, வெள்ளிக்கிழமை (17) தெரிவித்துள்ளது. அதனால் தேசிய மின் கட்டமைப்புக்கு 165 மெகாவோட் மின் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பள உயர்வு விவகாரம் ஆராய்கிறது இ.தொ.கா
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழு திங்கட்கிழமை (20), சந்தித்து ஆராயவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
"பூகோள அரசியல் குழப்பங்களுக்கு இடம் கொடுக்கப் போவதில்லை"
பூகோள அரசியல் குழப்பங்களுக்கு ஒருபோதும் நாங்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
சீன ஜனாதிபதியின் தூதுக்குழு வந்தது
சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கின் விசேட தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சீனி, சம்பாவுக்கு கடும் தட்டுப்பாடு
அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியால் தற்போது சந்தையில் சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரவேண்டுமாயின் “சுட்டு வீழ்த்தவும்”
இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்தினால் தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
பரதக்கலைக்கு எதிராக கூறியுள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.