CATEGORIES
Kategorier
மண்சரிவில் நால்வர் மாயம்
பலாங்கொடை-கவரங்கேன, வெஹிந்தென்ன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் பொலிஸார், இராணுவத்தினர், பொது மக்கள் ஆகியோர் ஈடுப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“புரட்சிக்கு ஒன்றிணைக"
2024 பட்ஜெட்டை சமர்ப்பித்து ஜனாதிபதி அழைத்தார்
அயோத்தி தீபோற்சவம்: கின்னஸ் சாதனை படைத்தது
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22 இலட்சத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் தீபோற்சவ நிகழ்வை முன்னிட்டு ஒளிர்விக்கப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் போப், குறோலி
மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் துடுப்பாட்டவீரர் ஒலி போப், பந்துவீச்சாளர்கள் ஜோன் டேர்னர், ஜொஷ் டொங்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இக்குழாமில் இடம்பெறுவது இதுவே முதற் தடவையாகும்.
ஜெனரலுக்கு 5 ஆண்டு சிறை
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மியான்மர் நாட்டின் முன்னாள் இராணுவ ஜெனரலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்
காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஐஸ்லாந்தல் அவசா நிலை
தொடர்ச்சியான நில அதிர்வுகளின் விளைவாக எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக, ஐஸ்லாந்து நாட்டில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ணத்துக்கு இங்கிலாந்து தகுதி
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
சுகாதார மேலாண்மையில் நோயாளி பராமரிப்பு செயல்திறனை மேம்படுத்துகிறது HHIMS
கடந்த காலங்களில், நோயாளிகளின் தரவை நிர்வகித்தல், தகவல்களை ஒழுங்கமைத்தல் மற்றும் தரவைப் பாதுகாப்பாக வைத்திருப்பது போன்றவற்றில் சுகாதாரத் துறையில் பல சிக்கல்கள் இருந்தன.
ஸ்ரீதாமோதர பூஜை
கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தில் ஸ்ரீதாமோதர பூஜையை முன்னிட்டு தினமும் மாலை பகவான் ஸ்ரீதாமோதரருக்கு நெய் விளக்கேற்றும் வைபவம் நடைபெற்று வருகிறது.
சா/த பெறுபேறுகள் 2 வாரங்களில் வெளிவரும்
2022 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வழக்குகளில் தொடர்புடையவர் புழல் சிறையில் தடுத்து வைப்பு
இலங்கையின் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் அகதிகள் போர்வையில் தமிழகத்தில் பதுங்கி இருப்பதற்காக படகு மூலம் தனுஷ்கோடி வந்திறங்கிய நிலையில் கைது செய்த மரைன் பொலிஸார் அவரை சென்னை புழல் சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.
பொத்துவில் கன்கர கிராம மக்களுக்கு தீபாவளி பரிசு ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்
கடந்த 33வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த பொத்துவில் கனகர் கிராம மக்களில் முதற்கட்டமாக 73 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
“கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இல்லை”
இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும், நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வதாகவும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
பாகிஸ்தான் மிளகாயில் விஷ ரசாயனம் உள்ளது
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில், விஷ ரசாயனமான அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்து உள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
றைகம தோட்டத்தில் தீபாவளி கொண்டாடினார் செந்தில் தொண்டமான்
களுத்துறை மாவட்டத்தில் உள்ள றைகம பெருந்தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் இன ரீதியாக தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இவர்களின் இப்பிரச்சினை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் தலையீட்டால் இப்பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வந்ததது.
கீரி சம்பாவில் மாஃபியா
உள்ளூர் சந்தையில் தற்போது கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதானது, அரிசி மாஃபியாவால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று பட்ஜெட்
2024ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் (வரவு-செலவுத் திட்டம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், பாராளுமன்றத்தில் இன்று (13) நண்பகல் 12 மணிக்கு சமர்ப்பிக்கப்படும்.
"கொடுங்கோலனுக்கு எதிராக பிரியர்கள் ஒன்றுபடனும்”
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நீதியரசருக்கு எதிராக குற்றப்பிரேரணை
கொண்டுவருமாறு கிரியெல்ல எம்.பி வலியுறுத்தல்
தடை விதித்தால் 225 பேரும் பொறுப்பு
கிரிக்கெட்சபை தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடை விதித்தால் அதற்கு இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நுவரெலியாவின் பெருமையை காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்
விலைமதிப்பற்ற வளமாக கருதப்படும் நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வகையில் ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா பிரதான நகரில் தபால் நிலையதுக்கு முன்பாக வியாழக்கிழமை (09) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜே.வி.பிக்கு ‘ஷம்மி' பணம்
கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மித சில்வா ஜே.வி.பி நிதிக்கு பணம் கொடுத்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
‘சம்மி'களை அவசரம் பலப்படுத்தும்
இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டில் பாரிய மக்கள் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
மூன்றும் இணைந்தால் வீட்டுக்கு அனுப்பலாம்
கிரிக்கெட் சபை பதவி விலகவேண்டும் என நாங்கள் சபையில் பிரேரணை நிறைவேற்றினாலும் அவர்கள் பதவி விலகப்போவதில்லை.
இந்திய மீனவர்கள் 38 பேரும் விடுவிப்பு
தலைமன்னார் கடற்பரப்பில் சந்தர்ப்பங்களில் வைத்து இரு வேறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 38 பேரும் மன்னார் நீதிமன்றத்தினால் வியாழக்கிழமை (9) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
“சாம்பலுக்கு அடியில் தீப்பொறி வெடித்தது”
பாராளுமன்றத்தில் வெடித்தது சட்டத்துறையில் தீப்பொறியாக எரியும் ஒன்றாகும் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.
“குதிரை ஓடிய பின்னர் லாயத்தை அடைப்பதா?"
இலங்கை வங்கியின் சுதந்திர சதுக்க கிளையில் உள்ள கிரிக்கெட் நிறுவனத்துக்கு சொந்தமான வைப்பில் இருந்து 2 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள கிரிக்கெட்சபையின் மோசடித் தரப்பினர் முயற்சிக்கிறார்கள். இதனை உடனடியாக தடுக்க வேண்டும். இவர்களுக்கு எதிராக உடனடி வெளிநாட்டு பயணத்தடை விதிக்கவேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தினார்.
“குடும்ப ஆட்சி குடும்ப நிர்வாகம்"
நாட்டில் குடும்ப ஆட்சி நடப்பதை போன்று கிரிக்கெட் சபையிலும் குடும்ப நிர்வாகம் இடம்பெறுகிறது. சுமதிபால, தர்மதாச, ரணதுங்க குடும்பங்களே கிரிக்கெட் சபையை நிர்வகித்ததாகத் தெரிவித்த ஜே.வி.பி.
“மௌனிகள் கொதிக்கின்றனர்"
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதிபதி ஒருவரை நான் குற்றஞ்சுமத்திய போது, நீதிபதிகள் பற்றிப் பேச முடியாதெனக் கொதித்தெழுந்த இந்த சபையிலுள்ள எம்.பி.க்கள், கிரிக்கெட் சபை மோசடி தொடர்பில் நீதியரசர்களின் பெயர் குறிப்பிட்டுக் குற்றம்சாட்டும்போது மட்டும் மௌனம் காப்பது ஏன்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.