CATEGORIES
Kategorier
வெசாக் வாரம் ஆரம்பமானது
செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமான தேசிய வெசாக் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் இந்த வருடத்துக்கான அரச வெசாக் விழாவை மாத்தளை தர்மராஜ பிரிவெனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
5 விபத்துக்களில் ஐவர் மாணம்
நாடளாவிய ரீதியில், ஐந்து வெவ்வேறு பிரதேசங்களில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற வீதி விபத்துக்களில், பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய துக்க தினம் நேற்று அனுஷ்டிப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் அகால மரணம் காரணமாக இலங்கையில், செவ்வாய்க்கிழமை (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
டயனாவுக்குப் பிணை
போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டது.
களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்
களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் திங்கட்கிழமை (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசுருமுனி தஸ்மின் மதுவந்த சில்வா (வயது 38) உயிரிழந்துள்ளதுடன் அவரது 7 வயது மகள் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
ISIS சந்தேகநபர்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு
ISIS அமைப்பின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் நால்வர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில், இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குழு மோதலில் குடும்பஸ்தர் பலி
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமோதரை, நெதர்வில் தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே திங்கட்கிழமை (20) இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் இரு குடும்பங்களுக்கு இடையே நீண்ட காலமாக | பகை இருந்து வந்துள்ளது.
உலகத் தேயிலை தினத்தன்று பேரணி
உலகத் தேயிலை தினமான செவ்வாய்க்கிழமை (21) இரத்தினபுரி நகரில் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
"அவதானமாக செயற்படவும்”
நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அழைமழை, கடுங்காற்று, மண்சரிவு, மரங்கள் முறிந்துவிழுதல், இடிமின்னல் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென, வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களின் கண்ணீருடன் ஜனாஸாக்கள் நல்லடக்கம்
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் ஜனாஸாக்கள், வடமேற்கு ஈரானில் நல்லடக்கம் செய்யப்பட்டன என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்' சம்பியனான இலங்கையணியின் மன்னார் வீரர்கள் கௌரவிப்பு
சர்வதேச 'ரோலர் நெட்டெட் போல்' விளையாட்டின் 2024ஆம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்குபற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது
உத்தரப் பிரதேசத்தில் பரூக்காபாத் எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) 8 முறை வாக்களித்துவிட்டு அதை காணொளியாகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்: இடைக்கால ஜனாதிபதி மொக்பர்
ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டின் முதல் துணை ஜனாதிபதியான முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரானிய வெளிவிவகார அமைச்சர், தப்ரிஸ் மஸ்ஜிதின் இமாம் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பலியான துயரச் செய்திக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களின் அகால மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
“நினைவேந்தலுக்கு பொதுகொள்கை வேண்டும்”
புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல் வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணமும், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழரசுக்கட்சிக்கு புதிய நிர்வாகம்
தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்தி கட்சியின் தெரிவுகளை மீளவும் நடத்துவதற்கு கட்சியின் மத்தியகுழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
ஒரு மீனின் விலை ஒரு கோடி ரூபாய்
காரைதீவில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது நீல கிளவல்லா (தூணா இனத்தைச் சேர்ந்த மீன் திங்கட்கிழமை (20) பிடிபட்டுள்ளது.
'ஹெலி' விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு
வவெளீயுறவுத்துறை அமைச்சர் உட்பட 9 பேர் பல்
பிறந்த நாளன்றே பலியான யாழ்.யுவதி
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதியதில், புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) யுவதி திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
"ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்”
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் சேவைகளைக் கருதி, வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சியை பரிமாறிய நால்வரும் விடுவிப்பு
சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்துக்கு திங்கட்கிழமை (20) அழைத்து வரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சகோதரியின் பெயரில் டென்மார்க் சென்று திரும்பிய சகோதரி கைது
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாகப் பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையான சகோதரியை யாழ்ப்பாண பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்துள்ளனர்.
29,4479 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக 8,284 குடும்பங்களைச் சேர்ந்த 29,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் துசித வைத்தியரத்ன தெரிவித்தார்.
எலோன் மஸ்க் இலங்கை வருகிறார்
தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டதாகவும் இவ்வாண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது
இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு, இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளது.
வெளியேற்றப்பட்டது சென்னை சுப்பர் கிங்ஸ்
தகுதிகாண் போட்டிகளில் றோயல் சலஞ்சர்ஸ், பெங்களூரு
கொத்தடுவயில் ஈரநில பூங்கா
கொத்தடுவ புதிய ஈரநில பூங்கா அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மஹா கும்பாபிஷேகம் ...
நுவரெலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (19) சிறப்பாக நடைபெற்றது. சீதையம்மனின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவுக்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து சீதை அம்மனுக்கான சீர்வரிசை பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
உ/த மாணவர்களுக்கு மற்றுமொரு புலமைப்பரிசில்
2022/2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து 2024/2025 உயர்தரப் பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு 5000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 5 அல்லது 12
அரசியலமைப்புச் சட்டம் மற்றும் 1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின்படி ஜனாதிபதித் தேர்தல்