CATEGORIES
Kategorier
கிணற்றில் விழுந்து தாயும் குழந்தையும் பலி
வாரியபொல - வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதுக் குழந்தையும் குழந்தையின் தாயும் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் கட்டணத்தை எதிர்த்து பந்தமேந்தி ஆர்ப்பாட்டம்
மின் கட்டணத்தை அவ்வப்போது அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலவாக்கலை மற்றும் கினிகத்தேன ஆகிய நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
வவுனியா பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
வேலங்குளம் கிராம் சேவகர் பிரிவிற்குட்பட்ட 08 கிராமங்களைச் சேர்ந்த மக்களினால் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று திங்கட்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் ரகளை விசாரணை குழு புதன் கூடுகிறது
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்றதாக கூறப்படும்.
ஆளும் கட்சியின் பிழை ஜனாதிபதிக்கு புரிந்தது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியை வகிக்க முடியாது என ஜனாதிபதி தீர்மானித்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
கைவிடப்பட்டுள்ள காணிகளில் பயிர் செய்ய தேவையான சட்டங்களை திருத்தவும்
அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்துக்கு சம்பந்தமான, அரசுடைமையுள்ள கூட்டுத்தாபனங்கள், சபைகள், பணியகங்கள், அதிகாரசபைகள் உள்ளிட்ட நிறுவங்களின் இது வரை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படாத 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினை தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை வழங்கியது.
8 புத்தக அட்டைக்குள் கொக்கெய்ன் கடத்திய பெண்
ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைக்குள் மிகவும் சூட்சகமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திவந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
“பிரச்சினைகளை முடி மறைக்கும் முயற்சி”
அமைச்சரவை மாற்றமொன்று இடம்பெற்றுள்ளது.இதனால் பிரச்சினைகள் தீருமா? இல்லை, அமைச்சுக்களையும், அமைச்சர்களையும் மாற்றி பிரச்சினைகளை மூடி மறைக்க முற்படுகின்றனர் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
தவளை இரத்தத்தை உறிஞ்சும் நுளம்பு
இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையில் 'அதிருப்தி'; மாற்றம்
அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில், திங்கட்கிழமை (23) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
நாட்டை கட்டியெழுப்ப ஆக்கப்பூர்வமான புதிய தீர்வுகளே தேவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு
பிரச்சினைகளுக்குத் தீர்வு மற்றும் காண்பதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் நாடு வங்குரோத்து நிலையில் உள்ள போது ஆக்கப்பூர்வமான புதிய தீர்வுகள் மூலம் ஒரு வெளிச்சக் கோட்டை உருவாக்க முடியும் என்றும்,நாடு வீழ்ச்சியடைந்துள்ள போதும் அதிலிருந்து சரியாக மீள எழு வேண்டும் என்றும் இதன் மூலம் புதிய பார்வையில் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்தியாவின் அன்பு பரிசு
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினர், பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
திறக்கப்பட்டது ரஃபா எல்லை
ஹமாஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்லும் ரஃபா பாதை மூடப்பட்டது.
சிற்றியிலிருந்து விலகும் கல்வின் பிலிப்ஸ்?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான கல்வின் பிலிப்ஸ்ஸை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் கழகத்தை விட்டு வெளியேற அக்கழகம் அனுமதிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஸ்பானிய லா லிகாத் தொடர்: சமநிலையில் றியல் மட்ரிட செவிய்யா போட்டி
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் வெள்ளிக்கிழமை (20) இரவு நடைபெற்ற றியல் மட்ரிட்டுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் செவிய்யா சமப்படுத்தியது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் ஆர்சனல்-செல்சி போட்டி எவெர்ற்றனை வென்ற லிவர்பூல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் வெள்ளிக்கிழமை (20) இரவு நடைபெற்ற ஆர்சனலுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியது.
‘ககனியானி' முதற்கட்ட சோதனை வெற்றி
அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
உலகக் கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் இங்கிலாந்து உடனான போட்டியில் தென்னாபிரிக்கா வென்றுள்ளது.
200 கிலோ கிராம் ஹெரோய்ன் சிக்கியது
4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய்னுடன் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்
அடுத்த ஆண்டு (2024) ஜனாதிபதித் தேர்தலையும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலையும், 2025ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சனிக்கிழமை (21) அறிவித்துள்ளார் .
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல்
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ள மின் பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
லியோ பார்க்கச் சென்றிருந்தோர் மீது வாள் வெட்டு: ஐவருக்கு காயம்
மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் வெள்ளிக்கிழமை (20) வாள் வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவும்
அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, முன்னர் கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி முதல் தினசரி சூத்திரம்
2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இலங்கையில் எரிபொருளுக்கான தினசரி விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
எம்.பிக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளாவிடின் சிக்கல் வரைவு வருகிறது
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஒழுங்காக நடந்து கொள்ளாவிடின் அதனைக் கையாள்வதற்கான அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காகத் திங்கட்கிழமை (23) சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒட்டோக்களை திருடி: உல்லாசமாக இருந்தவர் கைது
ஓட்டோக்களை திருடி, அதனை துண்டு துண்டுகளாக கழற்றி, குறைந்த விலையில் விற்று, கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டொட்டமுண்டுக்குச் செல்லவுள்ள சஞ்சோ?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டிலிருந்து அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் ஜடோன் சஞ்சோ வெளியேறுவதற்கான வழியொன்றை வழங்க ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
‘நூரி'யால் ராகுலுக்கு சிக்கல்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாயார் சோனியாவுக்கு அளித்த நாய்க்கு 'நூரி' என்று பெயர் வைத்ததை எதிர்த்து அவர் மீது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
காசாவுக்கு நிதியுதவி
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை (18) இஸ்ரேலுக்கு சென்றார்.
புற்று நோய் மருத்துவமனை மீது தாக்குதல்
காசா பகுதியில் உள்ள ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.