CATEGORIES
Kategorier
மாவீரர்களுக்கு கதவடைத்து கௌரவம்
தமிழீழத் தேசிய மாவீரர் தினமான, நவம்பர் 27ஆம் திகதி மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இன முரண்பாடுகளை புரிந்து கொள்ள "தமிழ்நாட்டு அரசுகள் தவறி விட்டன"
இலங்கை உள்நாட்டுப் போரின்போது இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு அரசுகள் இன முரண்பாடுகளை புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று புகழ்பெற்ற நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.
சுழிபுரத்தைச் சேர்ந்த எழுவர் தனுஷ்கோடியில் தஞ்சம்
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறுவர் பாராமரிப்பு நிலையத்தில் 20 சிறுமிகள் துஷ்பிரயோகம்
இரத்தினபுரி மாவட்டத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் கட்டுப்பாட்டு அதிகாரியான பெண்ணின் கணவரால் அந்த இல்லத்தில் இருக்கும் 20 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
“ஐ.சி.சி தலைவரை 225 பேரும் சந்திக்க வாய்ப்பளிக்கவும்”
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.சி.சி தலைவரை ஜனாதிபதி சந்திக்கவுள்ள நிலையில், அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து கிரிக்கெட் சபையில் உள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் விளக்கமளிக்க 225 எம்.பி.க்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரினார்.
"ரணில் ஒரு பாம்பு எனக் கூறவில்லை"
\"ரணில் ஒரு பாம்பு, அந்த பாம்பு எப்போது தீண்டும் என்று குறிப்பிட முடியாது\" என நான் எங்கும் யாரிடமும் கூறவில்லை என முன்னாள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பொதுஜன பெரமுன எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
“என்னைக் கொன்றால் ரணிலும் சாகலவும் பொறுப்பு”
நடு வீதியில் வைத்து நான் கொல்லப்படலாம். அது இன்றோ நாளையோ அல்லது நாளை மறுநாளோ என்று எனக்குத் தெரியவில்லை.
ரொசான் அவுட்
அரசியலமைப்பில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், விளையாட்டுத்துறை, நீர்ப்பாசன மற்றும் இளைஞர் விவகார அமைச்சுப் பொறுப்பில் இருந்து ரொஷான் ரணசிங்கவை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திங்கட்கிழமை (27) மாலை நீக்கியுள்ளார்.
டிசெம்பர் 4 முதல் பாதணி வவுச்சர்
பாதணி வவுச்சர் விநியோகம் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) தெரிவித்தார்.
24 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
அகிலத்திருநாயகிக்கு மாவட்ட செயலகத்தால் கௌரவிப்பு
தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
போர் விமானத்தில் பறந்த மோடி
இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (25) பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
இங்கிலாந்து பிறீமியர் லீக் நியூகாசிலிடம் தோற்ற செல்சி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கி டையிலான பிறீமியர் லீக் தொடரில், நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை நிறுவ நடவடிக்கை
இலங்கையில் இரண்டு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜப்பானிய மானிய நன்கொடைகளை வழங்கி வைப்பதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
கஞ்சாவுடன் இளைஞன் கைது
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சனிக்கிழமை (25) இளைஞனொருவரிடமிருந்து 1கிலோ 570 கிராம் கஞ்சா பொதியை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காளி கோவிலில் திருட்டு
புத்தளம்-மதுரங்குளி, வேலாசிய வீதியில் ஜோசப் வத்தை பகுதியில் அமைந்துள்ள காளி கோவிலில் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"மெய்யான தலைவர்களாம்”
மெய்யான தலைவர்கள் என அரசுடன் இணைந்து செயற்பட்ட சிலரது புகைப்படங்கள் தாங்கிய பாதாதைகள் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
80 பேரடங்கிய ய குழுவுடன் பறக்கிறார் ஜனாதிபதி
டுபாயில் நடைபெறவுள்ள உலக காலநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் வெளிநாடு செல்லவுள்ளார் என அறியமுடிகின்றது.
தேசிக்காய் எகிறியது
தேசிக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வுக்கு-கேக் வெட்டினர்
யாழ்ப்பாணம்-வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.
மனித புதைகுழி அகழ்வு: இன்று மீண்டும் ஆரம்பம்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 2ஆம் கட்டத்தின் ஆறாம் நாள் அகழ்வில் 5 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
கணினி அமைப்பு பலமுறை செயலிழந்து விடுவதாக தகவல்
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் முதல் செயலிழந்ததை அடுத்து வெளிநாடுகளுக்குச் செல்ல வந்த ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோபமடைந்தனர்.
வெல்லம்பிட்டி சுற்றிவளைப்பில்-4 பெண்களுடன் 40 பேர் கைது
வெல்லம்பிட்டி-சிங்கபுர பிரதேசத்தில் ஞாயிறுக்கிழமை (26) அதிகாலை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 04 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலை இலக்கு வைத்து புதிய கூட்டணி
எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னிலை வகித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக இளையோர் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி
சாய்ந்தமருது பிரதேசத்தில் இளையோரை கிரிக்கெட் துறையில் மேம்படுத்தும் வகையில், சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் கிரிக்கெட் பயிற்சிப் போட்டியொன்றினை கழக வீரர்களுக்கு இடையில் ஒழுங்கு செய்திருந்தது.
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் முடிவுக்கு வந்த றோஹித்தின் பயணம்?
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மாவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“வெள்ளிக்கு முன் விடமாட்டோம்"
பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா
சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
மாணவி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா நபருக்கு விளக்கமறியல்
அக்கரைப்பற்று - பதூர்நகர் பிரதேசத்தில் 324 கிராம் மற்றும் 94 மில்லிகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.