CATEGORIES
Kategorier
“ஹட்டனுக்கு தேடி வராதீர்கள்"
ஹட்டன் நகரில் வாகனங்கள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஹட்டன் பிரதேச சமூக வலைத்தள பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமி வன்புணர்வு: 66 வயதானவருக்கு கடூழிய சிறை
சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
பெண்ணுடன் பறக்க முயன்ற கணவன் கைது
மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றுமொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற கணவன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால், செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
62 பிரிவுகளில் மண்சரிவு அபாயம்
நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களில் உள்ள 62 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஷாப்டர் படுகொலை: நீதிமன்றம் தீர்ப்பு
ஜனசக்தி குழும வர்த்தகத்தின் பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான தினேஷ் ஷாப்டர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு மேலதிக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய, புதன்கிழமை (01) வழங்கிவைத்தார்.
'நாம் 200' நிகழ்வு இன்று கௌரவ அதிதி சீதாராமன்
இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் 'நாம் 200' நிகழ்வு, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில், இன்று (02) வியாழக்கிழமை, பிற்பகல் 4 மணிக்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
பிக்குணி உட்பட அறுவர் கைது
சட்டவிரோத மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக திவுலப்பிட்டிய நகர எல்லையில் இருந்து புதன்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்ட பேரணியை தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், பிக்குணி உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
கேள்வி அதிகரிப்பு
நாட்டில் செவ்விளநீருக்கான கேள்வி சர்வதேச சந்தையில் வேகமாக அதிகரித்து வருவதுடன், 2023ஆம் ஆண்டில் செவ்விளநீரின் ஏற்றுமதி 117 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொது போக்குவரத்தில் ‘CCTV' பொருத்தவும்
பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் CCTV கெமரா அமைப்புகளை பொருத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 50 பேர் மரணம்
காசா எல்லைப் பகுதியின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: நிர்வாணமாக ஓடிய சிறுவன்
குருநாகல்-கொஹிலகெதர பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுவனால், 15 வயதுடைய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (31) பதிவாகியுள்ளது.
பேருந்து கவிழ்ந்து விபத்து
பருத்தித்துறை-கொடிகாமம் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை (31) கவிழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கான் அகதிகளை வெளியேற்றும் பாக்.
பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 17 இலட்சம் ஆப்கான் அகதிகளை, ஆப்கானிஸ்தானுக்கு கட்டாயமாக அனுப்பும் பணிகளை பாகிஸ்தான் அரசு நவம்பர் முதலாம் திகதியன்று தொடங்க இருக்கிறது.
மத்திய அரசு முடிவுக்கு சோனியா கண்டனம்
இஸ்ரேல் இராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே போர் நீடித்து வரும் சூழலில், உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்து, ஐ.நா.பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கவில்லை.
சந்திரபாபு நாயுடுவுக்கு பிணை
ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
உலகக் கிண்ணம்: இலங்கையை வென்ற ஆப்கானிஸ்தான்
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், பூனேயில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை உடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
மன்னாரின் இயற்கை வளங்கள் விற்பனை: 70 ஆயிரம் மக்களின் நிலை என்ன?
மீனவ சமாசச் செயலாளர் கேள்வி
“பெருந்தோட்ட கர்ப்பிணிகளுக்கு மன உளைச்சல்"
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய, நடுத்தர நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங்காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியுள்ளது.
பாதி சிகரெட் புகைத்த பி.சி மயங்கினார்
பாதி சிகரெட்டை புகைத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தன்னிடமிருந்த பெறுமதியான பொருட்களை இழந்த சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிரான: தமிழர்களின் தலைகளை கொய்யும் வழக்கு ஒத்திவைப்பு
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு செவ்வாய்க்கிழமை (31) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
"பிற்போக்கான வரி அதிகரிப்பு”
வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே விலை திருத்தம் செய்ய முடியும்
குரங்குகளுக்கு 'லூப் கருத்தடை'
குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுப்பதற்காக 'லூப் கருத்தடை' எனப்படும் கருப்பையக சாதனத்தை (IUD) அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.
"பிரச்சினைகள் அப்படியே உள்ளன"
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனையும், பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். சுமந்திரனையும் கொழும்பில், செவ்வாய்க்கிழமை (31) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
டயானாவுக்கு எதிரான வழக்குத் தள்ளுபடி
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பெரும்பான்மை விருப்பத்துடன் நிராகரிக்கப்பட்டுள்ளது.
'ஐயா' தமிழரின் ஒர் அடையாளம்
சி.வி.தெரிவப்பு: அவரின் இடத்துக்கு எவருமில்லை என்கிறார்
ரயிலுடன் மோதி யானை மரணம்
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தபால் ரயிலுடன் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது.
மரண தண்டனைக்குள்ளான இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை
கட்டார் நாட்டில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இந்தியக் கடற்படையில் ஓய்வுபெற்ற கேப்டன்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர்.
"இந்தியாவின் முடிவால் வெட்கப்படுகிறேன்"
உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இஸ்ரேலுக்கு ஹமாஸ் நிபந்தனை
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் கைது
பங்களாதேஷ் எதிர்க்கட்சியான தேசியக் கட்சியின் தலைவர் மிர்சா ஃபக்ருல் நாட்டை சீர்குலைக்க முயன்றதாக குற்றம் சாட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, பங்களாதேஷ் பிரதமர் ஷீக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது.