

Dinamani Cuddalore - March 15, 2025

Få ubegrenset med Magzter GOLD
Les Dinamani Cuddalore og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $14.99
1 År$149.99
$12/måned
Abonner kun på Dinamani Cuddalore
1 år $33.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
March 15, 2025
மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
3 mins
கடலில் மூழ்கி மாணவர் மரணம்
புதுச்சேரி அருகே உள்ள பனித்திட்டு கடல் முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
புதுச்சேரியில் வாழும் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையையொட்டி, வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி வெள்ளிக்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனர்.
1 min
மகளிர் தின விழா
கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனை கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த தான முகாம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது (படம்).
1 min
பாசிக் விவகாரம்; தனி அதிகாரி நியமனம்
புதுவை அரசின் சார்பு நிறுவனமான பாசிக் விவகாரத்தைத் தீர்க்கும் வகையில் அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
கல் மணிகள் குறித்த அகழாய்வு அறிவிப்புக்கு வரவேற்பு
கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தில் கல் மணிகள் குறித்து அகழாய்வு நடத்தப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தொல்லியல் ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
1 min
கடலூரில் காரல் மார்க்ஸ் நினைவு தினம்
காரல் மார்க்ஸின் 142-ஆவது நினைவு தினத்தையொட்டி, கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min
திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்
பண்ருட்டி நகர திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம், பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மயக்கவியல் மருத்துவ பயிற்சிப் பட்டறை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மயக்கவியல் மருத்துவம் குறித்த பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது.
1 min
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
காரைக்கால் மீனவர்கள் 13 பேர் விடுவிப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையிலிருந்த காரைக்கால் பகுதி மீனவர்கள் 13 பேர் விடுவிக்கப்பட்டதாக புதுவை மீன்வளத் துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
1 min
புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி
புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் வைத்திக்குப்பம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
முதல்வர் ரங்கசாமியிடம் பொதுநல அமைப்புகள் மனு
புதுச்சேரியில் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் முதல்வர் என்.ரங்கசாமியை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
1 min
ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்
நிலுவையில் உள்ள சரண் விடுப்புத் தொகை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்விப் பாடப்பிரிவுகள் தொடர்வது குறித்த அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.முத்துக்குமரன் (படம்) தெரிவித்தார்.
1 min
இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை
புதுச்சேரியில் வரதட்சணை வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞர் கைது
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் சரகத்தை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார்.
1 min
சத்துணவு ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர், கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கடலூர் துறைமுகத்தை இறக்குமதி, ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்தலாம்
சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளர்கள் கடலூர் துறைமுக வசதிகளை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
1 min
சாராய ஆலைகளுக்கு அனுமதி: மார்க்சிஸ்ட் கண்டனம்
புதுச்சேரியில் புதிதாக 6 சாராய ஆலைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
சர்வதேச மகளிர் தின விழா
சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில், பள்ளிப்படை ரோட்டரி அரங்கில் சர்வதேச மகளிர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
புது தில்லியில் நடைபெற்ற மாதிரி கண்டுபிடிப்பு படைப்புகளுக்காக முதல் பரிசு பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி குழுவினருக்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கடைகள் முன் பந்தல் அமைக்க அனுமதி கோரி நகராட்சி ஆணையரிடம் மனு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரப் பகுதியில் கடைகள் முன் பந்தல் அமைக்க அனுமதி வழங்கக் கோரி, நகராட்சி ஆணையரிடம் பண்ருட்டி தொழில் வர்த்தக சங்கத்தினர் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
1 min
மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்த டேங்கர் லாரி
கடலூர் முதுநகரில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது. 3 பேர் காயம் அடைந்தனர்.
1 min
பட்ஜெட்: அரசுப் பணியாளர்கள் ஏமாற்றம்
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை பொருத்தவரையில் அரசுப் பணியாளர்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
1 min
பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்
சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது.
1 min
புதுவையில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்க வேண்டும்
புதுவையில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
1 min
தமிழக பட்ஜெட் வெறும் கண்துடைப்பு
தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு என்று பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
மனித வளத்தை மேம்படுத்தும் பட்ஜெட்
'சாஸ்த்ரா' பல்கலை. துணைவேந்தர் வைத்தியசுப்பிரமணியம்
1 min
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைக்கேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
1 min
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
5 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமா?
நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் விளக்கம்
2 mins
ரூ. 2,200 கோடியில் கிராமச் சாலை மேம்பாடு
முதல்வரின் கிராமத் தாலுகா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26-இல் 6,100 கி.மீ. நீளமுள்ள கிராமச் சாலைகள் ரூ. 2,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்
சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சென்னை, கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல், கணித ஆராய்ச்சி மையங்கள்
சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள் ரூ.100 கோடியில் ஏற்படுத்தப்படவுள்ளன.
1 min
விக்கிரவாண்டி உள்பட 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்
தமிழகத்தில் விக்கிரவாண்டி, குன்னூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களில் சிட்கோ தொழிற்பேட்டை
தமிழகத்தில் விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களில் சிட்கோ புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாக மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 min
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்
கர்ப்புற பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சர்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்
உலக அளவிலான க்யூ.எஸ். தர வரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம்
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
1 min
அரசியல்... அன்றும் இன்றும்!
இன்றைய அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. மக்களிடம் போவதும் இல்லை; மக்களை மதிப்பதும் இல்லை; தேடிவரும் மக்களைச் சந்திப்பதும் இல்லை. மக்களின் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும்.
2 mins
குடிக்க உகந்த குடிநீர்!
இந்திய நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பச் சந்தையில் 37 சதவீதத்தை மறு ஊடுகை (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது என்று புணேவில் செயல்படும் சந்தையியல் நுண்ணறிவு நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி மார்க்கெட் ரிசர்ச் நிறுவனத்தின் 2017-ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
2 mins
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வர் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தார்.
1 min
அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு புதிய சலுகை ஏன்?
அரசு ஊழியர்களுக்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மூலம் அவர்களின் வாரிசுகள் பலன் பெற நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1 min
இருமொழிக் கொள்கை: முதல்வருக்கு ஆதரவாக தமிழக மக்கள்
இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தமிழக மக்கள் உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
எண்ம வர்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு
எண்ம வர்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.26,678 கோடி: புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அறிவிப்பு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,678 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சென்னையின் குடிநீர் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்
சென்னையின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடிக்க 2 மணி நேரம் 38 நிமிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கொண்டார்.
1 min
10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை
தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு: ஓபிஎஸ் உள்பட மூவர் தனியாக வெளியேறினர்
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைப் புறக்கணித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
1 min
நாடு முழுவதும் ஹோலி உற்சாக கொண்டாட்டம்
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
1 min
சீனாவில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது.
1 min
மேற்கு வங்கம்: ரிக்ஷாக்கள் மீது கார் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு
8 பேர் காயம்
1 min
ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவருக்கு வீட்டுக் காவல்
ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1 min
குஜராத்: 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து
3 பேர் உயிரிழப்பு
1 min
ஆயுத தொழிற்சாலை அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு
மகாராஷ்டிரத்தில் மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலையில் கடந்த ஜனவரியில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 அதிகாரிகள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
பஞ்சாப் சிவசேனை தலைவர் சுட்டுக் கொலை
குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்
1 min
துஷார் காந்தியை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்
கேரளத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி மறுத்துவிட்ட நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
1 min
பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அனுப்பிவைப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவலை அனுப்பியதாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை பணியாளர் கைது செய்யப்பட்டார்.
1 min
நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
பெங்களூரு, மார்ச் 14: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.
1 min
கேரளம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
கேரள மாநிலம், களமசேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் விடுதி அறைகளில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
கோப்பையை வெல்வது யார்?
இறுதியில் இன்று மும்பை - டெல்லி மோதல்
1 min
பாரா தடகளம்: இந்தியா முதலிடம்
தில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ-யில், இந்தியா முதலிடம் பிடித்து நிறைவு செய்தது. பதக்கப்பட்டியலில் 45 தங்கம், 40 வெள்ளி, 49 வெண்கலம் என 134 பதக்கங்கள் வென்றது.
1 min
டெல்லி கேப்டன் அக்ஸர் படேல்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் (31) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
மகளிர் டி20: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாத ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்
'மருத்துவ ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
1 min
சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை
சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
1 min
கியா கார்கள் விற்பனை 24% உயர்வு
கார் தயாரிப்பாளரான 'கியா இந்தியா' நிறுவனத்தின் பிப்ரவரி மாத மொத்த விற்பனை 23.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ஜனவரியில் ஏற்றம் கண்ட தொழிலக உற்பத்தி
இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஜனவரியில் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்த மாதத்தில் உற்பத்தித் துறை எழுச்சி பெற்றதால் ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தி ஏற்றம் கண்டுள்ளது.
1 min
ரூ.4,000 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி முடிவு செய்தது.
1 min
கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு: அரசியல் அனுபவமே இல்லாதவர்
கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மார்க் கார்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
1 min
உக்ரைன் போருக்குத் தீர்வு காண ‘உன்னதப் பணி’
மோடி, டிரம்ப்புக்கு புதின் நன்றி
1 min
சிரியாவின் புதிய இடைக்கால அரசியல் சாசனம் வெளியீடு
சிரியாவில் அல்-அஸாத் ஆட்சியைக் கவிழ்த்த கிளர்ச்சிப் படை தலைவர் அகமது அல்-ஷரா தலைமையிலான அரசு, புதிய தற்காலிக அரசியல் சாசனத்தை வெளியிட்டுள்ளது.
1 min
அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்
அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்கவும், இரட்டைக் குடியுரிமை பெற்ற நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைக்கவும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
1 min
சூலூர், பல்லடத்தில் செமிகண்டக்டர் தொழில் பூங்காக்கள்
மேற்கு மண்டலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கோவை - சூலூர் பகுதியிலும், பல்லடம் பகுதியிலும் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் விண்ணப்பிக்க விரைவில் உரிய வாய்ப்பு
மகளிர் உரிமைத் தொகை பெறாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
1 min
மாசி மக தீர்த்தவாரி: கிள்ளையில் பூவராகசாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த கிள்ளையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிள்ளைக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமியை இஸ்லாமியர்கள் வரவேற்று பட்டு சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு
அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் ரூ.1000
உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Utgiver: Express Network Private Limited
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Kanseller når som helst [ Ingen binding ]
Kun digitalt